siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 16 ஜூன், 2022

உந்துருளியில் சென்ற இரு பெண்களை யாழில் மோதித் தள்ளிய வாகனம்

யாழ். நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்களை மோதித் தள்ளிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. இதில், அந்தப் பெண்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
16-06-2022.இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் யாழ். நகரின் மார்ட்டின் வீதிக்கு அண்மையாக உள்ள பிரதான வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயங்களுக்கு இலக்கான இரு பெண்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மோதிய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அதன் இலக்கத் தகடுகளில் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிளில் சிக்கியுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக