siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 15 மே, 2020

அபாய எச்சரிக்கை .பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு

பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும் போது கொவிட் -19 வைரஸ் தொற்று எவ்வாறு பரவும் என்பது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரினால் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பேருந்துகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை திறந்து வைத்தால் பேருந்துக்குள் வரும் காற்றினால் அதிக கொவிட் -19 ஆபத்து பின் பக்க 
ஆசனங்களில் உள்ளவர்களுக்கே ஏற்படும். அத்துடன், பின்பகுதிக்கு செல்லும் காற்றும் மீண்டும் சுற்றி பேருந்தின் முன் பகுதிக்கு வரும்.எனவே ஒரு கொவிட் -19 தொற்று நோயாளி பேருந்தில் 
இருந்தால் அவர் தும்மும் போது பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் பேருந்தில் 
நின்றுக் கொண்டு சென்றால் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் ஆபத்துக்குள் உள்ளது.பேருந்துககளில் ஆசனங்களின் 
எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்துச் சென்றால், அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்திருந்தல் வேண்டும். அத்துடன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக