siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 5 பிப்ரவரி, 2020

கந்தளாயில் ஆற்றுக்குள் பேரூந்து மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

கொழும்பிலிருந்து திருகோணமலைக்குப் பயணித்த சொகுசு பஸ்ஸொன்று பாதையை விட்டு விலகி ஆற்றுக்குக்குள் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த 
காயமடைந்துள்ளனர். அவர்கள் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.34, 56 மற்றும் 26 வயதுடைய மூவரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரெனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.கந்தளாய் 87 வளைவுப் பகுதியில் (04.02.2020) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே
 இந்த விபத்துக்குப் பிரதான 
காரணமென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக