siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 22 மே, 2020

வீசிய பலத்த காற்று.கிளிநொச்சி .பொலிஸ் நிலையம் சேதம் பொலிஸ் அதிகாரி காயம்

கிளிநொச்சி மாவட்டத்தில்.21.05-20. அன்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கிளிநொச்சி 
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள உப பொலிஸ் நிலையம் மீது பாரிய மா மரக்கொப்பு முறிந்து விழுந்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்து கிளிநொச்சி 
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  மாமரம் முறிந்து வீழ்ந்தமையால் அப்பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தமையால் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்பொழுது இயல்பு நிலைக்கு
 திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்க விடயம். இதேபோன்று அக்கராயன் பகுதியில் வீடு ஒன்றின் கூரையின் 
மேல் தென்னைமரம் விழுந்ததில் வீட்டின் ஓடுகள் வீட்டில் போடப்பட்டிருந்த மரங்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன. துரதிஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக