siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 3 ஜூன், 2023

வாரத்தின் ஏழு நாட்களும் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவை

 யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி
 சில்வா தெரிவித்தார். 
தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்  பலாலிசர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின்
 ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 
குறிப்பிட்டார். 
இந்த கடனுதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக