பிரித்தானியாவைப் பிறப்பிடமாக கொண்ட இலங்கையை சேர்ந்த இளைஞன் லண்டன் புகையிரத நிலையத்தில் கோரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.தஷான் டேனியல் என்ற இளைஞரே குத்திக் கொல்லப்பட்டவராவார்.
ஆர்சனல் காற்பந்து அணியின் ரசிகரான இவர் போட்டி ஒன்றை காண்பதற்கு லண்டன் ஹில்லிங்க்டன் ஊடாக சென்ற வேளை, கத்தியால்
குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.அங்கு பதியப்பட்ட, சிசிரிவி காட்சிகளின் படி இரு நபர்கள் இணைந்து இவரை குத்திக் கொன்றுள்ளதாக தெரிய வருகின்றது.இச்சம்பவம் தொடர்பில் இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கவலை
வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக