siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 6 மே, 2020

சிகை அலங்கரிப்பு நிலையங்கள் வடக்கில் சுகாதார சேவையின் அறிவுறுத்தல்கள்

சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்களை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் விடுத்துள்ளார்.நீண்டநாட்களாக அமுலில் இருந்த 
ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகைஅலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) 
அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.கொரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை தங்களது 
சிகை அலங்கரிப்பு நிலையங்களில் அமுல்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒருமீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்.
முடிதிருத்துநர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்,முடிதிருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குரிய சேவையினை நிறைவு செய்தபின் கைகளை 
சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு கழுவிய பின்பே அடுத்த வாடிக்கையாளருக்குரிய சேவையை 
வழங்க வேண்டும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக