siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 25 அக்டோபர், 2024

யாழ் சங்கரத்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் எலிக்காய்ச்சலால் மரணம்

 எலிக்காய்ச்சல் காரணமாக யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 
24-10-2024.அன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 கலைவாணி வீதி துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 இவருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 23 ஆம் திகதி சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். 
 யாழ்ப்பணம் போதனை வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(24) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 
 எலிக்காய்ச்சல் காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக