siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 28 ஆகஸ்ட், 2021

குடும்ப முரண்பாடு காரணமாக பாரிஸில் தந்தையால் மகன் படுகொலை

பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் குடும்ப முரண்பாடு காரணமாக தந்தை ஒருவரால் மகன் படுகொலை செய்தமை அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
பாரிஸின் புறநகர் பகுதியான செய்ன்-சன்-துனி மாவட்டத்திற்கு Villemomble பகுதியில் இந்த சம்பவம் கடந்த 20ஆம் திகதி
 இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அங்குள்ள வீடு ஒன்றில் கெவின் என அழைக்கப்படும் ஏழு வயது சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சோபா இருக்கையில் சடலமாக கிடந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
தலையில் சுடப்பட்டு சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 34 வயதுடைய சிறுவனின் தாயார் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில், சிறுவனின் சடலத்தை கண்டு அதிர்ச்சியில் பொலிஸாரை அழைத்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக