siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 11 அக்டோபர், 2024

யாழ் காரணவாய் தெற்கில் மூதாட்டியின் சடலம் எரிகாயங்களுடன் மீட்பு

யாழ் வடமராட்சியில்  வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரணவாய் தெற்கை சேர்ந்த 70 வயதான மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டி வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். 10-10-2024. வியாழக்கிழமை அன்று மூதாட்டியின் நடமாட்டத்தை காணாத 
அயலவர்கள் , மூதாட்டியின் வீட்டினுள் சென்று பார்த்த போது மூதாட்டி தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் சடலமாக 
காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்
.என்பது குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக