siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

புகழ்பெற்ற பிரபல பட்டிமன்ற நடுவர் பாப்பையா காலமானார்

துயர் பகிர்வு--தோற்றம் 22-02--1936---மறைவு-11-09-2026.
புகழ்பெற்ற பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  காலமானார். 
வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய விளக்கவுரையாளருமான சாலமன் பாப்பையா, எளிய மற்றும் நகைச்சுவையான தமிழில் பேசி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார். 
அன்றாட சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்டு இவர் நடத்தும் பட்டிமன்றங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 
சாலமன் பாப்பையா 1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவில் உள்ள சாத்தங்குடியில் பிறந்தார். 
இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 
மேலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். 
சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியப் பாடல்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளித்து அவற்றின் சுவைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். 
அத்துடன், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான முதல்வன், போய்ஸ் மற்றும் சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களிலும் 
இவர் நடித்துள்ளார். 
பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள இவர், இலக்கியத் திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். 
'பட்டிமன்றமும் பாப்பையாவும்” என்ற தன்வரலாற்று நூலை 
எழுதியுள்ளார். 
திருக்குறள் உரை, புறநானூறு புதிய வரிசை வகை, அகநானூறு உள்ளிட்ட உரை நூல்களையும், 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை” என்ற இலக்கியத் திறனாய்வு நூலையும் எழுதியுள்ளார். 
மேலும், 'அவர்கள் கண்ட ராமன்”, 'இவர்கள் நோக்கில் கம்பன்”, 'கம்பவனத்தில் ஓர் உலா”, 'கம்பனின் தமிழமுது” போன்ற பல்வேறு நூல்களைத் தொகுத்துள்ளார். 
மதுரை கம்பன் கழகத்தின் திங்கள் சொற்பொழிவுகளையும் ஆண்டுதோறும் தொகுத்து வெளியிட்டு வருகிறார். 
தமிழ்த் துறைக்கும் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக, இந்தியாவின் நான்காவது உயரிய விருதான மத்திய அரசின் 'பத்மஸ்ரீ” விருது 2021 ஆம் ஆண்டு இவருக்கு
 வழங்கப்பட்டது. 
மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 'முத்தமிழ் பேரறிஞர்” விருதும், 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 'கலைமாமணி' விருதும் இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html



சுற்றுலா பேருந்து விபத்த்தில் சுவிட்சர்லாந்தில் ஐவர் பலி 40 காயமடைந்தர்

சுற்றுலா பேருந்து விபத்த்தில் சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்
விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால மீட்புக் குழுக்கள் விரைந்து அனுப்பப்பட்டதாக உள்ளூர் காவல்துறை 
தெரிவித்துள்ளது.
இந்தப் பேருந்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டச்சு சுற்றுலா நிறுவனமான OAD ஏற்பாடு செய்த பயணத்தில் அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் மொத்தம் 48 பேர் இருந்ததாக ‘De Telegraaf’ செய்தி
 வெளியிட்டுள்ளது. 
சுஷ் மற்றும் அருகிலுள்ள ஜெர்னெஸ் கிராமத்திற்கு இடையேயான சாலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் பேருந்து தடுப்பு வேலியில் மோதியதாக சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF 
தெரிவித்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் SRF தெரிவித்துள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 9 செப்டம்பர், 2026

நாட்டில் வருடம்தோறும் ஆயிரம் குழந்தைப் புற்றுநோயாளிகள் பதிவு

 தற்போது   இலங்கையில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்


தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு அமைவாக இன்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவையே இங்கு அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.


எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.


குழந்தைகள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் "குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

யாழ் செம்மணிப் பகுதியில்மாணவி கிருசாந்தியின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது
. இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை
 செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

திங்கள், 7 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் பிரியா பிரஷாந்த் .04.09.26

துயர் பகிர்வு-தோற்றம் 08-05-1987---மறைவு-04-09-2026..
 யாழ் அச்சுவேலி, பத்தமேனியைச் சேர்ந்த அமரர் பதுமதிதி – அறியுகுலராணி (ராணி) தம்பதிகளின் இளைய மகளும் பிரஷாந்தின் அன்பு மனைவியுமாகிய பிரியா பிரஷாந்த் அவர்கள் 04 -09-2026 அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார் .இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
அச்சுவேலி, பத்தமேனி
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html


ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

நாட்டில் நீர்கொழும்பு கடலில் காணாமல்போன மீனவர் உடலமாக மீட்பு மூவரை தேடும் பணிகள்

 

நாட்டில் நீர்கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாகக் காணாமல்போன மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஆபத்தில் சிக்கிய படகுகளையும் மீனவர்களையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 5 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் கிஷ்ணன் பரமேசுவரன்(கிளி அண்ணை)

துயர் பகிர்வு-தோற்றம் 10-04-1969---மறைவு-05-09-2026..
யாழ் மந்துவில் வடக்கினை பிறப்பிடமாகவும் நவற்கிரி  வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்   கிஷ்ணன்  பரமேசுவரன்(கிளி அண்ணை)அவர்கள்  05.09.2026  சனிக்கிழமை அன்று நவற்கிரி  இறைவனடி சேர்ந்து விட்டார். .
 அன்னார்  கிஷ்ணன் தம்பதியினரின்அன்பு அன்பு மகனும் அன்னார்  காலம்சென்ற சின்னத்துரை தம்பதியினரின் அன்பு மருமகனும் திருமதி பவானி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும் ஆவர் 
 அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில்  மந்துவில் வடக்கு கொடிகாமத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
மந்துவில் வடக்கு கொடிகாமம் 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

நாட்டில் கொழுப்பிட்டியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

நாட்டில் கொழுப்பிட்டியாவில் 6வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த
 ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளிப்புறத்தில் இருந்த இருவரைக் குறிவைத்துத் துப்பாக்கிச் 
சூடு நடத்தினார். 
தனிப்பட்ட காரணத்திற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்ததோடு, துப்பாக்கிச் சூடு நடத்திய 
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழுப்பிட்டி பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் ( சந்திரன்) நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 04.09.26

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022 -நான்காம்  ஆண்டு  திதி  04-09-2026-அன்று 
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்(யாழில் பலபாகங்களுக்கு வீடுகளுக்கு  மின்இணைப்பையும் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் மின் மோட்டர் திருத்த வேலைகளின் நவற்கிரியில்   பிரசித்தி பெற்ற முதல்வரான ) திரு ஐயம்பிள்ளை சந்திரசேகரம்
 ( சந்திரன் ) அவர்களின் .நான்காம்  ஆண்டு  திதி  04-09-2026 வெள்ளிக்கிழமை  அன்று 
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் 
திருமதி சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்
 சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்.பிரான்ஸ் )காலஞ்சென்ற சுகதீபா(தீபா)    மற்றும் டர்சிகா (லண்டன்)  (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகந்தினி (பிரான்ஸ் )  மற்றும் அமரர்  சுரேஸ்குமார் மற்றும் செல்வகுமரன்  (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாசமிகுமாமனாரும்
 கவிஷன் தஸ்மிகா  அஸ்விகா  சுருதிகா  ஆகியோரின்
 பாசமிகு பேரனும்   காலஞ்சென்ற பத்மவதி  காலஞ்சென்ற கந்தசாமி )மற்றும் ராசரத்தினம்(ரத்தி) (கனடா ) 
(கனடா ) அமரர் சண்முகம் மற்றும்திருமதி  நல்லம்மா  (அருந்தவம்)(கனடா ) சுப்பையா (ஞானன்- இலங்கை) பாக்கியம் (பாக்கி இலங்கை)  அகியோரின் அன்புச்சகோதனும் 
காலஞ்சென்ற தங்கரத்தினம் (தங்காள் )மற்றும் பாலையா ( ஓய்வு பெற்ற யாழ் போதனா வையித்தியசாலை ஊழியர்  )காலஞ்சென்ற இரத்தினம்(சின்னம்மான்-சின்னண்ணை ககேசன்துறை சீமெந்து தொழில் சாலை முன்னாள் ஊழியர் ) சரஸ்வதி/(கனடா ) தியாகராஜா(தேவன்-ராஜா  சுவிஸ் ) இராசேஸ்வரி (கனடா)  சின்னவட்டன் (இலங்கை) கணேசலிங்கம் (கனடா ) சந்திரன் (குட்டி ஜேர்மனி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்  .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள் 
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
       அன்பும் அறனுமாய் இருந்து 
           எங்களை விட்டுப்பிரிந்தாய்
       உன் நினைவுகளே எங்களுக்கு 
           வழிகாட்டும் ஒளிவிளக்கு
காலங்கள் பல கடந்தாலும்,கண்ணை விட்டு மறைந்தாலும்,இதயத்தின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் 
நீங்காத நினைவுகள் அவை!
ஆனாலும் என்ன
நீங்காத நினைவுகள்
நிஜமாக நிறைந்திருக்கும்
காலங்கள் பிரிவின்
காயத்தை ஆற்றலாம்
பிரிவின் வலிகள்
என்றும்பிரிந்திடாமல்
எம் முடன்
உடலும் உயிரும்மறையலாம்
உங்கள் அன்பு என்றும் மறையாது
பூவில் உறையும் தேனினை போல
எங்கள் உள்ளமதில்
உங்கள் நினைவுகளாய்
வாழும் காலங்களில்
பாசத் தந்தையாக
பொறுப்புள்ள தலைமகனாக
பண்பு மிகு சேவையாளனாக
வாழ்ந்து மறைந்தீர்கள்
வீசும் காற்றிலும்
மலரின் மணத்திலும்
எம்முடன் நீங்கள்
கலந்திருப்பதாக எண்ணி வாழ்கிறோம்!
– நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,நவற்கிரி வாழ்மக்கள்  உற்றார், உறவினர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!
https://navakkiri.blogspot.com/2023/09/1-070923.html




 

வியாழன், 3 செப்டம்பர், 2026

காட்டு யானை தாக்கியதில் கதிர்காம வீதியில் பேருந்து கவிழ்ந்து பலர் காயம்

நாட்டில் யாலா தேசியப் பூங்காவை ஒட்டியுள்ள புட்டேலாலா அருகே, சிலாவிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை காட்டு யானை ஒன்று நெருங்கியதால், அந்தப் பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
உணவு தேடி யானை ஒன்று பேருந்தின் ஓட்டுநர் பக்கத்திற்கு வந்தபோது, ​​வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக காவல்துறை 
தெரிவித்துள்ளது.
மொத்தம் 25 பயணிகள் லேசான காயங்களுக்கு உள்ளாயினர். அவர்களில் பதின்மூன்று பேர் கதிர்காம மருத்துவமனையிலும், மேலும் பன்னிரண்டு பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். யாருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 2 செப்டம்பர், 2026

யாழ் இந்துக் கல்லுாரியின் பிரபல ஆசிரியர் மரணம்

யாழ் இந்துக் கல்லூரியின் பௌதீகவியல் (Physics) ஆசிரியர் அவர்களின் திடீர் மறைவு கல்விச் சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 

https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_488.html




 

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து) உடுவில் பிரதேச செயலகத்தால் தவிர்த்திருக்கக் கூடிய மரணம்

துயர் பகிர்வு--தோற்றம்: 08.12.1989-மறைவு: 30.08.2026
திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து)(அபிவிருத்தி உத்தியோகத்தர் – உடுவில் பிரதேச செயலகம்)இல.83, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நிஷாந்தன் சிந்துபிரியா அவர்கள் கடந்த 30.08.2026 அன்று அகால மரணமடைந்தார்.
தவிர்த்திருக்கக் கூடிய மரணம்>>
உடுவில் பிரதேச செயலக உயர் அதிகாரிகளின் அசமந்த போக்கே மின்சாரம் பாய்ந்து வெளிக்கள உத்தியோகத்தர் நிஷாந்தன் சிந்துபிரியா உயிரிழக்கக் காரணம் என தற்போது விசாரணையில் 
தெரிய வந்துள்ளது.
உடுவில் பிரதேச செயலக மூலிகை தோட்டப் பகுதியில் மின்சாரக் கசிவு ஏற்கனவே இருப்பது தொடர்பில் 1 வருடத்துக்கு முன் சில உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக
 தெரிவிக்கப்படுகிறது.  
உயர் அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ளாமல்  அதனை சீர் செய்யாத காரணத்தினால்  வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரான இரண்டு பிள்ளைகளின் தாயான நிசாந்தன் சிந்துபிரியா உயிரிழக்கக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
 உற்பத்தித்திறன் போட்டிக்கு உயரதிகாரிகள் இன்று(31) பிரதேச செயலகத்துக்கு வருகை தருகின்ற  நிலையில் நேற்றைய தினம்(30)  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் குறித்த விடயம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சித்த மருத்துவ துறைக்கு பொறுப்பான குறித்த உத்தியோகத்தர் மூலிகை தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பொழுது அந்த வாயிலாக சென்ற மின்சார வயர் மற்றவர்கள் மீது தாக்கப்படும் என்பதனால் அதனை அவர் அகற்ற முற்பட்ட போது மின்சாரம் அவர் மீது பாய்ந்து உயிரிழக்க காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
 இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் 
வழங்கப்பட்டுள்ளது.
அன்னாரின்  நல்லடக்கம் சிறுப்பிட்டி இந்துமனத்தில் நல் அடக்கம் நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஊழியர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 

https://navakkiri.blogspot.com/2026/08/blog-post_21.html


திங்கள், 31 ஆகஸ்ட், 2026

யாழ் உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ் உடுவில் பிரதேச செயலகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி 
உயிரிழந்துள்ளார் 
உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே 
உயிரிழந்துள்ளார்.
அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டிக்காக மதிப்பீடு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவிருந்தமையால் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர். 
அதன் போது குறித்த உத்தியோகஸ்தர் மூலிகை தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த வேளை , தோட்டத்திற்குள் காணப்பட்ட மின்சார வயர் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக , மின்சார தாக்குதலுக்கு
 இலக்கானார். 
அவரை சக உத்தியோகஸ்தர்கள் மீட்டு  , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர் 
சம்பவம் தொடர்பில் , சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

துப்பாக்கிச் சூடு சுவிஸ் ஆராவ் நகரில் ஒருவர் உயிரிப்பு: ஐவர் காயம்

சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வெளியே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளைத் தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நடைபெற்ற ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக  காவல்துறை இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர்  படுகாயமடைந்துள்ளதாகவும் காவல்துறை மேலும்
 தெரிவித்தது.
அடையாளம் தெரியாத குற்றவாளிகளைத் தேடும் வேட்டை நடைபெற்று வருவதாகவும், சம்பவத்திற்கான நோக்கம் மற்றும் சரியான சூழ்நிலைகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
ஆர்காவ் மாகாண காவல்துறையின் பெரும் படையினர் குவிக்கப்பட்டு, சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆராவ் பகுதிக்கு அப்பாலும் காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒரு பெரிய நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியிலிருந்து மக்கள் விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கண்டோனல் காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் அல்லது படங்களைப் பகிருமாறு அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் 
விடுத்துள்ளனர்.
சுவிஸ் செய்தித்தாளான பிளிக்கின்படி , வருடாந்திர ஆராவர் ரேவ் நிகழ்ச்சியின் போது, ​​உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணிக்கு (0100 GMT) முன்னதாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
டெக்னோ இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த ஷாச்சென் பந்தய மைதானத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் வனேசா ரம்போல்ட் கூறியதாக அந்தச் செய்தித்தாள் மேற்கோள் காட்டியுள்ளது
ஆராவ் சுமார் 22,300 குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் சூரிச்சிலிருந்து மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 29 ஆகஸ்ட், 2026

வெள்ளப்பெருக்கில் நேபாள-திபெத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுநூறு ஐத் தாண்டியுள்ளது

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டியுள்ளதாக சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட நிலையில், காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைத் தேடும் தீவிர மீட்புப் பணிகள் நான்காவது
 நாளாகத் தொடர்ந்தன.
நேபாளத்தின் பேரிடர் முகமையின்படி , நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 626 ஆக உள்ளது. மேலும், வெளிநாட்டினர் உட்பட 2,426 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்
எல்லையின் மறுபுறத்தில் உள்ள திபெத்தில், சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா, ஏழு பேர் உயிரிழந்ததை உறுதிசெய்துள்ளதுடன், 554 பேர் காணாமல் போனதாகவும்
 தெரிவித்துள்ளது.
புதன்கிழமை ஏற்பட்ட ஒரு பனியாறு சரிவின் காரணமாக, பாறை, பனி, சேறு மற்றும் சிதைவுகள் கீழே உள்ள இமயமலை ஆற்றுப் படுகைகள் வழியாகப் பெருக்கெடுத்து ஓடின.
சீன எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து, முழு நகரங்களையும் நாசமாக்கியதுடன், நீர்மின் நிலையங்களையும் சேதப்படுத்தியது. என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

மரண அறிவித்தல் நோர்வே மன்னர் ஹரால்டு காலமானார்

இன்று ஐரோப்பாவின் வாழும் மன்னர்களிலேயே மிகவும் வயதானவரான நோர்வே மன்னர் ஹரால்ட் , தனது 89வது வயதில் காலமானார் என்று அரசவை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மன்னர், ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இருந்து ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில், ஹீமோலிடிக் அனீமியா எனப்படும் ஒரு அரிய இரத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.மன்னர் ஹரால்டின் மரணத்தைப் பற்றி அரண்மனை கூறியது
மாண்புமிகு மன்னர் ஹரால்டு இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். மன்னர் ஹரால்டு அவர்கள் ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை அன்று காலை 6:35 மணிக்கு ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் அமைதியாகக் காலமானார் என்று அரண்மனை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரது மனைவி ராணி சோன்யாவும், மகன் இளவரசர் ஹாக்கனும், அவரது படுக்கையருகே இருப்பதற்காகத் தங்களது அனைத்து நிகழ்ச்சிகளையும் 
இரத்து செய்தனர்.
1991 முதல் மன்னராக இருந்து வந்த ஹரால்டுக்குப் பின்னர் இளவரசர் ஹாக்கன் அரியணை ஏறுவார்.
ஹாக்கான் தானாகவே எட்டாம் ஹாக்கான் மன்னராகி, தன் தந்தைக்குப் பிறகு நோர்வேயின் அரச தலைவராகப் பொறுப்பேற்கிறார். நார்வே மன்னருக்கு பெரும்பாலும் சடங்கு ரீதியான மற்றும் பிரதிநிதித்துவப் பாத்திரமே உள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ஹரால்டு தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். மேலும் தனது உத்தியோகப்பூர்வ கடமைகளையும் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார். இருப்பினும், மன்னரானபோது தான் எடுத்த சத்தியப்பிரமாணம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று கூறி, அவர் பதவி விலகுவதை
 மீண்டும் மீண்டும் நிராகரித்தார்.
ஐந்தாம் ஹரால்டு மன்னருக்காக நடைபெற்ற இரவு அஞ்சலி நிகழ்வின்போது நலம் விரும்பிகள் கூடினர்.
ஏற்கனவே மன்னரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், நூற்றுக்கணக்கான நலம் விரும்பிகள் ஓஸ்லோவில் உள்ள அரச அரண்மனைக்கு வெளியே இரவு முழுவதும் கூடி, அவருக்காகப் பிரார்த்தனை செய்தனர்.
1937-ல் பிறந்த ஹரால்ட், 500 ஆண்டுகளுக்கும் மேலாக நோர்வேயில் பிறந்த முதல் இளவரசர் ஆனார். குழந்தையாக இருந்தபோது, 1940-ல் நாஜி படையெடுப்பைத் தொடர்ந்து தனது தாய் மற்றும்
 சகோதரிகளுடன் நோர்வேயிலிருந்து தப்பிச் சென்ற அவர், இரண்டாம் உலகப் போரின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழித்தார்.
ஹரால்ட், 1991 ஜனவரியில் தனது தந்தை ஐந்தாம் ஓலாவ் மன்னருக்குப் பின்னர் அரியணை ஏறினார். 35 ஆண்டுகளுக்கும் மேலான தனது ஆட்சிக்காலத்தில் நோர்வேயின் முடியாட்சியை
 நவீனமயமாக்கினார். 
2011-ல் 77 பேரைக் கொன்ற தீவிர வலதுசாரி பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அவர் ஆற்றிய பதிலுக்காகப் பரவலாகப் பாராட்டப்பட்டார். பின்னர், சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் LGBTQ+ சமத்துவத்தை வலியுறுத்தும் தனது உரைகளுக்காகவும்
 கவனத்தை ஈர்த்தார்.
நோர்வே அரச குடும்பத்திற்கு ஒரு கொந்தளிப்பான காலகட்டத்திற்குப் பின்னர் மன்னரின் மரணம் நிகழ்ந்துள்ளது.
ஹாக்கனின் மனைவியான பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட், மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மேற்கொண்ட தனது கடந்தகால கடிதப் பரிமாற்றங்கள் தொடர்பாகக் கடுமையான விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.
அவரது முந்தைய உறவின் மூலம் பிறந்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி, இரண்டு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் முன்னாள் துணைவர் மீதான வன்முறை உள்ளிட்ட பல குற்றங்களுக்காகக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: ஐயா 
புத்தூர் வைரவர் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/08/blog-post_21.html



வியாழன், 27 ஆகஸ்ட், 2026

பேருந்து நிறுத்தத்தில் பிரான்சில் கூட்டம் மீது கார் மோதியது: இருவர் உயிரிழப்பு:ஒன்பது பேர் காயம்

பிரான்சில் -26-08-2026-புதன்கிழமை அன்று வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர், அவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தற்போதைக்கு நாங்கள் பயங்கரவாத நோக்கத்தை ஊகிக்கவில்லை, ஆனால் விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று துணை அரசு வழக்கறிஞர் பிலிப் லியோனார்டோ வியாழக்கிழமை அதிகாலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர் என விவரிக்கப்பட்ட 26 வயது நபர் ஒருவர், புதன்கிழமை இரவு நகரின் பிரதான ரயில் நிலையம் அருகே மக்கள் கூட்டத்தின் மீது காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவலில் வைக்கப்பட்டார்
சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், விபத்தில் ஏற்பட்ட காயங்களால் மற்றொருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. 
ஓட்டுநர் தப்பி ஓடினார், ஆனால் சம்பவ இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் கைது செய்யப்பட்டார் என்று பிரெஞ்சு ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு ஒரு தகவல் மூலம்
 தெரிவிக்கப்பட்டது.
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் 
தெரிவித்தன. 
தாக்குதலுக்குப் பிறகு, சந்தேக நபர் உளவுத்துறைக்கு அறிமுகமானவர் அல்ல என்றும், ஆனால் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அவருக்கு முன்பு காவல்துறையுடன் தொடர்பு இருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 26 ஆகஸ்ட், 2026

நாட்டில் ,அறிவியல் நகரில் புகையிரதக் கடவையில் விபத்த்தில் யுவதி உயிரிழப்பு

நாட்டில் ,கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி பலியாகியுள்ளார். குறித்த விபத்து முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரம் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட காரை மோதியுள்ளது. 
விபத்துக்குள்ளான காரில் பயணித்த 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

மருந்துகளை யாழ்.போதனாவிற்கு ஏற்றி வந்த வாகனம் தடம்புரன்டு விபத்து

மருந்துகளை  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் 
தடம்புரண்டுள்ளது 
கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தடம்புரண்டு விபத்துக்கு
 உள்ளாகியுள்ளது
விபத்தில் சாரதி மற்றும் உடன் பயணித்த இரு ஊழியர்களும் , பாதுகாப்பாக உள்ளதாகவும், தடம்புரண்ட வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, மற்றுமொரு வாகனத்திற்கு மாற்றி எடுத்து வர நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக , வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 
அதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 24 ஆகஸ்ட், 2026

நாட்டில் அவிசாவளையில் போலி SLS முத்திரையுடன் குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

நாட்டில் அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, போலியான இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையிடப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த குடிநீர் அமித்திரிகல–ருவன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகத்திற்காக அவிசாவளை பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக 
தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 500 மில்லிலிற்றர் முதல் 19 லிற்றர் வரையிலான பல்வேறு அளவிலான குடிநீர் கொள்கலன்கள்
 இருந்துள்ளன.
அவற்றில் போலியான SLS சான்றிதழ் குறியீடும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த குடிநீர் போத்தல்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னரே அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும் போது மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர் சான்றிதழ் குறியீடுகள் மற்றும் பொருட்களின் தகவல்களை
 கவனமாக
 சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html