siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 10 மே, 2020

அம்பாறையில் பட்டம் விடுவதைப் பார்வையிடச் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

பட்டம் விடுவதைப் பார்வையிடச் சென்ற இரு சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறு போன்ற குழியொன்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே/கிழக்கு 3ஆம் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்ற நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடயவியல் துறையினர் நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.உயிரிழந்த
 சிறுவர்களின் தாயார் சிற்றுண்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், வேறு சிறுவர்கள் பட்டம் விடுவதைப் பார்ப்பதற்காகச் சென்ற நிலையில் சிராஜ் சிபாம் (வயது-6) சிராஜ் ரிஸ்ஹி (வயது-3) ஆகிய சிறுவர்களே குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் வீட்டிலிருந்து 150 மீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் சடலங்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
.இவ்வாறு உயிரிழந்த சிறுவர்களின் தந்தை வேலைவாய்ப்பிற்காக மத்திய கிழக்கு நாடோன்றில் பணிபுரிந்து வருகின்றார்.இதேவேளை, சம்பவ இடத்திற்கு சம்மாந்துறை 
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை
 பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எமு.நெளபீர் தலைமையில் இன்று காலை சென்ற குழுவினர் அம்பாறையில் இருந்து வருகைதந்த தடயவியல் பொலிஸாருக்கு
 ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள் வீழ்ந்த கிணறு மற்றும் சுற்றுச்சூழலில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக