siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 செப்டம்பர், 2023

அமரர் சரவணமுத்து கந்தசாமி (குஞ்சுமணி.கந்தா) 2ம் ஆண்டு நினைவஞ்சலி 30 09 23

 

பிறப்பு-31-12-1960-இறப்பு-30 10 2021
யாழ்.நவற்கிரி புத்தூரை  பிறப்பிடமாகவும், சுவிஸ் லுசேன்(Luzern) ஐ வதிவிடமாகவும் கொண்ட 
 (பரமேஸ் வரன் .குஞ்சுமணி- கந்தா என அழைக்கபட் ட ) அமரர் சரவணமுத்து கந்தசாமி  அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
30-09-2023.சனிக்கிழமை அன்று அன்னார், காலஞ்சென்றவர்களான  சரவணமுத்து அம்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி,
 மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,அனோஜன், ஆதினி, அஜானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற மகேஸ்வரன்,
மற்றும்  மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மகேந்திரம், தர்மகுலசிங்கம், நவமூர்த்தி- நாகம்மா, திருச்செல்வம்- வசுந்தரா, இராசதுரை- முகுந்தினி, 
 சிறிகரன்- அருந்தவமலர், சுதாகரன்- சறோசாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரவீந்திரன், சுமன், சுயீவன், சுஜந்தன், வினோபா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பினில் விளைந்த
ஆரமுதே அளவிலா
இன்பப் பெரும் சுடரேஆனந்தமாய் உள்ளங்கள்
கவர்ந்த உத்தமரே அற்புத
மனிதரின் மாணிக்கமேதொலை தூரம் சென்ற போதும்
தொலையாதது உமது நினைவுகள்
தொடு வானம் போல் தொடரும்
கனவுகள் தோழமையாய்
திகழும் நற்சந்தங்கள் நம்மை விட்டகன்று 

நல்ல குணவாளனுக்காய் நாட்கள்
மாதங்களாய் அகவையும் இரண்டாயிற்று 
 நல்லவரே வானவரே நற்பதவி கண்டீரேசீரும் சிறப்புமாய் நீர் இருந்த
நாட்கள் சிந்தாமல் சிதையாமல்
கதை கவிதை சொல்லுதே சித்திரமே
உம்தோற்றம் சிந்தையிலே சிகரம் ஐயா
 சீரோடு சிறப்பாக நீர் சிவனிடத்தில் இளைப்பாறும்ஆண்டு கடந்தாலும் ஆறாத துயரத்தில்
மீளாது தவிக்கும் அன்பான குடும்பத்தினர்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக