siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 27 பிப்ரவரி, 2019

மருதனார்மடத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய பயணி

யாழ் மருதனார்மடத்தில் சற்று முன் நடந்த கோர விபத்தில் உந்துருளியில் சென்ற நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;யாழ் மருதனார்மடம் புகையிரத நிலையத்திற்கு சமீபமாக சற்று முன்னர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் பின்னால் வந்த வடி ரக வாகனம் மோதித்தள்ளியுள்ளது.
இதனால், படுகாயங்களுடன் நிலத்தில் வீழ்ந்த நபரை அருகிலுள்ளோர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  யாழில் அண்மைக்காலமாக இவ்வாறான அநாவசியமான விபத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை கவலைக்குரியது. சாரதிகளின் அசண்டையீனமான சாரத்தியமே மேற்படி விபத்துச் சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றமையும் 
சுட்டிக்காட்டத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக