siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 27 பிப்ரவரி, 2019

மட்டக்களப்பில் ஒரே நாளில் அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலங்கள்

மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து,27,02,2019, இன்று 3 சடலங்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.ஆயித்தியமலைப்  – மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில்,  கிணறொன்றில் இருந்து 49 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் தனது  சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்த ஒருவர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ஏறாவூர் – வந்தாறுமூலை பிரதான வீதியை அண்மித்த கடையொன்றிலிருந்து 25 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலம்...

நெல்லைச் சேமிப்பதற்கு யாழ் -கூட்டுறவுச் சங்கங்கங்களும் இணக்கம்

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் நெல்லை கொள்­வ­னவு செய்து சேமிப்­ப­தற்கு கூட்­டு­றவுச் சங்­கங்­க­ளும் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­தாக மாவட்ட செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நெல் விளைச்­சல் கடந்த  காலத்தை விட இந்த வரு­டம் சிறப்­பா­ன­தாக அமைந்­துள்­ளது. கடந்த வரு­டங்­க­ளில் கால நிலை மாற்­றத்­தால்  நெல் அழி­வுக்கு உள்­ளா­னது. இத­னால் விளைச்­சல் குறை­வ­டைந்து....

மருதனார்மடத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய பயணி

யாழ் மருதனார்மடத்தில் சற்று முன் நடந்த கோர விபத்தில் உந்துருளியில் சென்ற நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;யாழ் மருதனார்மடம் புகையிரத நிலையத்திற்கு சமீபமாக சற்று முன்னர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் பின்னால் வந்த வடி ரக வாகனம் மோதித்தள்ளியுள்ளது. இதனால், படுகாயங்களுடன் நிலத்தில் வீழ்ந்த நபரை அருகிலுள்ளோர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த...

திங்கள், 25 பிப்ரவரி, 2019

பல்கலை அனுமதிக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

018 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களில் 76,596 மாணவர்களிடமிருந்து இவ்வருட பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அந்த விண்ணப்பங்களை பரிசீலனைசெய்து தெரிவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதாக, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார  தெரிவித்தார். கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 177,907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றிருக்கிறார்கள் என்பது...

சனி, 23 பிப்ரவரி, 2019

முழு அடைப்­புப் போராட்­டம் வடக்கில்,25,02,19 திங்களன்று-

வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் நாளை­ம­று­தி­னம் திங்­கட்­கி­ழமை காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளின் ஏற்­பாட்­டில் முழு அடைப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னால் வடக்கு முற்­றாக முடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்­தப் போராட்­டத்­துக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஜன­நா­யக...

யாழ் புத்தூர் பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள்  நடைபெற்றன. இரவு நிகழ்வில்  காத்தவராயன் சிந்து நடைக்கூத்து இடம்பெற்றது. மேலும் நாடக கலைஞர் கதிரமலை ,ஆலய பூசகர்  தேவன் ஐயா இருவருக்கும் வில்லிசைக்கலைஞர் க.சத்தியதாஸ் அவர்களும்  ஓய்வுநிலை அதிபர் அ.அருந்தவநேசன் அவர்களும் பொன்னாடை  போர்த்தி கௌரவித்தனர் ...

தர்மபுரம் சம்புக் குளத்தில்- ஆணின் சடலம்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள தர்மபுரம் 2 ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. 8 மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்த இளம் குடும்பத்தரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம்...

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நாட்டில் .இருந்து இந்தியாவின் பிரதான துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை

இந்தியாவின் பிரதான துறைமுகங்களுக்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னாா் மாவட்டங்களில் இருந்து பயணிகள் மற்றும் வா்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதனடிப்படையில், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதுடன் தலைமன்னார் கப்பல்துறையையும் புனரமைக்கும் திட்டங்களை இலங்கை துறைமுக அதிகார சபை உருவாக்கி வருகிறது. காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் போது அதன் இறங்குதுறை...

வியாழன், 21 பிப்ரவரி, 2019

நீங்கள் வீட்டில் இருந்தபடி மில்க் ரொபி செய்யும் முறை

தே.பொருட்கள்:- ரின் மில்க் – 1 ரின் சீனி – 2 சுண்டு (தலை தட்டி) வனிலா – 1 மே.க ஏலப்பொடி – 1 தே.க (மட்டமாக) தண்ணீர் – 1/2 தம்ளர் / 10 மே.க மாஜரின் – 1 மே.க (நிரப்பி) மாஜரின் – 1 தே.க (நிரப்பி) தட்டுக்கு பூசுவதற்கு. செய்முறை:- * தாச்சியில் ரின் மில்க் , தண்ணீர் , சீனி மூன்றையும் போட்டு கரண்டியால் நன்கு சேர்த்துக் கலந்து கொள்ளவும். * இந்தக் கலவை உள்ள தாச்சியை ஒரே அளவாக எரியும் அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காதவாறு கிளறிக் காய்ச்சவும். *...

புதன், 20 பிப்ரவரி, 2019

யாழ்.நீதிமன்று எச்சரிக்கை பொது வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும்-

பொது இடத்தில் - வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும். இறுதி  ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொழுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொழுத்துவதை ஏற்க முடியாது" இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இருபாளைச் சந்திப்பகுதியில் பிரதான வீதியூடாகப் பயணித்த ஹஏஸ் வான் ஒன்றின் கண்ணாடிப் பகுதியில் வெடி வந்து வீழ்ந்த்தால், கண்ணாடி முற்றாகச் சேதமடைந்த்தது. அந்தப்...

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

சிராட்டிகுளம் பகுதியில்மகன் இறந்த சோகத்தில் உயிர் விட்ட தாய்

மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம்  இடம்பெறற்றுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியை சேர்ந்த கடந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனான யோகராசா துசியந்தன் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.  இந்த...

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞரொருவர் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ்.மானிப்பாயிலுள்ள ஆலயமொன்றில் நேற்றைய தினம்(18) இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவத்தில் யாழ்.ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிவசுந்தரம் சிவலோகம்(வயது-33) என்பவரே உயிரிழந்தவராவார். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

திகிலிவெட்டையில் பெண்ணின் சடலத்தை பார்த்து போலீஸ் அதிகாரி மரணம்

மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டை பகுதியில் இடம் பெற்ற இரண்டு துயரச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழப்பு, குறித்த சம்பவத்தின் விசாரணைப் பதிவுக்குச் சென்ற ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த உயிரிழந்த பெண் சடலத்தை திறந்து பார்த்தவுடன் ஒரு வித நடுக்கம் ஏற்றபட்ட பின்னர் உடனடியாக சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வழியில்  உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் முக்கிய விடயம் , அதாவது இறந்தவரின்...

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

சாவகச்சேரியில் தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு தண்டம்

தலை கவசம் அணியாமல் பாடசாலை மாணவா்களை மோட்டாா் சைக்கிள்களில் கொண்டு சென்றவா்களுக்கு எதிராக 1100 ரூபாய் சம்பவ இடத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி முன்னணிப் பாடசாலைகளின் முன்னால் நிற்கும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கண்காணிப்பில் போக்குவரத்துப் பொலிஸார், தலைக்கவசமின்றி மாணவர்களை உந்துருளியில் ஏற்றி வந்த 25க்கு மேற்பட்டவர்களுக்கு சம்பவ  இடத் தண்டம் அறவிட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு தலைக்கவசம் தேவையில்லை...

ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக வங்கிகளில் பேணி வந்தால் கட்டணம் அறவீடு

வர்த்தக வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை பேணுவோர் தங்களது கணக்கு மீதியினை ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக பேணி வந்தால் மாதாந்தம் 25 ரூபா கட்டணம் அறவீடு செய்யப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வங்கியொன்றின் சேமிப்புக் கணக்கில் ஆயிரம் ரூபாவிற்கு குறைந்தளவிலான பணம் பேணப்பட்டு வந்தால் மாதாந்தம் தலா 25 ரூபா என்ற அடிப்படையில் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு 40 மாதங்களில் கணக்கு மூடப்பட்டு விடும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாவிற்கும்...

சனி, 9 பிப்ரவரி, 2019

அமரர் துரைராஜா இரத்தினம் 3ம் ஆண்டு நினைவஞ்சலி 10.02.19

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016       திதி-- 10-02.2019 நீங்காத நினைவு. மூன்றாம் ஆண்டு 10-02.2019  அமரர்  துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை  பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட  அமரர்  துரைராஜா இரத்தினம் அவர்களின்  நீங்காத...

வியாழன், 7 பிப்ரவரி, 2019

ஊரிக்காட்டில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

இளைஞன் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதான குறிப்பிடப்படுகின்றது. இடைக்காடு அக்கரை பகுதியை சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.  ஊரிக்காடு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் குறித்த இளைஞன் வேலை செய்து வருவதாகவும் , நேற்றைய தினம் மாலை கோழிப்பண்ணை கழிவு தொட்டிக்குள் விழுத்து கிடந்ததை...

நுணாவில் 13 வயதுச் சிறுவனை தீண்டிய பாம்பு

யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுவனை, வரம்புப் புல்லுக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கில் நேற்று இடம்பெற்றுள்ளது. வயலில் நெல் அறுவடை செய்வதைப் பார்த்துக் கொண்டு வரம்பில் நின்ற சிறுவனே இந்த சம்பவத்திற்கு முகம்  கொடுத்துள்ளார். பாம்பினால் கடியுண்ட சிறுவன், சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

புதன், 6 பிப்ரவரி, 2019

பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் கடமை நேரத்தில் பாவிக்கத்தடை

கடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை. தமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன  தெரிவித்துள்ளார். மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். மக்கள் செலுத்துகின்ற வரிகளிலிருந்தே...

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

மரண அறிவித்தல்,அமரர் .தம்பு சந்திரசேகரராஜா 04-02.19

அன்னை மடியில் 09 ..02 .1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019 யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் . தம்பு சந்திரசேகரராஜா  அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன்...

திங்கள், 4 பிப்ரவரி, 2019

வடமராட்சியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இளைஞன் பலி

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.இச் சம்பவத்தில் அக்கரை, இடைக்காட்டைச் சேர்ந்த விஷ்ணுகுமார் தனுசன் (வயது-19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கோழிகள் கொண்டுவரும் பெட்டிகளை நீர்ப்பாச்சியினால் சுத்தம் செய்து கொண்டிருத்த போ‍தே குறித்த இளைஞன் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அதையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி  அவர்...

காதலியுடன் கும்மாளம் போட்ட காதலுனுக்கு நேர்ந்த கதி

மகளின் காதலன் எனக் கூறப்படும் பாடசாலை மாணவனின் காது மடலை கடித்து துண்டாக்கிய பெண்ணொருவர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில்.(02) நேற்று முன்தினம் ஆஜர்ப்படுத்தப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் தேசபந்து சூரியபட்டபெந்தி உத்தரவிட்டிருந்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் உயர் தர வகுப்பில் கல்வி கற்று வரும் மகளின் சமவயது மாணவன் கடந்த 1 ஆம் திகதி வீட்டிற்கு...

காவலர்களை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் அதிகாரி யாழில் மரணம்

யாழ் செய்திகள்:யாழ்ப்பாண சாவகச்சேரி காவல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை  இயற்கை எய்தியுள்ளார். கடந்த 1984 ஆம் அண்டு சாவகச்சேரி காவல் நிலையம் மீது ரெலோ அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்த போது அங்கு கடமையில் இருந்த 20 சிங்கள காவல்துறையினரை பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கிருந்து காட்டு பாதையூடாக அழைத்து சென்று...

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

அச்சுவேலி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடந்த துயரம்! அச்சத்தில் ஊர் மக்கள்

யாழ் செய்திகள்:அச்சுவேலி – பத்திரகாளி ஆலயத்தில் கொடியேற்றத்தை தடுத்தார் தர்மகத்தா -ஊர் மக்கள் கவலை, தீமை நடக்கலாம் என அச்சம்- அச்சுவேலி – பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர். மேற்படி...