siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 20 நவம்பர், 2023

சமூக நலக்குடியிருப்பில் வசிக்கும் நபர் பிரான்சில் கத்திக்குத்தினால் மரணம்

அரசால் வழங்கப்படும் சமூகநல குடியிருப்பு (résidence sociale) வீட்டில் வசிக்கும் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.  Torcy (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் 19-11-2023. ஞாயிற்றுக்கிழமை அன்று
 இடம்பெற்றுள்ளது.
 அங்குள்ள சமூகநல குடியிருப்பு வீடொன்றில் வசிக்கும் 28 வயதுடைய ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.
 கொல்லப்பட்டவர் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலாளி சம்பவ சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. தாக்குதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.என்பதும் குறிப்பிடத்தக்கது  





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக