siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

நாட்டில் மொர ஓயாவில் முதலை தாக்கி முதியவர் ஒருவர் மரணம்

அனுராதபுரம் - கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவில் முதலை தாக்கி 60 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த.04-10-2024.வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை மொர ஓயாவுக்கு அருகில் ரஞ்சித் மங்கட என்கிற பகுதியில் மூன்று பேர் ஒன்றாக அமர்ந்து
 மது அருந்தியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் இறைச்சி எடுத்துக்கொண்டு வருதற்காக தனது வீட்டுக்குச் செல்ல மீண்டும் ஓடையை கடக்கும்போது முதலையினால் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் 
தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஸ்ரீபுர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.என்பதாகும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக