siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 11 நவம்பர், 2023

யாழ் நல்லூர் கந்தன் ஆலய வீதிகளை விரத உற்சவத்தை முன்னிட்டு மூட நடவடிக்கை

நடை பெறவுள்ள  கந்த சஷ்டி விரத உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் எதிர்வரும்.14-11-2023. செவ்வாய்க்கிழமை முதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் 
எதிர்வரும் .14-11-2023.செவ்வாய்க்கிழமை  முதல்.17-11-2023. வெள்ளிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான
 ஒரு மணிநேரமும், 18-11-2023.சனிக்கிழமை  சூர சம்ஹார நிகழ்வன்று
 பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மறுநாள்.19-11-2012.
 ஞாயிற்றுக்கிழமை  மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் வீதி தடை போடப்பட்டு, அவ்வீதியின் ஊடான போக்குவரத்து
 தடை செய்யப்பட்டிருக்கும்.
எனவே, அந்த வீதியால் வாகனங்களில் பயணிப்போர், போக்குவரத்து தடை விதிக்கப்படும் நேரங்களில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக