யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நெல்லை கொள்வனவு செய்து சேமிப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல் விளைச்சல் கடந்த
காலத்தை விட இந்த வருடம் சிறப்பானதாக அமைந்துள்ளது.
கடந்த வருடங்களில் கால நிலை மாற்றத்தால்
நெல் அழிவுக்கு உள்ளானது. இதனால் விளைச்சல் குறைவடைந்து. இம் முறை சிறப்பாக அறுவடை நடைபெற்று வருகிறது. நெல் சந்தை படுத்தும் சபை இம்முறை ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.
ஒரு கிலோ சம்பா 41 ரூவாவுக்கும் ,ஒரு கிலோ நாடு 38 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகிறது.நெல் விளைச்சல் அதிகம் என்பதால் நெல்லை சேமித்து பருவ காலத்தில் அதனை விற்பனை செய்வதன் மூலம் விவசாயி களுக்கும் இலாபம் கிடைக்கும்.
ஆகவே கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நெல் சந்தை படுத்தும் சபை ஆகியன இணைந்து இந்த முறை 2 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்யத் தீர்மானித்து ள்ளன.
இதற்காக 80 மில்லியன் ரூபா நிதி அமைச்சிடம் கேட்கப்பட்டது.அதில் 50 மில்லியன் ரூபா நிதி முதற் கட்டமாக கிடைத்துள்ளது.கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்வனவு செய்து சேமிக்கப்படும்
நெல் சில மாதங்களின் பின்னர் அவை கேள்வி கோரல் மூலம் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கும் நெல்லின் உரிய விலை கிடைப்ப தோடு கூட்டுறவு சங்கங்களுக்கும் இலாபம் கிடைக்கும்.
இவ்வாறு சங்கங்கள் கொள்வனவு செய்யும் நடைமுறை 2015,16 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தது என்று
தெரிவிக்கப்பட்டது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக