siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 27 பிப்ரவரி, 2019

நெல்லைச் சேமிப்பதற்கு யாழ் -கூட்டுறவுச் சங்கங்கங்களும் இணக்கம்

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் நெல்லை கொள்­வ­னவு செய்து சேமிப்­ப­தற்கு கூட்­டு­றவுச் சங்­கங்­க­ளும் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­தாக மாவட்ட செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நெல் விளைச்­சல் கடந்த
 காலத்தை விட இந்த வரு­டம் சிறப்­பா­ன­தாக அமைந்­துள்­ளது.
கடந்த வரு­டங்­க­ளில் கால நிலை மாற்­றத்­தால்
 நெல் அழி­வுக்கு உள்­ளா­னது. இத­னால் விளைச்­சல் குறை­வ­டைந்து. இம் முறை சிறப்­பாக அறு­வடை நடை­பெற்று வரு­கி­றது. நெல் சந்தை படுத்­தும் சபை இம்­முறை ஆயி­ரம் மெற்­றிக் தொன் நெல்லை கொள்­வ­னவு செய்ய தீர்­மா­னித்­துள்­ளது.
ஒரு கிலோ சம்பா 41 ரூவா­வுக்­கும் ,ஒரு கிலோ நாடு 38 ரூபா­வுக்­கும் கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கி­றது.நெல் விளைச்­சல் அதி­கம் என்­ப­தால் நெல்லை சேமித்து பருவ காலத்­தில் அதனை விற்­பனை செய்­வ­தன் மூலம் விவ­சா­யி­ க­ளுக்­கும் இலா­பம் கிடைக்­கும்.
ஆகவே கூட்­டு­றவுச் சங்­கங்­கள் மற்­றும் நெல் சந்தை படுத்­தும் சபை ஆகி­யன இணைந்து இந்த முறை 2 ஆயி­ரம் மெற்­றிக் தொன் நெல்லை கொள்­வ­னவு செய்யத் தீர்­மா­னித்­து ள்­ளன.
இதற்­காக 80 மில்­லி­யன் ரூபா நிதி அமைச்­சி­டம் கேட்­கப்­பட்­டது.அதில் 50 மில்­லி­யன் ரூபா நிதி முதற் கட்­ட­மாக கிடைத்­துள்­ளது.கூட்­டு­றவுச் சங்­கங்­கள் மூலம் கொள்­வ­னவு செய்து சேமிக்­கப்­ப­டும் 
நெல் சில மாதங்­க­ளின் பின்­னர் அவை கேள்வி கோரல் மூலம் விற்­பனை செய்­யப்­ப­டும். இதன் மூலம் விவ­சா­யி­க­ளுக்­கும் நெல்­லின் உரிய விலை கிடைப்­ப­ தோடு கூட்­டு­றவு சங்­கங்­க­ளுக்­கும் இலா­பம் கிடைக்­கும்.
இவ்­வாறு சங்­கங்­கள் கொள்­வ­னவு செய்­யும் நடை­முறை 2015,16 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் இருந்­தது என்று 
தெரி­விக்­கப்­பட்­டது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக