siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 7 அக்டோபர், 2022

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு!



நாட்டில் லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. 
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் புதிய விலைகள் 
ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் புதிய விலை 
395 ரூபாவாகும்.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 685 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலையின் புதிய விலை 
650 ரூபாவாகு
ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 415 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 
398 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 228 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 220 ரூபாவாகும். 
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை நாடு 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அதன்படி 179 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசியின் விலை
 174 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை ரூபாவால் 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அதன்படி 278 ரூபா வெள்ளை சீனியின் தற்போது 275ரூபாவாகும்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக