siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

வரும் வருடங்களில் இலங்கையில் பாரிய மின்சார பற்றாக்குறை ஏற்படும்?

இலங்கையில் அடுத்த வரும் வருடங்களில் பாரிய மின்சார பற்றாக்குறை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மைகாலமாக நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்ரேந்து பகுதிகள் வற்றியுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை நீடிக்குமாயின் மின்விநியோகம் சீராக வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையம் உயர்ந்தபட்ச வினைத்திறனுடன் செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் நாட்டுக்கு தேவையான மொத்த மின்சார தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் 50 சதவீதமான மின்சாரம் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் மழை கிடைக்காவிட்டாலும் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும். ஆனால் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மழை கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நாடு மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என சபை 
சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் திட்டமிட்ட அடிப்படையில் உத்தேச புதிய மின்சார நிலையங்களை ஆரம்பிப்பது அவசியம் என சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய பாரிய எட்டு மின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிராந்திய மாநிலமான தமிழகத்தில் மின்சார விநியோகம் பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு சுழற்சி முறையிலான மின்சார தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் அப்படியானதொரு பாதகமான நிலை இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் பிறப்பிக்கப்படும் மேலதிக மின்சார அலகுகளை சார்க் பிராந்திய நாடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
தெற்காசிய நாடுகளில் மின்சார பாவனையில் தட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் நாடுகளுக்கு இந்த மேலதிக மின்சார அலகுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்னிமாக்கப்பட்டது.
முழு நாட்டுக்கும் ஒளி - இருளில் இருந்து விடுதலை என்ற தொனிப்பொருளின் கீழ் மின் உற்பத்தி நடவடிக்கைகள் உயர்ந்த மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 14 அக்டோபர், 2016

உலகத்தில் மிக பழமையான கார் யாழ்ப்பாணத்தில் ?

உலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வனிடமுள்ளது.
இக் கார் 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் 
இருந்திருந்தனர்.
அவ்வாறு ஓர் பண்ணையாளரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும் வேட்டைக்கு செல்லவும் இக் காரையே பயன்படுத்தியிருக்கிறார்.
குறித்த நபர் இத்தாலியில் இருந்து காரை இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்துவரும் கார் விற்பனை நிறுவனமொன்றின் ஊடாக இலங்கை பெறுமதி 3300 ரூபாவிற்கு 1931ஆம் ஆண்டு கொள்வனவு 
செய்துள்ளார்.
இதன் விலையை ஞாபகப்படுத்தும் வகையிலேயே இக் காரிற்கு இவர் 3300 என்ற இலக்கத் தகட்டையும் வைத்துள்ளார்.
இதன்பின்னர் அவர் இறந்துபோகவே யாழ்.குடாநாட்டில் பெயர்போன கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வன் (கப்பிரெக்ஸ் ரவி) என்பவருக்கு 1994 ஆம் ஆண்டு 2 அரை இலட்சத்திற்கு அக் கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன்பின்னர் இக் காரை இன்றுவரை அவரே வைத்துள்ளார். தற்போது இக்காரை வைத்துள்ள குமாரசாமி ரவிச்செல்வன் கருத்து தெரிவிக்கும் போது,
இது நீண்ட பராம்பரியம் மிக்க கார். இதனை பண்ணையர் வைத்திருக்கும் போது எங்களுக்கு பத்து வயதிருக்கும். பண்ணையர் யாழ்ப்பாணத்தில் தினகரன் விழா நடக்கும் போது அங்கு இடம்பெறும் கார் போட்டியில் இக் காரே முதலிடம் பெறும். அப்போதிருந்தே எனக்கு இந்த காரில் 
பிரியம் ஏற்பட்டது.
அதன்பின்னர் பண்ணையர் இறந்துபோக இக் காரை நான் ஆசைப்பட்ட பிரகாரமே எனக்கு விற்றுவிட்டனர். அதன்பின்னர் இக் காரை என்னிடம் கொழும்பில் இருந்து கூட வந்து 45இலட்சம் வரை விலைக்கு கேட்டிருந்தனர். ஆனால் நான் விற்காமல் வைத்துள்ளேன்.
இக் காரில் முன்னால் உள்ள விளக்கின் மேல் சிவப்பு கல்லொன்று உள்ளது. இது கார் ஒடும்போது விளக்கு ஒளிர்கின்றதா? இல்லையா? என்பது சாரதி ஆசனத்தில் இருந்தவாறே இதனூடாக பார்க்க
 முடியும்.
தற்போது இக் காருக்கு தேவையான பாகங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு இலண்டனில் இருந்து வாங்கி வந்து வைத்துள்ளேன் என்றார்.
அத்துடன் இலங்கையில் “A” எழுத்திலுள்ள ஒரேயொரு காரும் இதுவேயாகும். இக் காரை இறக்குமதி செய்த நிறுவனம் தற்போதும் கொழும்பில் அதே முகவரியில் உள்ளது அவர்கள் இறக்குமதி செய்த காரும் என்னிடமுள்ளது என்றார்.
தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள இக் கார் இலங்கையிலே “A ” எழுத்திலுள்ள ஒரேயொரு கார் என நம்பப்படுகின்றது. குறித்த காரை நல்லூர் ஆலய நிர்வாகத்தினர், இராணுவத் தளபதிகள் உட்பட பலர் 45 இலட்சம் ரூபா வரையில் கேட்டும் அதனை விற்காமல் அதன் உரிமையாளர் 
வைத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 11 அக்டோபர், 2016

இளைஞர் ஒருவர் மின்தாக்கி பரிதாபமாக பலி!


மட்டக்களப்பு கூலாவடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மின் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
குறித்த இளைஞன் நேற்று தொழில் நிமிர்த்தம் இலங்கை தொலைத் தொடர்ப்பு சேவையின் மின் கம்பம் ஒன்றை நாடுகின்ற போது 33 ஆயிரம் சத்தி உடைய மின் வலு தாக்கி உயிர் இழந்துள்ளார் 
மட்டக்களப்பு கூ லாவடியை சேர்ந்த  28  வயதுடைய இமானுவேல் பார்த்திபன் என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார் .
இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை  மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெளிநாட்டு நிறுவனங்கள் மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்ய ஆர்வம்!

உள்நாட்டிலேயே மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்ய 28 வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் இவ்வாறு உற்பத்தி செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் 28 நாடுகள் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன.
இந்த 28 வெளிநாட்டு நிறுவனங்களில் ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் இரண்டு நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கையில் மருந்துப்பொருள் உற்பத்தி செய்வது குறித்த உடன்படிக்கையில் 
கைச்சாத்திட்டுள்ளது.
இன்னும் ஓராண்டு காலப்பகுதியின் பின்னர் இந்த நிறுவனங்கள் மேற்கத்தைய மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக 10 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளது.
இலங்கையில் மருந்துப் பொருள் உற்பத்தி செய்ய உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்காலத்தில் உற்பத்திசாலைகளை 
அமைக்க உள்ளன.
உற்பத்தி செய்யப்படும் மருந்துப்பொருட்கள் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளதுடன், எஞ்சிய மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 9 அக்டோபர், 2016

இரண்டு இலங்கை பெண்கள் உயிரை பலியெடுத்த 'செல்பி'!!!

ஓமான்  மான்சலாலாஹ் பிரதேசத்தில் குளமொன்றிற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயன்ற இரு இலங்கை பெண்கள் அதில் வீழந்து உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த  இரு பெண்களும், குறித்த குளத்திற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயற்சித்துள்ளனர்
இதன்போது , ஒரு பெண் குளத்தில் விழுந்துள்ள நிலையில் , அவர் மற்றைய பெண்ணின் கையை பிடித்துள்ளதால் அவரும் குளத்தில் ஆழமான பகுதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பெண்களை காப்பாற்றி வைத்தியசாலையிற்கு கொண்டுசென்றுள்ளனர்.
எனினும் , குறித்த பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>



வெள்ளி, 7 அக்டோபர், 2016

பஸ் லொறியுடன் மோதியதால் பாரிய விபத்து யாழில் !

யாழில்   நேற்று  அதிகாலை 4.30 மணியளவில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வெங்கடேஸ்வரா தனியார் பஸ் லொறியுடன்  மோதியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

வீதியில் மாடுகள் திடீரென குறுக்கிட் டதால் மாடுகளை மோதிவிடக்கூடாது என்ற சாரதியின் நோக்கம் லொறியுடன் மோதியது என மக்கள் தெரிவிக்கின்றனர் காயப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பியதாகவும் செய்திகள்
 தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 4 அக்டோபர், 2016

திடீர் இடமாற்றம் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் இருவரும் முறைகேடாக நடந்து கொண்டமையை அடுத்து தண்டனை இடமாற்றம் 
வழங்கப்பட்டுள்ள து.
இது பற்றி மேலும் தெரியவருவதாது,
கடந்த வாரம் தமது விடுமுறையை முன்னிட்டு யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் இருவரும் கதிர்காமம் சென்றிருந்தனர்.
கதிர்காமத்தில் பொலிஸாருக்கென அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் தங்கியிருந்த சமயம் இவர்கள் மது போத்தல்களுடன், இளம் பெண்களுடன் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனை அடுத்து குறித்த பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து தண்டனை இடமாற்றம் 
வழங்கப்பட்டுள்ளது.
உபபொலிஸ் பரிசோதகர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கும் , யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மட்டக்களப்பிற்கும் இன்று முதல் இடமாற்றம் பெற்றுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மின்சார கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.


விவசாய நடவடிக்கைகளுக்கான செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது.
இதேவேளை விவசாய நடவடிக்கைகளுக்காக புதிய மின் மீட்டர் பொருத்தப்படும் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 29 செப்டம்பர், 2016

நாட்டில் முகநூல் தொடர்பில்அதிக முறைப்பாடுகள்?

2016 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றில் போலியான கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக
 கூறப்பட்டுள்ளது.
மேலும், முகநூல் கணக்குகளினுள் அத்துமீறி பிரவேசித்து தகவல்களை மாற்றியமைத்தமை தொடர்பிலும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இணையதளத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு மேலும் 
தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கணவரை அறையில் பூட்டிவிட்டு தோழியுடன் புதுப்பெண் ஓட்டம்!

வங்காளதேசம் தலைநகர் டாக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் சன்னால்லா. இவரது மகள் ஜன்னத். இளம்பெண்ணான இவருக்கு பேஸ்புக் மூலம் 2012-ம் ஆண்டு இந்தூரைச் சேர்ந்த நைனா என்ற இளம்பெண்ணுடன் 
நட்பு ஏற்பட்டது.
இருவரும் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். அவர்களது நட்பு பிரிக்க முடியாத அளவுக்கு சென்றது. இந்த நிலையில் 2013-ம் ஆண்டு ஜன்னத் இந்தூர் வந்தார். அங்கு தோழி நைனா வீட்டில் தங்கி இருந்தவாறு உள்ளூர் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தார்.
பேஸ்புக் தோழிகளுக்கு இடையேயான நெருங்கிய
 நட்பை பெற்றோர் 
அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில் நைனாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்தனர். இதற்கு நைனா எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியில் திருமணம் ஆன பின்னும் தோழி ஜன்னத்துடன்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்துக்கு சம்மதித்தாள்.
மகேஷ் என்பவருக்கும் நைனாவுக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு மகேஷ்- நைனா தேனிலவுக்காக கோவா புறப்பட்டனர். மணமகள் நைனா தன்னுடன் பேஸ்புக் தோழி ஜன்னத்தையும் கோவாவுக்கு அழைத்து சென்றார். அதன் பிறகுதான் விபரீதம் ஏற்பட்டது.
அங்கு தோழியைப் பிரிந்து கணவருடன் செல்ல மணமகள் நைனா மறுத்து விட்டாள். இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது இரு தோழிகளும் சேர்ந்து புதுமாப்பிள்ளை மகேஷை ஒரு அறையில் போட்டு பூட்டி விட்டு இருவரும் கோவாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதை அறிந்த மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். ஒரு வழியாக அறையில் இருந்து வெளியேறி ஊர் வந்து சேர்ந்தார். நைனாவிடம் வந்து ஜன்னத்துடனான தொடர்பை கைவிடுமாறு மகேஷ் கூறினார். இதை ஏற்க மறுத்ததுடன் தோழியை பிரிக்க பார்க்கிறாயா என்று கணவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் கணவர் மீது போலீசிலும் 
புகார் செய்தார்.
இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, நைனாவும், ஜன்னத்தும் கணவன்- மனைவி போல் கருதிக் கொண்டு அன்பு செலுத்துகிறார்கள். ஜன்னத் தனது போனில் நைனாவின் எண்ணை மனைவி என்று குறிப்பிட்டு பதிவு செய்து வைத்துள்ளார். பிரிக்க முடியாத அளவுக்கு நட்பு உருவாகி விட்டது. பெற்றோர் இதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள்
 என்றார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 26 செப்டம்பர், 2016

மிக விரைவில் கீரிமலையில் 50 வீடுகளுக்கு மின்விநியோகம்!

வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள காணியற்றவர்களுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டம் கீரிமலையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில்  அவற்றில்  50 வீடுகளுக்கு மின்சார விநியோகம் விரைவில் வழ ங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால்  இவ்வீடுகள் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.இதில் 140 வீடுகளின்  பணி ஏறத்தாழ பூர்த்தியா கும் நிலையை எட்டியுள்ளது. 
இதில் 50 வீடுகளுக்கு விரைவில் மின்சார விநியோகம் வழங்கப்படும் என்பதையே மின்சார சபை உறுதிப்படுத்தி இருக்கின்றது. 
மின்சாரக் கம்பங்களை நடும் பணி ஆரம்பித்து விட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் குறிக்கப்பட்ட 50 வீடுகளுக்கும் மின்சார விநியோகம் ஆரம்பித்து விடும் என்று தெரிவிக்கப்படுகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

சிவகேசவன் எழுதிய மூன்றாவது நூல்..வெளிவருகிறது

சேமமடுவூர் சிவகேசவன் மூன்றாவது நூல்.....
"வவுனியாக் குளப் பண்பாட்டுச் சூழலில் கிராமிய வழிபாடு" என்ற எனது ஆய்வு நூலின் அச்சுப் பணிகள் நிறைவடைந்துள்ளன..  
இந்த நுால்:வெளியீட்டு விழாவின்றி வெளிவர இருக்கின்றது அத்தோடு
இந்த நூலை நூலகங்களிற்கு அன்பளிப்புச் செய்ய எதிர்பார்க்கிறார் சேமமடுவூர் சிவகேசவன்
. வவுனியா மாவட்டத்தில் கிராமிய வழிபாடுகளைத் தொடரும் ஆலயங்களில் என்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு நூல் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

இனி O/L சித்தியடையாத மாணவர்களுக்கும் A/L படிக்கலாம்


2018ம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கும் உயர்தரத்தில் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர்
 தெரிவித்துள்ளார். 
இதன்படி 2017ம் ஆண்டு தொடக்கம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாணவர்கள் பெறும் பெறுபேறுகளுக்கு அமைய விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம் மற்றும் கலைப் பிரிவுகளுக்கு அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 20 செப்டம்பர், 2016

கொழும்.- யாழ்ப்பாணம் செல்பவர்கள் வாசிக்க வேண்டியது!

ஹயஸ், டொல்பின் ரக வாகனங்களில் கொழும் – யாழ்ப்பாணம் செல்பவர்கள் கட்டாயம் வாசிக்கவும் கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு, Dolphins hires Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள்
நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள்
1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும் போது இதனால் வரும் பின் விளைவுகளை கொஞ்சமும் நீங்கள்
 சிந்திப்பதில்லை.
2. வாகனத்தை hire பண்ணும் போது வாகன சாரதி யார் என்று பாருங்கள் அத்துடன் இரவு நேர பயணம் என்றால் ஏற்கனவே அவர் இந்த ரூட் இல் இரவில் ஓடிய அனுபவம் உள்ளவரா ? அத்துடன் தொடர்ச்சியாக ஓடுபவரா என்று பாருங்கள். ஏனெனில் அனுபவம் உள்ளவர் தான் நித்திரை இல்லாமல் ஓடமுடியும். இதுதான் மிகமுக்கியமான ஒன்று.
வான் condition ஐ விட driver condition ஐ பார்க்க
 வேண்டும்
3. வாகனத்தை hire பண்ணுவார்கள் நீங்கள் அதனால் வாகன சாரதியை உங்கள் கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க வேண்டும். Driver சொல்லுவற்கெல்லாம் தலை ஆட்ட கூடாது.
உதாரணமாக அவர் அடிக்கடி phone கதைப்பவராக இருந்தால் நாம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்த வேண்டும்
4. Maximum speed என்ற ஒன்று உண்டு எனவே அதை தாண்டி போகிறாரா என்று பார்க்க வேண்டும்.
5. கூடுதலாக எந்த வான் சாரதியும் இரவு நேரத்தில் தான் பயணிக்க ஆசைப்படுவான் ஏனெனில் அவனுக்கு driving செய்வது மிகவும் இலகு. ஆனால் இங்கே தான் ஆபத்து இருக்கு, road இல் வாகன நெரிசல் இரவு நேரங்களில் மிகவும் குறைவு இதனால் இந்த சூழ்நிலை driver ஐ நித்திரை கொள்ள வழி வகுக்கும்.
6. பயணிக்கும் நேரம்.??? பொதுவாக கடுமையாக நித்திரை தூங்கும் நேரம் அதிகாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை எனவே எமது பயணத்தை மாலை ஒரு 5 மணி அளவில் தொடங்கினால் நாம் யாழ்ப்பாணத்தை அல்லது கொழும்பை அதிகாலை 2 மணியளவில் அல்லது அதற்க்கு முன்னர் அடையலாம்.
அல்லது அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் தொடங்கினால் பகல் 12 மணிக்கு முதல் எமது இடத்தை அடையலாம்.
அடிக்கடி தேநீர் அருந்த அல்லது wash room போக என வாகனத்தை நிறுத்தி செல்லுங்கள்.
இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு.
அத்துடன் திடீர் திடீர் என முளைக்கும் புதிய van உரிமையாளர்களும் van சாரதிகளும். வெளிநாட்டில் இருந்து காசு வருமானால் எல்லாரும் யோசிக்கும் இலகு தொழில் இந்த வான் ஓட்டம். இதைவிட இது இப்பொழுத வெளிநாட்டுகாரனின் investment ஆக்கிவிட்டுது.
எனவே கொஞ்சம் சிந்தித்து பயண
 முடிவுகளை எடுங்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






சனி, 17 செப்டம்பர், 2016

திருமலையில் இந்துக் கோயில்கடலின் கீழ் காணொளிஇணைப்பு

திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் பெற்ற திருத்தளங்களுள் ஒன்றான திருக்கோணோஸ்வரர் இந்து ஆலயம் உள்ளது இது இலங்கை வரலாற்றில் தமிழர் மற்றும் இந்துக்களின் பழமைக்கு ஆதாரமாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் 
கூறியுள்ளனர் இராவண வெட்டும் இன்று வரை பலரால் அவதானிக்கப் படுவதுடன் ஆழ்கடலில் புதிதாக படகுகளை எடுப்பவர்கள் வழிபட்டு தங்கள் தொழில்களைத் தொடங்குவதும் ஒரு மரபாக
 உள்ளது இந்தச் சூழலில் இப் பகுதியில் கடலின் கீழ் கோணேஸ்வரர் பழைமையான இந்துக் கோயிலும் இருப்பதாக சமகால ஆய்வுகளில் வெளியாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
                                            காணொளிஇணைப்பு 



செவ்வாய், 13 செப்டம்பர், 2016

நீதிமன்ற வளாகத்தில் வைத்து வெள்ளை வானில்மூவர் கடத்தல்!

யாழ். நீதிமன்ற வளாகத்தில் வைத்து மூவர் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகி,
பின்னர் வெளியில் வரும்போது வெள்ளை வானில் வந்தவர்கள், குறித்த மூவரையும் பிடித்து இழுத்து வானுக்குள் பலவந்தமாக தள்ளி , ஏற்றிக்கொண்டு சென்றமையால் அந்த வளாகத்தில் ஒருவகை பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு,  யாழ். நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.
குறித்த வழக்கு விசாரணையில் 74 பேர், நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அவ்வாறு ஆஜராகிவிட்டு, நீதிமன்றத்தை விட்டுவெளியேறும் போதே, வெள்ளை வானில் வந்தவர்கள், மூவரை மட்டும் பிடித்து இழுத்து வெள்ளை வானுக்குள் ஏற்றி, தலைமறைவாகியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மகளில் கல்லூரி யின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ் உடுவில் மகளில் கல்லூரி மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இடைநிறுத்தப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம்
 தெரிவித்துள்ளது.
கல்லூரியின் முன்னாள் அதிபர், புதிய அதிபர் மற்றும் மாணவர்களுடன் நீதிபதி யூட்சன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்லூரி அதிபராகப் பதவி வகித்து வந்த சிரானி மில்ஸின் எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அதிபரிடம் பொறுப்புக்களை கையளிப்பார் என மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ .யூட்சன் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 6 செப்டம்பர், 2016

விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய இரு பிள்ளைகள்

யாழ் பிரதான வீதியில் காருடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்தார். 
இன்று மதியம் 2.00 மணியளவில் யாழ் பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த காரும் 3ஆம் குறுக்கு வீதியில் இருந்து குருநகர் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. 
இவ் விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது , முச்சக்கரவண்டியும் சேதமடைந்ததுடன் ஓட்டுனருக்கும் 
காயம் ஏற்ப ட்டது. 
காரினுள் சிறு பிள்ளைகள் இருவர் பயணம் செய்திருந்தும் தெய்வாதீனமாக எவ்வித சேதமுமின்றி காப்பாற்றப்பட்டனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 5 செப்டம்பர், 2016

தலைநகர் கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள்!

கறுப்புப் பணத்தை முதலீடு செய்யக்கூடிய சிறந்த இடமாக தலைநகர் கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றான ஹொங்கொங் என்ட் ஷங்காய் பேன்கின் கோப்ரேசன் லிமிடட்(எச்.எஸ்.பி.சீ) நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
வெளியிடப்படாத சொத்துக்கள் மற்றும் கறுப்புப் பணத்தை முதலீடு செய்வோருக்கு ஓர் சிறந்த வாய்ப்பாக கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள் அமைந்துள்ளதாகத் 
தெரிவித்துள்ளது.
இதற்கு சமாந்திரமாக 2018ஆம் ஆண்டளவில் கொழும்பில் நிர்மானிக்கப்படும் அதி சொகுசு வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடையும் என பியோன்ட் மினி என்ற சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.
வருமான வழியை குறிப்பிட விரும்பாத தரப்புக்கள் காணி மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 31 ஆகஸ்ட், 2016

அச்சுவேலி தோப்பு மயானத்தில் தோண்டப்பட்ட பெண்ணின் சடலம்!!!

எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்’ என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
    யாழ் அச்சுவேலி மேற்கு தென்மூலை பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற சண்டையில், கீழே வீழ்ந்து தேவராஜா மனோரம்மா (வயது 41) என்ற 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வந்தார்.
உடல் பலவீனம் காரணமாக கீழே வீழ்ந்து அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டு, அந்தப் பெண்ணின் சடலம் மேற்படி மயானத்தில் அதே மாதம் 10 ஆம் திகதி புதைக்கப்பட்டது.
எனினும், தனது தாயாரை அவரது சகோதரர்கள் கொலை செய்தனர் என அந்தப் பெண்ணின் பிள்ளைகளில் ஒருவர், வெளிநாட்டில் (பிரான்ஸ்) இருந்து வந்த தந்தைக்கு கூறினார். இதனையடுத்து, ‘எனது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்’ என கணவர் பொன்னுத்துரை தேவராஜா, மல்லாகம் நீதிமன்றத்தில் சட்டத்தரணியூடாக வழக்குத் தாக்கல் 
செய்தார்.
இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் பிரகாரம் ‘சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற உத்தரவை நீதிவான் ரீ.கருணாகரன் பிறப்பித்தார்.
அதற்கிணங்க நீதிவான், மன்னார் சட்டவைத்தியதிகாரி டபிள்யூ ஆர்.ஈ.எஸ்.ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (30) சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தை பரிசோதனைக்கும், சான்றுப்பொருட்களை இரசாயனப் பகுப்பாய்வுக்கும் உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக எவரும் இதுவரையில் கைது செய்யப்பட்டிருக்கவில்லையென்பது 
சுட்டிக்காட்டத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 29 ஆகஸ்ட், 2016

புதன்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை (31) இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினம் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை
 வழங்கப்பட்டுள்ளது.
பதில் பாடசாலை 3 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் இதற்கமைய 3 ஆம் தவணைக்கான பாடசாலைகள் 1 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என வடமாகண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன்
 அறிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சந்திகளில் வீதி்ச்சமிக்ஞை விளக்குகள்: அமைக்கும் பணிகள் தீவிரம்

யாழ். குடாநாட்டின் ஆறு முக்கிய சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ். நகரை அண்டியுள்ள வேம்படிச் சந்தி, ஆரியகுளம் சந்தி, திருநெல்வேலிச் சந்தி, கோப்பாய்ச் சந்தி, சுன்னாகம் சந்தி, நெல்லியடிச் சந்தி ஆகிய ஆறு முக்கிய சந்திகளிலேயே இவ்வாறு வீதிச் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்படவுள்ளன.
திருநெல்வேலிச் சந்தி, கோப்பாய்ச் சந்தி ஆகிய இரு சந்திகளிலும் சமிக்ஞை விளக்குகளை பொருத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய நான்கு சந்திகளிலும் வீதிச் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் 
தெரிவித்துள்ளன.
இதேவேளை, அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டின் முக்கிய சந்திகளான மேற்படி சந்திகளில் போக்குவரத்து நெரிசல் வழமையை விட அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்த நிலையில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், வீதி விபத்துக்களையும் தவிர்க்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 27 ஆகஸ்ட், 2016

உலகின் பழைய 145 வயது நிரம்பிய முதியவர்!

இந்தோனேஷியாவில் வசித்து வரும் உலகின் பழைய மனிதர், தான் மரணிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும், மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என கூறுகிறார்
இந்தோனேஷியாவில் வசித்து வரும் Mbah Gotho, 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார். இவருக்கு தற்போது வயது 145.
இவர் இந்தோனேஷியாவின் பழைய மனிதர் மட்டுமின்றி, உலகின் பழைய மனிதர் என்ற வரிசையிலும் இடம்பிடித்துள்ளார்.
இவருக்கு 4 மனைவிகள், 10 குழந்தைகள் இருந்துள்ளனர், இவரின் மனைவியர் மற்றும் குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர், கடைசி மகன் 1988 ஆம் ஆண்டு உயிரிழந்தான்.
இந்நிலையில் இவர் தனது பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகளுடன் தனது வாழ்நாட்களை கழித்து வருகிறார்.
தனது வாழ்க்கை குறித்து இவர் கூறியதாவது, எனது பேரக்குழந்தைகள் யாரையும் சார்ந்து வாழ்பவர்கள் கிடையாது, எனவே அவர்கள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்
நான் தற்போது கூட மரணிப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் மரணம் என்னை நெருங்க மறுக்கிறது
24 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1992 ஆம் ஆண்டு எனக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டது.
ஆனால் காலங்கள் கடந்துவிட்டபோதிலும், கல்லறை அப்படியே இருக்கிறது, என்னால் தான் இறக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.
இவரது பேரக்குழந்தைகளில் ஒருவர் கூறியதாவது, எனது தாத்தா எப்போதும் ரேடியோ அருகில் அமர்ந்துகொண்டு நாட்டு நடப்புகளை பற்றி தெரிந்துகொள்வார்.
அவருக்கு கண்பார்வை சரியாக தெரியாத காரணத்தால், தொலைக்காட்சி பார்க்க இயலாது, அவரது விருப்பபடியே அவருக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டுள்ளது.
தனது வேலைகளை அவராகவே கவனித்துகொள்வார். கடந்த 3 மாதங்களால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் குளிப்பதற்கு கூட சிரமப்படுகிறார் என கூறியுள்ளார்.
145 வயது வரை வாழ்ந்துள்ளீர்களே, அதன் ரகசியம் என்ன என்று இந்த முதியவரிடம் கேட்டால், அதற்கு அவர் கூறிய ஒரு வார்த்தை பதில் "பொறுமை".
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

கள்ளக்காதலர்கள் சிறுப்பிட்டி பகுதியில் சுற்றி வளைத்து பிடிக்கபபடடனர்!


மினிவானுக்குள் ஏற்பட்ட கள்ளக்காதல் மோகத்தை நிறைவு செய்வதற்காக யாழ்   சிறுப்பிட்டிப்பகுதியில் உள்ள பாழடைந்த சனசமூகநிலையக் கட்டடத்தினுள் புகுந்து கொண்ட 33 வயதான குடும்பப் பெண் ஒருவரும் 21 வயதான இளைஞனும் அப்பகுதி இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் பிடிக்கப்பட்ட இளைஞன் நையப்புடைக்கப்பட்டதுடன் குடும்பப் பெண்ணும் கடுமையாக கவனிக்கப்பட்டு வீதியால் சென்று கொண்டிருந்த பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த குடும்பப் பெண் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இளைஞன் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
நகரப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் கடமையாற்றும் இளைஞனுக்கும் குறித்த குடும்பப் பெண்ணுக்கும் தனியார் பயணிகள் பேரூந்தில் கள்ளக்காதல் மலர்ந்துள்ளதாக விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>