siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 22 அக்டோபர், 2022

நாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்

நாட்டில்  இம்முறை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை நடத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் 
தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாவது வினாத்தாளை முதலிலும் முதலாவது வினாத்தாளை இரண்டாவதாகவும் வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் கடந்த ஆண்டு நேர
 அட்டவணை சம்பந்தமாக விரிவா ஆராய்ந்து இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் ஆணையாளர் அந்த அறிக்கையில் 
கூறியுள்ளார்
புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடத்த பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சையை காலை 9.30 முதல் 10.45 வரை ஒரு மணி 45 நிமிடங்களும், முதலாம் வினாத்தாளுக்கான பரீட்சையை முற்பகல் 11.15 முதல் மதியம் 12.15 வரை ஒரு மணி நேரமும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் 
தீர்மானித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக