யாழ் வடமராட்சியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரணவாய் தெற்கை சேர்ந்த 70 வயதான மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டி வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். 10-10-2024. வியாழக்கிழமை அன்று மூதாட்டியின் நடமாட்டத்தை காணாத
அயலவர்கள் , மூதாட்டியின் வீட்டினுள் சென்று பார்த்த போது மூதாட்டி தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் சடலமாக
காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்
.என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக