யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின்
சடலம் 06-11-2023.இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா வயது 61 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த 3 நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது
இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக