siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 நவம்பர், 2019

மரண அறிவித்தல் திரு கந்தையா கதிரிப்பிள்ளை 30 11.19

பிறப்பு -23 .02.1931-  இறப்பு  -30 .11 2019  யாழ். சிறுப்பிட்டி தெற்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிரிப்பிள்ளை அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை  அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சேதுப்பிள்ளை(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி  அவர்களின் அன்புக் கணவரும்,  கஜமுகதேவி,...

செவ்வாய், 26 நவம்பர், 2019

பிளாஸ்டிக் கப்பிற்கு பதிலாக இந்த கப்பை பயன்படுத்திவிட்டு இனி சாப்பிடலாம்

இனி காபி குடித்துவிட்டு கோப்பையை சாப்பிட்டு விடலாம்.. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக  வருகின்றது புது கப்…..உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என  தமிழக அரசு உத்தரவிட்டு அதன்படி ஜனவரி முதல் அமுல்படுத்தப்பட்டது. ஒருசில வாரங்கள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட இந்த உத்தரவு நாட்கள் செல்ல செல்ல மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிவிட்டது. இந்நிலையில்,...

பலத்த மழையினால் கிளிநொச்சியில்பெரு வெள்ளம் பொதுமக்கள் மாணவர்கள் பாதிப்பு

கிளிநொச்சியில் தொடரும் பலத்த மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ளன.கிளிநொச்சி இந்துக் கல்லூரி வளாகம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை உருத்திரபுரம் வீதியில் வெள்ளம் அதிகளவு பாய்கின்றது. இதனால் போக்குவரத்தும்  தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  கிளிநொச்சியில் பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புகிளிநொச்சியில் பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை...

திங்கள், 25 நவம்பர், 2019

நினைவஞ்சலி .2ம் ஆண்டு அமரர் இரத்தினராஜா தங்கம்மா .25.11.19

திதி -.25.11.201 யாழ்.தோப்பைப்பிறப்பிடமாகவும், சுவிஸ்  -கனடா - தோப் பு  அச்சுவேலியை  வசித்து வந்தஅமரர் இரத்தினராஜா தங்கம்மா  அவர்களின் 2ம் ஆண்டு  நினைவஞ்சலி.(திதி .25.11.2019. ,திங்கக்கிழமை   இன்று    அம்மா -அன்பின் உருவமாய் அரவணைப்பின் சிகரமாய் வாழ்ந்தவரே நீங்கள் எங்களை பிரிந்து ஆண்டு 0ஒன்று  சென்றாலும் உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும் எங்கள் மனதை விட்டு  அகலவில்லை காலங்கள்...

திருநீற்றுகேணியில் குளத்தில் மூழ்கி காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்பு.

மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் குளத்தில் மூழ்கி காணாமல் போன மூன்று இளைஞர்கள், சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள்  குளத்திற்குள் சேற்றிற்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.சுரேஷ்குமார் தர்சன் (20), யதுர்சன் (19), கே.திவாகரன் 19 ஆகியோரே உயிரிழந்தனர். இதில், தர்சன் கடந்த ஆறு மாதங்களின் முன்னரே திருமணம் முடித்திருந்தார் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

ஞாயிறு, 17 நவம்பர், 2019

அம்பந்தோட்டையில் மோதலை தடுத்த இளைஞன் பலி

அம்பந்தோட்டை – பதகிரிய பகுதியில் வீடொன்றின் 16.11.2019. சனிக்கிழமை இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். பதகிரிய பகுதி வீடொன்றின் நபர்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்ற இளைஞரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ்  ஊடகப்பிரிவு தெரிவித்தது. இதன்போது படுகாயமடைந்த இளைஞன் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். பதகிரிய பகுதியைச்...

புதன், 13 நவம்பர், 2019

ரயில் விபத்து.யாழ்.நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு மரணம்

யாழ்ப்பாணத்தில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் இந்து மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள அன்னசத்திர வீதியில் புகையிரதக் கடவை ஊடாக, கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம்.13.11.2019.  இன்று முற்பகல் 9 மணியளவில்  இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (31) என்று ஒரு பிள்ளையின்...

செவ்வாய், 12 நவம்பர், 2019

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.31 வயதான இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (11.11.19.திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெராட் மேரி அகிலா என்ற 9 மாத குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த  பெண்ணின் கணவர் நேற்று வெளி மாவட்டம் ஒன்றுக்கு...

முதலாவதாக யாழிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் பயணம் செய்த வடக்கு வி.ஐ.பி

யாழ் பலாலி  சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவதாக பயணிக்கும் விமானத்தில் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனும் பயணம் மேற்கொண்டார்.அண்மையில் திறந்து  வைக்கப்பட்ட யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்றுதான் முதலாவது  பயணிகள் விமான சேவையை அலையன்ஸ் எயார் நிறுவனம் ஆரம்பித்தது.11.11.2019..இன்று காலை யாழிலிருந்து கிளம்பிய AL 9 102 விமானத்தில் பயணம் செய்தவர்களுடன், வடக்கு ஆளுனரும்...

திங்கள், 11 நவம்பர், 2019

கிளிநொச்சியில் பாம்புக் கடிக்கு இலக்காகி பாலகன் பரிதாபமாக மரணம்

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான கிராம அலுவலரின் ஒரேயொரு மகனின் மரணம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (10.11.2019) இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .நேற்று இரவு குறித்த சிறுவன் படுக்கை அறைக்கு சென்று கட்டிலில்  உறங்கிய சிறிது நேரத்துக்குப் பின்னர், வீட்டுக்குள் இருந்து வெளியேறிய கண்டங்கருவளை இனத்தைச்சேர்ந்த பாம்பு ஒன்றை தந்தை அடித்துக் கொன்றுள்ளார். இதன் பின்னர்...

கனகராயன்குளத்தில் யாழ் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா வடக்கு கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் .10.11.2019.நேற்றுக் காலை முதல் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் பல்வேறு தேடுதலின் பின்னர் 11.11.2019.இன்று முற்பகல் குறித்த மாணவன்  காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.(10.11.).நேற்று கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த  யாழ் பல்கலைக்கழக மாணவன் தடி...

வெள்ளி, 8 நவம்பர், 2019

இலுப்பையடிப் பகுதியில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி

 வவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில்,  திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாயார் சிறு காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்...

கணவனும், மனைவியும் நள்ளிரவில் கொடூரக் வெட்டிப் படுகொலை

கணவனும் மனைவியும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் மாத்தளை கனேமுல்ல, ஹொரகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது; குடும்ப பிரச்சினை காரணமாக  (06.11.2019) அன்று  இரவு 10.15 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்தச் சம்பவத்தில் 72 வயதுடைய நபரும் அவருடைய 73 வயதுடைய  மனைவியுமே...

செவ்வாய், 5 நவம்பர், 2019

வீட்டில் மின்சாரம் துண்டிக்க சென்ற ஊழியர்களிற்கு நேர்ந்த கதி

வவுனியாவில் மின்சாரக் கட்டணம் செலுத்தாத வீடொன்றில் மின்துண்டிப்பு செய்ய மின்சாரசபை ஊழியர்களை இளைஞர் குழுவொன்று தாக்கியதில், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆச்சிபுரம் கிராமத்தில் மின்சார கண்டனத்தினை பல மாதங்களாக  செலுத்தாது அதிகளவு நிதி தேக்கமுள்ளவர்களது மின் இணைப்புக்களை துண்டிக்கும் பணிக்காக மின்சார சபை ஊழியர்கள்  சென்றிருந்தபோது, அக்கிராமத்தில் வசிக்கும் சில இளைஞர்கள்...

சனி, 2 நவம்பர், 2019

யாழ் மல்லாகத்தில் கடையை உடைத்து பெறுமதி மிக்க உபகரணங்கள் திருட்டு

யாழ். மல்லாகத்தில் அமைந்துள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலி திருத்தகத்தின் உரிமையாளர் மற்றும் மகன் மதிய உணவு உண்பதற்காகத் தமது வீட்டிற்குச் சென்ற சமயம் பார்த்து துவிச்சக்கர வண்டியில் வந்த கொள்ளையன் மேற்படி வர்த்தக நிலையத்தின் பின்கதவால் உள்நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான  வானொலி, மற்றும் உதிரிப்பாகங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.குறித்த சம்பவம்  நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2019) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.மேற்படி வர்த்தக...

இலங்கையில் செலுத்திய வாகனத்தில் மோதுண்டு இரு சிறுவர்கள் பலி

தென்னிலங்கையில் சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் வாகனத்தில் மோதுண்டு 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.வீரக்கெட்டிய, தங்காலை வீதியில் 15 வயதுடைய சிறுவன் செலுத்திய மோட்டார் வாகனம் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது .சிறுவர்கள் இருவரும் அவர்களது தாயாரும் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கி வீதியில் செல்லும் போது, பேருந்திற்கு பின்னால் வந்த மோட்டார் வாகனத்தில் மோதுண்டமையதால் இந்த  விபத்து நேர்ந்துள்ளது .விபத்தில் படுகாயமடைந்த தாய் மற்றும் பிள்ளைகள்...

வெள்ளி, 1 நவம்பர், 2019

தவறான செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களின் 162 முறைப்பாடுகள் பதிவு

சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு தொடர்பாக இதுவரையில் 162 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.per.itssl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய ஜனாதிபதி  வேட்பாளருக்கு சேறு பூசும் விதமான பதிவுகள் தொடர்பாக 66 முறைப்பாடுகளும், ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை பயன்படுத்தி போலியான  சமூக வலைத்தளங்களை உருவாக்கிய சம்பவங்கள் தொடர்பாக...

யாழ் சுன்னாகத்தில் தனிமையில் வசித்து வந்த தாய் சடலமாக மீட்பு

பெற்ற மகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் எந்தவித உதவியும் இன்றி தனிமையில் வசித்து வந்த தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் கடந்த 29.10.2019.ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும், யாழ். குப்பிளான் வடக்கு யாழ்  சுன்னாகம் பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பி தனபதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.இறந்த தாயின் மகள் பிரித்தானியாவில் வசித்து வரும் நிலையில் அவர் தாயுடன் கதைப்பதில்லை எனவும்,...