siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 9 நவம்பர், 2023

ஒன்பது வருடங்களின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் சந்தேக நபருக்கு மரண தண்டனை

பெண்​ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 
மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திப் படுகொலை 
செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டதாக பொலிஸ் தரப்பில்
 தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றிய படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் காதலனை
 கைது செய்தனர். 
அத்துடன் படுகொலைக்கு பயன்படுத்திய கத்தி, அந்த பெண், இறுதியாக வைத்திருந்த தொலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது..


0 கருத்துகள்:

கருத்துரையிடுக