siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 7 செப்டம்பர், 2023

அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் ( சந்திரன்) 1ம் ஆண்டு நினைவஞ்சலி 07.09.23

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்(யாழில் பலபாகங்களுக்கு வீடுகளுக்கு  மின்இணைப்பையும் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் மின் மோட்டர் திருத்த வேலைகளின் நவற்கிரியில்   பிரசித்தி பெற்ற முதல்வரான ) திரு ஐயம்பிள்ளை சந்திரசேகரம்
 ( சந்திரன் ) அவர்களின் .முதலாம் ஆண்டு  திதி  07-09-2023.
வியாழக்கிழமை  இன்று 
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்)(பிரான்ஸ் )
காலஞ்சென்ற சுகதீபா(தீபா)    மற்றும் டர்சிகா (லண்டன்)  (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகந்தினி (பிரான்ஸ் )  மற்றும் அமரர்  சுரேஸ்குமார் மற்றும் செல்வகுமரன்  (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாசமிகுமாமனாரும்
 கவிஷன் தஸ்மிகா  அஸ்விகா  ஆகியோரின்
 பாசமிகு பேரனும்   காலஞ்சென்ற பத்மவதி  காலஞ்சென்ற கந்தசாமி )மற்றும் ராசரத்தினம்(ரத்தி) (கனடா ) 
(கனடா ) சண்முகம் (இலங்கை )நல்லம்மா  (அருந்தவம்)(கனடா ) சுப்பையா (ஞான ன்- இலங்கை) பாக்கியம் (பாக்கி இலங்கை)  அகியோரின் அன்புச்சகோதனும் 
காலஞ்சென்ற தங்கரத்தினம் (தங்காள் )மற்றும் பாலையா ( ஓய்வு பெற்ற யாழ் போதனா வையித்தியசாலை ஊழியர் இலங்கை )காலஞ்சென்ற இரத்தினம்(சின்னம்மான்-சின்னண்ணை ககேசன்துறை சீமெந்து தொழில் சாலை முன்னாள் ஊழியர் ) சரஸ்வதி/(கனடா ) தியாகராஜா(தேவன்-ராஜா  சுவிஸ் ) இராசேஸ்வரி (இலங்கை )கணேசலிங்கம் (கனடா ) சந்திரன் (ஜேர்மனி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்  .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள் 
ஓராண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும் – உங்கள்
நினைவுகள் கல் மேல் பொறித்த எழுத்துக்கள் போல்
எங்களை விட்டு அகலவில்லை!
அப்பா எங்கள் இன்ப துன்பங்களை – நீங்கள்
அருகிருந்து பங்கெடுத்து கொள்வதை
நாம் உணர்கின்றோம் – நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,நவற்கிரி வாழ்மக்கள்  உற்றார், உறவினர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!



0 கருத்துகள்:

கருத்துரையிடுக