siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 26 பிப்ரவரி, 2020

மரண அறிவித்தல், அமரர் வைத்தியர் பொன்.சிவபாலன்

யாழ் உரும்பிராய் ஞானவைரவர் கோவிலடியை பிறப்பிடமாகவும்  அச்சுவேலியை வதிவிடமாககொண்டவரும், அச்சுவேலி வைத்தியசாலையில் பிரபலமாக ஆங்கில மருத்துவசேவையை வழங்கியவந்தவரும் பின்பு அச்சுவேலி பத்தமேனியிலும் மற்றும்  அச்சுவேலி வல்லை வீதியில் நோயாளர்தங்குமிடத்தை அமைத்து பராமரித்து வந்தார்   தனியார்  மருத்துவசேவையில் சகல நோய்களுக்கும் மிகச்சிறந்த முறையில் வயித்தியம் செய்து  நவற்கிரி.தோப்பு  பத்தமேனி அச்சுவேலி மக்களின் பாராட்டை பெற்ற வைத்தியர் பொன்.சிவபாலன் அவர்கள் தனது 80 வயதில் காலமானார்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணம் செய்த போது கிளிநொச்சியில்(25.02.2020). நேற்றிரவு இவர் மாரடைப்பினால் 
காலமாகி யுள்ளார்
அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் 
.. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி 
 -அச்வேலி
நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

எம்பிலிப்பிட்டியா வில் உந்துருளி பாறையில் மோதிய பலியான இளைஞன்

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.அதிவேகமாகச் சென்ற 
இளைஞன் கட்டுப்பாட்டை மீறி, பாறையில் மோதியில் விபத்து நேர்ந்தது.கொடகவெலவில் வசிக்கும் 22 வயதுடைய ஷெகான் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கொடகவெல பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கொடூர விபத்து;வவுனியாவில் பற்றியெரியும் வாகனங்கள்; பலர் பலி

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பேருந்தும், வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வான் சாரதியும் தீ வித்தில் அகப்பட்டதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது.
காயமடைந்தார்கள் அம்பியூலன்ஸ்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளதாக 
அறியமுடிகின்றது.
தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டுவரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

சந்திவெளியில் இடம்பெற்ற கோர விபத்து இருவர் ஸ்தலத்தில் பலி

மட்டக்களப்பு சந்திவெளியில் 18.02.2020. நண்பகல் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.வைத்தியசாலையிலுள்ள உறவினரைபார்வையிட்டு வந்த குடும்பத்தினரே விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை இன்று காலை பார்வையிட்டதன் பின்னர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பியபோது, சந்திவெளியில் வைத்து லொறியொன்றுடன் மோதியதால் இந்தவிபத்து 
சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் பதுளை, நுணுகலை பகுதியைச் சேர்ந்த ரங்கன் ராமசாமி (71 வயது) என்பவரும் மற்றைய ஒருவரும் பலியாகியுள்ளனர்.
லொறியின் சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை
 மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 17 பிப்ரவரி, 2020

மரண அறிவித்தல் திருமதி. துரைசிங்கம் சிவனேஸ்வரி (கனகம்மா) 17.02.20

யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. துரைசிங்கம் சிவனேஸ்வரி (கனகம்மா) அவர்கள் 17.02.2020.இன்று இறைவனடி சேர்ந்தார்.  அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 20.02.2020..வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி 
ஆவரங்கால் சிவன் வீதி-
ஆவரங்கால். 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





சனி, 15 பிப்ரவரி, 2020

சிறுப்பிட்டிப் பகுதியில் முச்சக்கர வண்டி- உந்துருளி நேருக்கு நேர் மோதி விபத்து

யாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.குறித்த விபத்து நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

முருகனூரில் விபத்து பரிதாபமாகப் பலியான மனைவி கணவர் ஆபத்தான நிலையில்

வவுனியா – முருகனூர்ப் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த பெண்ணும், அவரது கணவரும் சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் குறித்த 
விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது விபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்.  குறித்த விபத்தில் வவுனியா, முருகனூர் பகுதியைச் சேர்ந்த 
தர்சினி வயது 25 என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.இவர்கள் இருவருக்கும் கடந்த இரு தினங்களிற்கு முன்னரே திருமணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




முச்சக்கர வண்டி கொலதென்ன பகுதியில் கோர விபத்து

பண்டாரவளை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹில்ஓயா கொலதென்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பலாங்கொடை பகுதியிலிருந்து மக்குலெல்ல பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டி, 
பண்டாரவளை-மக்குலெல்ல பிரதான வீதியில் கொலதென்ன பகுதியில்  (12.02.2020.புதன்கிழமை) இரவு வீதியை விட்டுவிலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து
 விபத்துக்குள்ளாகியது. மேற்படி முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை
 பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக 
பண்டாரவளை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து குறித்த விசாரணையை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





திங்கள், 10 பிப்ரவரி, 2020

மரண அறிவித்தல் அமரர் சதாசிவம் சிவகுமார் 10.02.20

உதிர்வு, -10. 02 2020
யாழ் அச்வேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேலில் (Basel) வசித்தவரும் தற்போது தோப்பு -அச்வேலியில் வசித்து வந்தவருமாகிய அமரர்  சதாசிவம் சிவகுமார் (வாவா )அவர்கள்.10..02.2020. அன்று காலமானார்.
 இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருமக்கிய  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 14.02.2020..வெள்ளிக்கிழமை   அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்வேலி  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி 
தோப்பு -அச்வேலி

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

மரண அறிவித்தல் அமரர் சிவகுரு செல்வராஜா 09.02,20

மலர்வு,  00. உதிர்வு, -09, 02 2020
யாழ் வல்லுவெட்டியை  பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட   அமரர் சிவகுரு செல்வராஜா  09.02,2020,.ஞாயிற்றுக்கிழமை
 அன்று காலமானார்
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தம்பதிகளின்  அன்பு மகனும்
காலஞ்சென்ற கந்தசாமி கதிராசி  அவர்களின் மருமகனும் தங்கராணி அவர்களின் அன்புக்கணவரும்  ஆவர்    
 அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 12.02.2020..புதன்கிழமை  அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி 
நவற்கிரி புத்தூர் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 6 பிப்ரவரி, 2020

முகநூலில் பகிரப்பட்ட தகவலை நம்பி இலைச்சாறு குடித்தவர் உயிரிழந்துள்ளார்.

முகநூலில் (பேஸ்புக்கில்) பகிரப்பட்ட தகவலை நம்பி, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சில இலைகளை அரைத்து குடித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா மொரகொட பகுதியில் இடம்பெற்றது.சாற்றை அருந்தியவர் உடனடியாக
 மயக்கமடைந்தார். அவரை உறவினர்கள் கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, 
சிகிச்சையளித்தபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.திருமணமான 36 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் தற்போது தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார். தனது மகன் உடற் கட்டழகில் கவனம் செலுத்துவதாகவும், அதற்காக மூலிகை சாறுகளை அருந்தி வருவதாகவும் 
தாயார் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலொன்றை தன்னிடம் கூறியதாகவும், ஒரு வகை மரத்தின் பெயரை குறிப்பிட்டு, அந்தவகை மரங்கள் இலங்கையில் 15 மட்டுமே உள்ளதாக கூறியதாகவும், அந்த மரத்தின் இலைகளுடன், வேறு இலைகளையும் ஒன்றாக அரைத்து, குளிர்சாதன 
பெட்டியில் வைத்து, கடந்த வெள்ளிக்கிழமை பின்னர் அருந்தியதாக தெரிவித்துள்ளார்.அதைக் குடித்து 10 நிமிடத்தில் தனக்கு மயக்கம் வருவதாக தெரிவித்து, வைத்தியசாலைக்கு கொண்டு 
செல்லும்படி தெரிவித்தார். அவர் உடனடியாக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, 
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்த இலைச்சாறுகளில் இருந்து ஏற்பட்ட விசம் காரணமாக, அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 5 பிப்ரவரி, 2020

கந்தளாயில் ஆற்றுக்குள் பேரூந்து மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

கொழும்பிலிருந்து திருகோணமலைக்குப் பயணித்த சொகுசு பஸ்ஸொன்று பாதையை விட்டு விலகி ஆற்றுக்குக்குள் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த 
காயமடைந்துள்ளனர். அவர்கள் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.34, 56 மற்றும் 26 வயதுடைய மூவரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரெனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.கந்தளாய் 87 வளைவுப் பகுதியில் (04.02.2020) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே
 இந்த விபத்துக்குப் பிரதான 
காரணமென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 1 பிப்ரவரி, 2020

வைத்தியர்களின் அலட்சியப் போக்கால் யாழில் பலியான உயிர்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் அலட்சியப் போக்காலும் கடமையினை முறையாக மேற்கொள்ளாமையினாலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது.
இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை 
அனுப்பி வைத்துள்ளார்..
போன உயிர் என்றைக்குமே திரும்பி வரப் போறதில்லை. ஆனால் மீண்டும் ஒரு உயிர் இவ்வாறு அநியாயமாக சென்று விடக் கூடாது. எமக்கும் நாளை என்பது ஒன்று உண்டு.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 31 ஜனவரி, 2020

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 4ம் ஆண்டு நினைவஞ்சலி .31.01.20

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      
நீங்காத நினைவு.நான்காம் ஆண்டு 
திதி-31.01.2020
 அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   அன்னார்  யாழ்  நவற்கிரி புத்தூரை 
 பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட 
அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத நினைவுடன்  நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 31.01.2020...இன்று  வெள்ளிக்கிழமை 
மறைந்துவிட்ட எங்கள் உறவின்.

நீங்காத நினைவுகள் 
விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு…!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு…!
ஆனால், என்னுள்
உங்கள் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை…!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
தகவல் குடும்பத்தினர் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 30 ஜனவரி, 2020

. பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் செல்வி சிறிபாலகிருஸ்ணன் திக்சிகா மரணம்

தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக.30.01.2020. வியாழக்கிழமை அன்று .சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி காத்திரமான பங்கு வகித்தவராவார்.
Thiksika the leader of Tamil Youth Organisation (UK), has died after being afflicted with cancer. Our thoughts are with her family and fellow activists
பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு.
*********************
எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம்
அடைந்துள்ளோம்.
எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் முழுவீச்சாக செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் துயரங்களை அனைத்துலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில்
 வேரூன்றி நின்றது.
பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பை முன்னேற்றப் பாடுபடுகின்ற தூண்களில் ஒருவராக இருந்தவர் திக்சிகா. அவரின் ஒருங்கிணைப்பில் பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் பொழுது புற்றுநோய் என்னும் கொடிய நோய் அவரை எங்களிடமிருந்து
 பறித்துச் சென்றுள்ளது.
தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.
தமிழ் மருத்துவ அமைப்புகள் இதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டுமென இவ்வேளையில் தாழ்மையாக
 வேண்டுகின்றோம்.
திக்சியின் இழப்புத் தமிழீழம் நோக்கிப் பயணிக்கும் எங்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள போதும், திக்சிகா வழிகாட்டிய பாதையில் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் எங்கள் இலட்சியத்தை வென்றெடுக்கும் பணிகளில் மிகுந்த உத்வேகத்துடன் செயற்படுவோமென உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.
பிரிவுத் துயரோடும் இலட்சிய உறுதியோடும்
தமிழ் இளையோர் அமைப்பு
பிரித்தானியா.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
!உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
மற்றைய செய்திகள்


செவ்வாய், 28 ஜனவரி, 2020

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தீர்த்தக் கேணியில் சிறுவனின் சடலம்

யாழ். தொண்டமனாறு – செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில், சிறுவனொருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவனின் சடலம் 28.01.2020. செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக வல்வெட்டித்துறை 
பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.குறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 27 ஜனவரி, 2020

மட்டக்களப்பில் ரயில் கடவையில் அமர்ந்து பாட்டு கேட்ட நபருக்கு நேர்ந்த சோகம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை, புணாணை பகுதியில் வைத்து மீனகயா என்ற புகையிரதத்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை புணாணை புகையிர நிலையத்திற்கு இடைப்பட்ட புகையிரத கடவையில் கையடக்கத் தொலைபேசியில் பாட்டு கேட்டிருந்த வேளையில் குறித்த 
விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், மயிலந்தனை புணாணையைச் சேர்ந்த ஜெய்கப்ஜோன் ஜோன்சன் (வயது 19) என்ற இளைஞனே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
 தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை
 பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன 
மேலும் தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

அமரர் மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

                         பிறப்பு-17 06. 1963 -   இறப்பு-26 01 2018                                 
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி
26 01 2020..அன்புத் தெய்வமே அப்பா ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே!
எம்மை விட்டு நீங்கள் சென்று
ஆண்டு இரண்டு ஆனதுவோ!காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 24 ஜனவரி, 2020

நினைவஞ்சலி 1ம் ஆண்டு அமரர்,தம்பு சந்திரசேகரராஜா(இந்திரன்) 24-01.20

    திதி -.24-01-2020.அன்று 
.அன்னை மடியில் 09 ..02 .1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்)  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. இல்லறமாம் நல்லறத்தில் இணைந்தினிது
வல்ல இறை அருளினால் வளமாய் வாழ்ந்து
சொல்லிய புகழுடனே யாவும் பெற்று
நல் மனையான் சோதி பிள்ளையென்று
நல்லறத்தை நடத்திய எம்(இந்திரன்)
மனையாளைக் கரம்பிடித்து இல்லறத்தை வினையமாய்
தொடக்கி வைத்த புனித நாளில்
முப்பதாண்டு இல்லறத்தில் இனிதே
வெற்றி இப்போ தான் எனக் காலம் ஓடி
அப்பாடா என மகிழ்ந்து இருக்கும் போதில்
தப்பாது கவர்ந்தான் காலன் உயிரை
அப்பன் சிவன் கதவை அடைய வேண்டி
எப்போதும் பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி சாந்தி
 என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி-பிள்ளைகள்-சகோதர்கள்:
தகவல் குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
!உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 
வீட்டு  .முகவரி ..இலங்கை. .Get Direction62 E S Fernando Mawatha, Colombo, Sri Lanka
தொடர்புகளுக்கு
 பிரணவன் - மகன்.செல்பேசி : +94779503389   
பரஞ்சோதிராசா - சகோதரர். செல்பேசி  : +94762335894 
 செல்பேசி  +94766092827 
  சின்னராசா(அப்பன்) - சகோதரர் செல்பேசி : +94777382871  

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 22 ஜனவரி, 2020

நினைவஞ்சலி 1ம் ஆண்டு அமரர்,தம்பு சந்திரசேகரராஜா(இந்திரன்) 24-01.20

திதி -.24-01-2020.அன்று 
.அன்னை மடியில் 09 ..02 .1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் . தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்). அவர்களின்  திதி 24-01-2020. வெள்ளிக்கிழமை அன்று 
. அன்னார், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் 
பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன் 
ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சராணி, தேவராஜா மற்றும் தியாகராஜா(சுவிஸ்), செல்வராஜா(சுவிஸ்), பரஞ்சோதிராசா(சுவிஸ்), சின்னராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணதேவி, சிவானந்தி, விமலாதேவி, சிவநங்கை, 
நந்தினி, சிவகுமார், சிவகணேசன், சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின்  1ம் ஆண்டு நினைவஞ்சலி.(திதி .24.01.2020.வெள்ளிக் கிழமை .அன்று  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

மறைந்துவிட்ட உங்கள் உறவின்  
நீங்காத நினைவுகள் 
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின் 
உலராத வாசனை 
இழந்த அன்பானவரின் 
நீங்காத பொழுதுகள் 
இதயம் துடிக்கும் வரை 
மாறாது நினைப்பு 
இயற்கையின் அழைப்பு 
மீற முடியாத பயணம் 
சென்ற தூரமோ
மீள முடியாத பாதை
கண்முன் உங்கள் விம்பம் 
காலத்தை கடந்தும் கலையவில்லை 
நம்மை விட்டு பிரிந்த நம் தாத்தா
நம் நினைவை விட்டு பிரிய மறுப்பதேன்?
 உன் நிழலை நிஜமாக்கி 
நிலைத்திருக்கும்
காலச்சுழற்சியில்  ஈராண்டு  ஆண்டு  கடந்து போனாலும் இன்னும்
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது  புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள்  அப்பா  அண்னா தம்பி 
 உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
 நிற்கின்றோம்.
   அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய மணைவி பிள்ளைகள் சகோதரர்  குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உற்றார் உறவினர்கள் சுவிஸ்  வாழ்  நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் 
தகவல்: குடும்பத்தின
தொடர்புகளுக்கு
 பிரணவன் - மகன் கைத்தோலை பேசி: +94779503389   பரஞ்சோதிராசா - சகோதரர் கைத்தோலை பேசி : +94762335894  கைத்தோலை பேசி : +94766092827   சின்னராசா(அப்பன்) 
- சகோதரர் கைத்தோலை பேசி : +94777382871  

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>