siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 22 ஜூன், 2023

மரண அறிவித்தல் திருமதி பூதத்தம்பி கண்மணி 21.06.2022

தோற்றம்-28-08-1933 . மறைவு -21-06-2023
யாழ்.  புத்தூர் மேற்கு சிவன்கோவிலாடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  
கொண்ட அமரர் கொண்ட திருமதி பூதத்தம்பி கண்மணி அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் நல்லடக்கம் 23-06-2023.வெள்ளிக்கிழமை அன்று புத்தூர் மேற்கு கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி..
வீட்டுமுகவரி-
சிவன்கோவிலாடி புத்தூர் மேற்கு புத்தூர்   
தகவல்
குடும்பத்தினர்..




புதன், 21 ஜூன், 2023

இலங்கையில் விபத்துகளால் வருடாந்தம் 12000 பேர் உயிரிழப்பு

நாட்டில் பதிவாகும் பல்வேறு விபத்துகளினால் வருடாந்தம் 40 இலட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைவதாக சுகாதாரப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
பல்வேறு விபத்துகளால் வருடாந்தம் 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் ஆய்வு பிரிவின் விசேட வைத்திய 
நிபுணர் சமித சிறிதுங்க
அதேவேளை அவசர விபத்துகளினால் வருடாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 12000 இற்கும் அதிகமானதாக காணப்படுவதாக 
அவர் கூறினார்.
மேலும் இந்த விபத்துகளைத் தவிர்ப்பதற்காக 9 மாகாணங்களையும் உள்ளடக்கி, சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டினார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 20 ஜூன், 2023

யாழ் ஊர்காவற்துறையில் குழந்தை பிரசவித்து மனைவியை தாக்கிய கணவன் மறியலில்

குழந்தை பிரசவித்து ஆறு நாட்களேயான தாயை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் 
தெரியவருவதாவது, 
அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸ் சேவையில் இணைந்து களுத்துறை பகுதியில் பொலிஸ் கடமை யில் இருந்த வேளை அங்கு சிங்கள பெண்ணொருவரை காதலித்து திருமணம்
 செய்து கொண்டுள்ளார். 
பின்னர் தனது பொலிஸ் சேவையை விட்டு , தனது சொந்த ஊரான ஊர்காவற்துறைக்கு திரும்பி அங்கு குடும்பமாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். 
அந்நிலையில் கடந்த 06 நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் , மனைவியையும் , வைத்திய சாலையில் இருந்து அழைத்து வந்து வீட்டில் தனியே விட்டு விட்டு , கொண்டாட்ட நிகழ்வொன்றுக்காக வெளியூர் செல்ல முற்பட்டுள்ளார். 
தன்னையும் குழந்தையையும் தனியே விட்டு விட்டு செல்ல வேண்டாம் எனவும், தமக்கு உதவிக்கு யாரும் இல்லை என கூறியுள்ளார். அதனால் இருவருக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டு உள்ளது. 
அதனை அடுத்து குழந்தை பிரசவித்து 06 நாட்களேயான தனது மனைவியை கடுமையாக தாக்கி , சித்திரவதை புரிந்துள்ளார். அதனால் மனைவிக்கு இரத்த பெருக்கு ஏற்பட்டு அவர் வலியினால்
 கதறியுள்ளார். 
அதன் போது கணவர் வீட்டை விட்டு வெளியேறி சென்ற பின்னர் வலியினால் அவல குரல் எழுப்பி கத்தியுள்ளார். அதனை அடுத்து  அயலவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலையில் 
அனுமதித்தனர். 
இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசாரிடம் மனைவி முறையிட்டதை அடுத்து கணவரை கைது செய்த பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்தியை அடுத்து அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 19 ஜூன், 2023

செயின்ட் கேலன் நகரில் வாகனத்தை செலுத்த தெரியாத வாலிபர் விபத்துக்குள்ளானார்

செயின்ட் கேலன் நகரில்.18-06-2023. ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட விபத்தில் 19 வயதான சாரதி வாகனம் செலுத்த முடியாதவர் எனக் குறிப்பிடப்பட்டு சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
19-06-2023.திங்கட்கிழமை காலையிலிருந்து செயின்ட் கேலன் நகர காவல் துறையினர் விபத்து குறித்து தகவல் வெளியிடுகையில்-  19 வயதுடைய நபர் ஒருவர் தனது காரை செயின்ட் லியோன்ஹார்ட்-ஸ்ட்ராஸ்ஸில் ரோசன்பெர்க்ஸ்ட்ராஸ்ஸின் திசையில் ஓடிக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் A1 ஆட்டோபானில் நுழைய எண்ணினார். தற்போதைய அறிவின்படி, அவர் காரைத் திருப்பும்போது மிக அதிகமாக
 வேகப்படுத்தினார், அப்போது அவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு தூணில்
 நேருக்கு நேர் மோதினார்.
 இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. செயின்ட் கேலன் நகர காவல் துறையினர் ஓட்டுநரை வாகனம் ஓட்ட தகுதியற்றவர் என வகைப்படுத்தியுள்ளனர்.
 வழக்கறிஞர்கள் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். மீட்புப் பணியின் போது Rosenbergstrasse (வீதி) மூடப்பட வேண்டியிருந்தது. பின்னர் தெருவை சுத்தம் செய்ய செயின்ட் கேலன் தொழில்முறை தீயணைப்பு படை அழைக்கப்பட்டனர்காரிற்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 18 ஜூன், 2023

நாட்டில் அதிகரிக்கும் இதயநோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் இதயநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் அனிந்து பத்திரன 
தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாடு அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆபத்தை குறைக்க வெளியில் நடமாடும் போது முடிந்தவரை முகக்கவசங்களை அணிய வேண்டும் என வைத்தியர் 
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு மற்றும் இதய நோய் தொடர்பில் முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


அமெரிக்காவில் மூன்று மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக்கொன்ற தந்தை!!!

அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலத்தில் சாட் டோர்மேன் (வயது 32) என்பவர், தனது மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகளுடன்
 வசித்து வந்தார். திடீரென டோர்மேன் துப்பாக்கியால் தனது 
மூன்று மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுடத் தொடங்கினார். இதில் இரண்டு மகன்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்
. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 17 ஜூன், 2023

இலங்கையில் புதிய மின்கட்டண திருத்தம் தொடர்பில் சிக்கல்


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத் திருத்தத்திற்கு, குறித்த காலத்திற்குள் அனுமதி வழங்கப்படாவிட்டால், தற்போதைய மின்சாரக் கட்டணத்தை 
தொடர்ச்சியாக அமுல்படுத்த வேண்டியிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சபையின் தலைவர் பதவி இன்னும் வெற்றிடமாக இருப்பதால், மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுக்க முடியாது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த காலத்திற்குள் புதிய கட்டணங்கள் தொடர்பான 
யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கினால் மாத்திரம் ஜூலை முதலாம் திகதி முதல் அதனை
 நடைமுறைப்படுத்த முடியும் என மின்சார சபை தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது..

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 16 ஜூன், 2023

கோரவிபத்தில் கனடா நெடுஞ்சாலையில் குறைந்தது 15 பேர் பலி

கனேடிய மாகாணமான மனிடோபாவில் நடந்த சாலை விபத்தில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளனர் என்று ரோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் வயதானவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிரெய்லர் டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
வின்னிபெக்கிற்கு மேற்கே இரண்டு மணிநேரத்தில் கார்பெரிக்கு அருகில் உள்ள டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையில் இவ்விபத்து நடந்தது.
  15-06-2023. வியாழக்கிழமை அன்று  (17:35 பிஎஸ்டி) உள்ளூர் நேரப்படி 11:43 மணிக்கு விமான ஆம்புலன்ஸ் மற்றும் 12 ஆம்புலன்ஸ்கள் 
உள்ளிட்ட அவசர வாகனங்கள் சம்பவ இடத்திற்கு 
அனுப்பப்பட்டன.
பேருந்தில் இருந்த பெரும்பாலான முதியவர்கள் டாபின், மனிடோபா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள்
 எனக் கூறப்படுகிறது.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 15 ஜூன், 2023

இந்நாட்டில் பதிவாகும் தோல் நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அண்மைக்காலமாக இந்நாட்டில் பதிவாகும் தோல் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவ திணைக்களம் 
சுட்டிக்காட்டியுள்ளது.
 தோல் நோய்களில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், பலர் சரியான ஆய்வு இல்லாமல் சருமத்தை வெண்மையாக்க சில அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
 இந்நாட்டில் தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவத் துறைகள் தெரிவிக்கின்றன. எந்தவொரு நபரின் தோலின் நிறமும் மெலனின் எனப்படும் நிறமியால் தீர்மானிக்கப்படுகிறது.
 மெலனின் சூரியன் மற்றும் வெளிப்புற நோய்களில் இருந்து புற ஊதா கதிர்கள் இருந்து தோல் பாதுகாக்க உதவுகிறது.
 மெலனின் வழங்கும் பாதுகாப்பை இழப்பது தோல் நோய்களுக்கு ஆளாகிறது மற்றும் தோல் புற்றுநோயின் அபாயத்தை
 அதிகரிக்கிறது.
 சமீபகாலமாக சருமத்தை வெண்மையாக்க பலர் பயன்படுத்தும் சில மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களும் தோல் புற்றுநோயை பாதித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 14 ஜூன், 2023

தொலமுல்ல வில் பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியை கொலை

மாத்தறைஇ ஊருபொக்கஇ தொலமுல்ல பிரதேசத்தில் பெண் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
 பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியை காதலனால் கொல்லப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
 தம்பஹல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 அவரது காதலன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 13 ஜூன், 2023

உயிருக்கு நடுவானில் போராடிய பயணி: ஸ்ரீலங்கன் விமான பணிக்குழுவின் நெகிழ்ச்சி செயல்


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்ற அந்த விமானத்தின் பணிக்குழாமினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, விமானத்தின் வழித்தடத்தை மாற்றி இந்தோனேசியாவில் விமானத்தை தரையிறக்க விமானி தீா்மானித்ததாக
 தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் உயிருக்கு போராடியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது அவர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குணமடைந்த நபர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 12 ஜூன், 2023

பொகவந்தலாவையில் 10 வயது மாணவனின் முடிவால் அதிர்ச்சியில் பெற்றோர்

 தன்னுடைய வீட்டின் மலசலக்கூடத்துக்குள் பத்து வயதான மாணவன் ஒருவன், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ஓல்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்விப்பயிலும் மாணவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, மலசலக்கூடத்துக்குள் சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மாணவனின் உடல், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நீதவான் ஸ்தல பரிசோதனைக்குப் பின்னர் மேலதி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பொகவந்தலாவை பொலிஸார் 
தெரிவித்தனர்.
எனினும் மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.என்பதும் குறிப்பிடத்தக்கது..
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 11 ஜூன், 2023

நாட்டில் மிஹிந்தலைக்கு அண்மையில் A9 வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து

மிஹிந்தலைக்கு அண்மையில் A9 வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மீது ஒரு சொகுசு பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து தற்பொழுது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் இவ்வாறு விபத்துக்குள்ளானவர் மல்லாவி கல்வலங் பிரதேசத்தில் உள்ள 
பாடசாலை ஒன்றின் அதிபராவர்,அவரது பெயர் நிக்சன் என குறிப்பிடப்பட்டுள்ளது .
இந்த விபத்தால் தற்போது அப்பிரதேசத்தில் பாரிய வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 10 ஜூன், 2023

இந்தோனேசியாவுக்கு தேனிலவிற்காக சென்ற இந்திய புதுமண தம்பதி நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர். இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் இருந்து விழுந்து நீரில் மூழ்கினர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே கிடைத்துள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, 
தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், இருவரின் சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதி உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 9 ஜூன், 2023

சட்டவிரோத மணல் அகழ்வில் மாந்தை மேற்கு பகுதியில் ஈடுபட்டோர் கைது

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் 
ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகளிடம் மற்றும் மன்னார் மாவட்ட புவிச்சரிதவியல் சுரங்க பணியக அதிகாரிகள் பார்வைக்காக வந்த போது இச்சம்பவம் 
நடைப்பெற்றது.
இதன் போது தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தமை தெரிய வந்துள்ளது. 
குறித்த தேத்தாவடி பகுதியில் அனுமதிப்பத்திரம் உள்ள 
இடங்களில் மட்டும் அகழப்படும் மண் களஞ்சியப்படுத்தும் இடங்களில், சட்ட விரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணையும் சேர்ந்து களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யப் படுகின்றமை இதன் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 உழவு இயந்திரங்கள், 3 ஜே.சி.பி (J.C.P) இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 அனுமதிப்பத்திரங்களை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 8 ஜூன், 2023

இலங்கையில் மொபைல் போன் வாங்குவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

 

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) தெரிவித்துள்ளது. 
இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்ததன் பலனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், கையடக்கத் தொலைபேசிகள், துணைக்கருவிகள், நகல் காகிதங்கள் போன்றவற்றின் விலைக் குறைப்பு எதுவும் இதுவரையில் 
இடம்பெறவில்லை.
“முன்பு ரூ.1,500க்கு விற்கப்பட்ட சாதாரண மொபைல் போன், இன்னும் ரூ.4,500 என்ற வரம்பில் உள்ளது. அமெரிக்க டொலர் விலை குறைந்தாலும், எங்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை,”
 என கூறினார்.
“கடன் கடிதங்களை (LCs) திறப்பதில் இலங்கை மத்திய வங்கி பல நிபந்தனைகளை தளர்த்தியுள்ள போதிலும், இறக்குமதியாளர்களிடமிருந்து பெரிய அளவிலான எங்களுக்கு எந்த நிவாரணமும் 
கிடைக்கவில்லை. சிறிய அளவிலான வர்த்தகர்களாகிய நாம் இன்னும் அவர்களிடமிருந்து பொருட்களை வாங்க வேண்டியுள்ளது” 
என்று பெரேரா கூறினார்.
டொலர் மதிப்பு குறைந்த பிறகு பெரிய அளவிலான இறக்குமதியாளர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் அதனால் சிறிய அளவிலான விற்பனையாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்க முடியவில்லை என்றும் ACCOA கூறியுள்ளது.
எனவே, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அல்லது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) இந்தப் பிரச்சினைகளில் தலையிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என பேராரா 
மேலும் தெரிவித்தார்.
“கையடக்கத் தொலைபேசிகளின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டிற்கு தொலைபேசிகளைக் கொண்டுவருவதற்கு பல்வேறு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும், சில்லறை சந்தையில் இந்த கையடக்கத் தொலைபேசிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன,” என்று இந்திரஜித் பெரேரா வேதனை தெரிவித்துள்ளார்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
..

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 7 ஜூன், 2023

மரண அறிவித்தல் திரு. கந்தப்பிள்ளை பொன்னையா 07.06-2023

தோற்றம் 02-04-1929. மறைவு -07-06-2023
யாழ். நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  
கொண்ட அமரர் கொண்ட கந்தப்பிள்ளை பொன்னையா அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ் சென்றவர்களான கந்தப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகனும் சென்றவர்களான கந்தையா (நல்லையா )ராசம்மா ஆகியோரின் மருமகனும் பராசத்தி அவர்களின் பாசமிகு கணவரும் சோபனா(இலங்கை ) பகீரதன் (கந்தன்- ஜெர்மனி )-
சாந்தினி .(சுவிஸ் .இலங்கை -சாந்தி) சுதர்சன் -மகன் (வேலன்-கனடா )சுதர்சினி.மகள்  (சுதா-இலங்கை )ஆகியோரின் அன்புத்தந்தையாரும் ஆவர் 

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மு.ப — 12:30 பி.ப.மணி  வரை  நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம்  11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று
 .  
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு 
சோபனா.மகள் - இலங்கை +9477 205 2946 பகீரதன்-மகன்  (கந்தன்-ஜெர்மனி )-49 1716996550 சாந்தினி-மகள் (சாந்தி.இலங்கை )- +9477 648 1055 சுதர்சன் (வேலன்.கனடா )- 416917 3028/ 0774785352 சுதர்சினி மகள்(சுதாஇலங்கை )- 071131 9768…
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி..
வீட்டுமுகவரி-
 நவற்கிரி புத்தூர்   
தகவல்
குடும்பத்தினர்..




செவ்வாய், 6 ஜூன், 2023

மட்டக்களப்பில் இடம்பெற்ற உந்துருறுளி விபத்தில் விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று
 இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று பகல் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுதாவளையிலிருந்து செட்டிபாளையம் நோக்கு வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் 
படுகாயமடைந்த நிலையில் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாத நிலையிலேயே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் 
தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 5 ஜூன், 2023

.நாட்டில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மருந்துகளின் விலை குறைப்பு

 

நாட்டில் தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் வீழ்ச்சியினை அடுத்து, மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.
மேலும் இந்த விலை குறைப்பானது ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்...
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 4 ஜூன், 2023

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் விபத்துக்கான காரணம் வெளியானது

உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் புலனாய்வாளர்களால் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 இந்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வின் வைஷ்ணவை மேற்கோள்காட்டி, விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அளித்துள்ளதாக தொடர்புடைய தகவல்கள் 
தெரிவிக்கின்றன. 
 இது தொடர்பான விபத்துக்கு காரணமான தரப்பினர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் வெளிநாட்டு ஊடகங்களுக்கு மேலும் 
தெரிவித்துள்ளார். 
 இந்த துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்துக்கான காரணம், "ரயிலை இயக்குவதற்கு சமிக்ஞை செய்யும் எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு" என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகள் மேலும் தெரிவித்தன. 
 கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த துரதிஷ்டவசமான புகையிரத விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
 வெளியிட்டுள்ளன. 
 மேலும், புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





சனி, 3 ஜூன், 2023

வாரத்தின் ஏழு நாட்களும் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவை

 யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி
 சில்வா தெரிவித்தார். 
தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்  பலாலிசர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின்
 ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 
குறிப்பிட்டார். 
இந்த கடனுதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 2 ஜூன், 2023

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் விபத்தில் 6 பேர் பலி

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி உள்ளது. ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே
 கோரமண்டல் விரைவு ரயில் மற்றொரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக
 முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என தகவல்
 வெளியாகி உள்ளது.
7க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் மீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.. தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு
 இடையே மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரகால கட்டுப்பாட்டு அறை எண் 6782 262 286 அறிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 1 ஜூன், 2023

மரண அறிவித்தல் திருமதி கந்தப்பு செல்வரத்தினம் (சின்னவளக்கா )31.05.23

மறைவு-31-05-2023.
 யாழ் தோப்பு அச்சுவேலி பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி கந்தப்பு செல்வரத்தினம் (சின்னவளக்கா )அவர்கள் 31-05-2023-. புதன்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார் . 
. திரு கந்தப்பு அவர்களின் அன்புமனைவியும் ஆவர் 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
 தொடர்புகளுக்கு மனோகரன் சுவிஸ் 41779472134
 செல்வன் இங்கிலாந்து 447432098782.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி