siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 28 அக்டோபர், 2022

குருமன்காடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி குற்றவாளி தப்பியோட்டம்

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்பு காரணமான நபர் ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில் குறித்த நபரை கண்டு பிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை 
நாடியுள்ளனர்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் கடந்த 1ம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய உந்துருளியில் தப்பிச்சென்றுள்ளது.
படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்தி அவ்விடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்ற நபர் தொடர்பில் தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது 071-8591343, 024-2222226 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி வவுனியா போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவலை வழங்குமாறும் காவல்துறையினர் 
தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக