siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 17 அக்டோபர், 2024

கோர விபத்து பிரித்தானியாவில் கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி ஐந்து பேர் பலி

பிரித்தானியாவின் கம்பிரியா நகரில், எம்6 என்ற மோட்டார் வழி சாலையில், கார் ஒன்று தவறான திசையில் சென்று கார், மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. 
 ஸ்கோடா மற்றும் டொயட்டோ ரக கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 
 இதுபற்றி கம்பிரியா பொலிஸார் கூறும்போது, விபத்தில், கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த ஸ்கோடா ரக காரின் ஓட்டுநர் சம்பவ 
இடத்திலேயே பலியானார். 
 இதுதவிர, 42 வயது ஆண், 33 வயது பெண், 7 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது



புதன், 16 அக்டோபர், 2024

நினைவஞ்சலி 3ம் ஆண்டு அமரர் கதிரவேலு இராசலக்சுமி 16.10.2024

தோற்றம்-04-07-1932.-  மறைவு-20 09 2021       
  மூன்றாம் ஆண்டு திதி 28-09-2024  இன்று           
    யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி கதிரவேலு இராசலக்சுமி
அவர்களின் மூன்றாம் ஆண்டு  திதி 16-10-2024..புதன்கிழமை  இன்று .அன்னார் காலஞ்சென்ற கதிரவேலுவின் பாசமிகு மனைவியாரும் காலஞ்சென்ற அப்புக்குட்டி  வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்
 காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும் 
மற்றும் யோகேஸ்வரன்  அரற்புதமலர் கருணாநந்தன்  ஜெந்தி குகனேசன் சுதமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!


செவ்வாய், 15 அக்டோபர், 2024

நாட்டில் கேகனதுர பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

நாட்டில்  மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில்.15-10-2024. இன்றுஇடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் வந்த 
நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக
 பொலிஸார் தெரிவித்தனர். 
 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் சீசர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

திங்கள், 14 அக்டோபர், 2024

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாட்டில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. கனமழை பெய்யக்கூடும். 
 நாட்டின்  ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 
 இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை
 குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 13 அக்டோபர், 2024

மரண அறிவித்தல் அமரர் திருமதி மகேஸ்வரி 11-10-2024

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-11-10-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்
 திருமதி மகேஸ்வரி  அவர்கள் 11-10-2024.வெள்ளிக்கிழமை  அன்று  
இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ் சென்றவர்களான ராசரத்தினம் அலங்காரம்  தம்பதிகளின் அன்பு மகளும் 
(பிள்ளைகளின்  பெயர்கள் பின்பு இணைக்கப்படும்) 
காலஞ் சென்ற குணம் காலஞ் சென்ற கணேஷ் மற்ரும்  தவம் ஆகியோரின் சகோதரியும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  13-10-2024.2024. ஞாயிற்ருகிழமை 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி  அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
13-10-2024.ஞாயிற்ருகிழமை அன்று ;.முகவரி!  நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.


நாட்டில் கல்முனை பிராதன வீதியில்இடம்பெற்ற விபத்த்தில் பலியான இளைஞர்

நாட்டில்  களுவாஞ்சிக்குடி - கல்முனை பிராதன வீதியில் இன்று (13.10)பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 16 வயதுடைய ரவீந்திரன் என்ற சிறுவனே சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
 கல்முனையில் இருந்து களுவாஞ்சிக்குடி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், களுவாஞ்சிக்குடியில் இருந்து கல்முனை 
நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதி  விபத்துக்குள்ளாகியது. 
 உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.


சனி, 12 அக்டோபர், 2024

அச்சுவேலி வல்லை பாலத்துக்கு அருகில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து ஒருவர் பலி

யாழ்   அச்சுவேலி வல்லை பாலத்துக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள், பட்டா வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டதாக
 கூறப்படுகிறது.
இதேவேளை, முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது







 

வெள்ளி, 11 அக்டோபர், 2024

யாழ் காரணவாய் தெற்கில் மூதாட்டியின் சடலம் எரிகாயங்களுடன் மீட்பு

யாழ் வடமராட்சியில்  வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரணவாய் தெற்கை சேர்ந்த 70 வயதான மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டி வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். 10-10-2024. வியாழக்கிழமை அன்று மூதாட்டியின் நடமாட்டத்தை காணாத 
அயலவர்கள் , மூதாட்டியின் வீட்டினுள் சென்று பார்த்த போது மூதாட்டி தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் சடலமாக 
காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்
.என்பது குறிப்பிடத்தக்கது.



வியாழன், 10 அக்டோபர், 2024

மரண அறிவித்தல் திருமதி செல்லத்துரை நாகரத்தினம் (சரசு)

துயர் பகிர்வு தோற்றம் -மறைவு-
தோப்பு அச்சுவேலியை பிறப்பு இடமாகவும் போதிம்பிள்ளையார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்துரை நாகரத்தினம் (சரசு)அவர்கள் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்  ஆவர் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


புதன், 9 அக்டோபர், 2024

மரண அறிவித்தல் செல்வன் பற்பநாதன் (கிளி )செல்லக்குமார்

துயர் பகிர்வு தோற்றம் -மறைவு-08-10-2024
யாழ். நவற்கிரியை  பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்துவந்த 
திரு பற்பநாதன் (கிளி )செல்லக்குமார் அவர்கள்.08-10-2024..செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.அன்னார்  திரு பற்பநாதன் தம்பதியினரின் அன்பு மகனுமாவார் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .



செவ்வாய், 8 அக்டோபர், 2024

நாட்டில் பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய 
மழையுடன் கூடிய 
பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.என்பதாகும் 



திங்கள், 7 அக்டோபர், 2024

ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் பிரான்ஸில் உயிரிழப்பு

 ஈழத்தமிழ் இளைஞன் பிரான்ஸில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 யாழ்ப்பாணம், நெல்லியடி வதிரி இரும்புமதவடி பகுதியை சேர்ந்தவரும் பிரான்ஸில் வாழ்ந்து வந்த 28 வயதான யோகேஸ்வரன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். 
 ஐந்து வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் வந்த நிலையில், பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் அவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.என்பது குறிப்பிடத்தக்கது 


ஞாயிறு, 6 அக்டோபர், 2024

நாட்டில் மொர ஓயாவில் முதலை தாக்கி முதியவர் ஒருவர் மரணம்

அனுராதபுரம் - கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவில் முதலை தாக்கி 60 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த.04-10-2024.வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை மொர ஓயாவுக்கு அருகில் ரஞ்சித் மங்கட என்கிற பகுதியில் மூன்று பேர் ஒன்றாக அமர்ந்து
 மது அருந்தியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் இறைச்சி எடுத்துக்கொண்டு வருதற்காக தனது வீட்டுக்குச் செல்ல மீண்டும் ஓடையை கடக்கும்போது முதலையினால் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் 
தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஸ்ரீபுர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.என்பதாகும்.


சனி, 5 அக்டோபர், 2024

மானிப்பாயைச் சேர்ந்த யுவதி உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் 04-10-2024.அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே 
உயிரிழந்தவர் ஆவார்.
காய்ச்சல் காரணமாக இந்த யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டதையடுத்துது, 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்
.என்பது குறிப்பிடத்தக்கது





 

வெள்ளி, 4 அக்டோபர், 2024

நாட்டில் குழந்தைகள் தொடர்பில் சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

இன்புளுவன்சா அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இந்த நாட்களில் அதிகம் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகள் உள்ள 
குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டியது
 அவசியம் என சுகாதாரத் துறையினர் பெற்றோரிடம்
 கேட்கின்றனர்.
 இதேவேளை, கை, கால் மற்றும் வாய் நோய் (Hand, foot and mouth disease) உள்ள குழந்தைகளும் இந்நாட்களில் பதிவாகி வருவதாகவும்,
 எனவே சரியான சுகாதார அறிவுரைகளை 
பின்பற்றுவதன் மூலம் 
குழந்தைகளை பாதுகாக்க முடியும் என குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டுகிறார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 3 அக்டோபர், 2024

நாட்டில் வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆனின் சடலம் மீட்பு

நாட்டில் வெள்ளவத்தை  கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில்.03-10-2024. இன்று  பிற்பகல் சடலம் 
மீட்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட 45 வயதுடைய சாதாரண உருவம் கொண்டவர். இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. 
 வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது 




 

புதன், 2 அக்டோபர், 2024

செங்கடலில் ஆப்பிரிக்காவில் இருந்து சென்ற இரண்டு கப்பல்கள் கடலில் மூழ்கி பலர் பலி

ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் ஜிபூட்டி கடற்கரையில் செங்கடலில் மூழ்கியதில் 45 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் படகுகள் 310 பேருடன் ஏமனில் இருந்து புறப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு
 தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடுகிறார்கள்.
ஐரோப்பா கண்டத்தை அடைவதற்கு தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருக்கும் அவநம்பிக்கையான மக்கள் நிறைந்த கப்பல்களை கடத்தல்காரர்கள் அடைக்கிறார்கள். 
 32 உயிர் பிழைத்தவர்கள் மீட்கப்பட்டதாக, தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவிய U.N. ஏஜென்சி, சமூக ஊடக தளமான X இல் கூறியது. வடமேற்கு கோர் அங்கார் பகுதிக்கு 
அருகில் உள்ள 
கடற்கரையில் இருந்து சுமார் 150 மீட்டர் (சுமார் 500 அடி) தொலைவில் இந்த சோகம் ஏற்பட்டதாக ஜிபூட்டியின் கடலோர காவல்படை கூறினார். 
அதிகாலை தொடங்கிய கூட்டு மீட்புப் பணி நடைபெற்று 
வருவதாகவும் அது கூறியது. இதில் 115 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 
"காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், உயிர் 
பிழைத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாங்கள் உறுதியாக
 இருக்கிறோம்" என்று அந்த நிறுவனம் சமூக ஊடகங்களில் வெள்ளை உடல் பைகளின் படங்களுடன் ஒரு அறிக்கையில்
 தெரிவித்துள்ளது. 
"சமூகங்கள் மட்டுமன்றி நன்கொடையாளர்களும் எங்களது புலம்பெயர்ந்தோர் மறுமொழி திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க 
விரும்புகிறோம்" என்று கிழக்கு, கொம்பு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கான IOM பிராந்திய இயக்குனர் ஃப்ரான்ட்ஸ் 
செலஸ்டின் கூறினார். 
"இது இந்த புலம்பெயர்ந்தோர், இந்த இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு நாங்கள் இருக்க வேண்டியிருக்கும் போது, ​​​​அந்த
 தங்குமிடம் வழங்குவதற்கும், எங்களுக்கு சுகாதாரம் மற்றும் சில உணவு மற்றும் அல்லாதவற்றை வழங்குவதற்கும் 
கூட. உணவுப் பொருட்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
என்பது குறிப்பிடத்தக்கது.




 

செவ்வாய், 1 அக்டோபர், 2024

கல்வி சுற்றுலா சென்றபோது தீப்பிடித்து தாய்லாந்தில் எரிந்த பஸ்;மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்பலி என அச்சம்

தாய்லாந்தில் சுற்றுலாவிற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த பேருந்தில் தீப்பிடித்ததில் சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 தாய்லாந்தின் தலைநகரை அண்மித்த பகுதியில்.01-10-2024. இன்று விபத்து இடம்பெற்றுள்ளது. 
 மேலும் காயமடைந்த 16 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
என்பது குறிப்பிடத்தக்கது .