siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 5 ஜூன், 2017

மரண அறிவித்தல் திரு கார்த்திகேசு அருளம்பலம்

தோற்றம் : 20 ஒக்ரோபர் 1928 — மறைவு : 26 மே 2017
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, ஊரெழு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அருளம்பலம்(அருணாசலம்)  (Marketing Department - Colombo)அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(சுவிஸ்), அனுஷா(பிரித்தானியா), தனுஷா(பிரித்தானியா), சுதாகரன்(பிரித்தானியா), ஜீவாகரன்(பிரித்தானியா), றஜீகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், மாசிலாமணி, பவளமணி, மற்றும் செல்வரட்ணம்(கனடா), அரசரட்ணம்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), திலகவதி(இலங்கை) ஆகியோரின் 
அன்புச் சகோதரரும்,
ஸ்ரீராஜன்(பிரித்தானியா), சுந்தரேசன்(பிரித்தானியா), விஜிலதா(சுவிஸ்), துஷாந்தா(பிரித்தானியா), லதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், காசிபிள்ளை, தனபாலன், மற்றும் யோகம்மா, ஜெயலஷ்மி, சிவக்கொழுந்து, இரட்ணசிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னபூபதி, பாலச்சந்திரன், தனபூபதி, மற்றும் சொர்ணமலர், பூர்ணசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியா, திவ்வியா, திவ்வியாங்கா, நிர்யா, கர்ஜன், காருஜன், ஷோபிகா, சிந்துஜா, சந்தோஷ், அனுஜன், அருஷா ஆகியோரின் 
பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .

வீட்டு முகவரி: 
110 Middletons Ln, 
Norwich NR6 5SR, 
UK.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/06/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0RZ, UK 
யில் நல்லடக்கம் நடைபெற்றது 
தொடர்புகளுக்கு
பிரபா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787276912
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447962551287
ஜீவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459636290
றஜீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904020408
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

சனி, 3 ஜூன், 2017

கதலி வாழைப்பழங்களின் விலை யாழில் திடீர் சரிவு

  
யாழ். மாவட்டத்தில் கதலி வாழைப்பழத்தின் விலையில் இன்று(03) திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தின் முக்கிய சந்தையான திருநெல்வேலி மற்றும் சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்ட சந்தைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 120 ரூபா முதல் 130 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று(03) ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 40 ரூபா தொடக்கம் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யாழில் தற்போது வெள்ளரிப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்ற பழ வகைகளின் பருவகாலம் ஆரம்பமாகியுள்ளமையால் இந்தப் பழ வகைகளைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக ஈடுபாடு காட்டி 
வருகின்றனர்.
சந்தைகளில் வாழைக்குலைகளின் வரத்துச் சடுதியாக அதிகரித்துக் காணப்படுகின்றமையுமே இந்தத் திடீர் விலை சரிவுக்குக் காரணமென வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாழைக்குலைகள் அதிகளவில் திருநெல்வேலிப் பொதுச் சந்தைக்கு எடுத்து வரப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

வெள்ளி, 2 ஜூன், 2017

யாழில் மட்டும் வரட்சியால் 1 இலட்சம் பேருக்கு மேல் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் 
மேற்படி தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் மழைவீழ்ச்சி குறைவடைந்ததன் விளைவாக வேலணை, ஊர்காவற்துறை,
 காரைநகர், மருதங்கேணி மற்றும் கடற்கரையை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச அதிபர் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்
 குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 6 புதிய குடிநீர் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குடிநீர் விநியோக வாகனங்களின் சாரதிகளுக்கான நிதியும் எரிபொருளும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்
 தெரிவித்துள்ளார்.
நாட்டின் தென்பகுதியில் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை யாழ்.மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாகவும் தம்மோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் மாவட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி உதவுமாறும் கேட்டு கொண்டுள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

இன்று கிளிநொச்சியில் 8 மணித்தியாலங்களுக்கு மின் தடை!

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இன்று மின் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகவே இந்த மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி, ஐயபுரம், நாகப்படுவான், பல்லவராயங்கட்டு, வேராவில், கிராஞ்சி, வலைப்பாடு, குமுழமுனை, கரியாலைப்படுவான், அன்புபுரம், முழங்காவில், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், 651 ஆவது பிரிவு இராணுவ முகாம், நாச்சிக்குடா கடற்படை முகாம், இயாஸ் மொகமட் ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகள் இந்த மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவு
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



வியாழன், 1 ஜூன், 2017

இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமன நிலையத்தில் புதிய பாதுகாப்பு !

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமன நிலையத்தில் இன்று முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை அமுலாகிறது.
அதற்கமைய விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படுவதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி
தெரிவித்துள்ளார்
புதிய பாதுகாப்பு நடைமுறைக்கமைய விமான பயணி ஒருவர் தங்கள் கைப்பையினுள் கொண்டு செல்ல கூடிய திரவ வகை, ஸ்ப்ரே வகை மற்றும் ஜெல் வகைகளின் அளவுகளை குறைப்பதற்கு
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர், பான வகைகள், சுப், ஜேம், சோஸ், திரவ வகைகள், க்ரீம், மருந்துகள், எண்ணெய், வாசனை திரவியம், ஸ்ப்ரே, ஜெல் வகைகள், காற்று அழுத்தம் அதிகமாக கொடுக்கும் கொள்கலன்கள், சவரநுரை வகைகள், வேறு நுரை வகைகள், கண் இமைக்கான அழகு சாதன வகைகள், அறை வெப்பங்களை பராமரிக்கும் திரவங்கள், நீராவி திரவ வகை பொருட்கள் இதற்குள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய குறித்த அனைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு மேல் அதிகரிக்க கூடாது. அத்துடன் திரவத்திலான கொள்கலன்கள் 20X20 என்ற அளவில் வெளிப்படையாக தெரியும் வகையிலும் 
மீண்டும் மூடிக்கொள்ள கூடிய பொலித்தீன் பைகளில் மூட வேண்டும். ஒரு பயணியினால் அந்த பை ஒன்று மாத்திரமே கொண்டு செல்ல முடியும்.
இதற்கு மேலதிகமாக கொண்டு செல்லும் திட்டம் இருந்தால் அவற்றினை விமான டிக்கட் ஒப்படைக்கும் இடத்தில் ஒப்படைக்கப்படும் பயண பைகளுடன் எடுத்து செல்ல முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



தொடர்ந்து இதை 3 மாதம் சாப்பிட்டால் நோய்கள் மறையுமாம் ?

அரிக்காவில் சுமார் 70% குழந்தைகள் வைட்டமின் டி குறைபாட்டினால் அவஸ்தைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாதது. இது பல நோய்களான புற்றுநோய், 
இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும். Take Vitamin D For 3 Months And All Diseases Will Disappear! VIDEO : Amla Juice and its 5 Health Benefits in Summer Amla Juice and its 5 Health Benefits in Summer Lifestyle & Fashion Powered by எனவே ஒவ்வொருவரும் அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
அதற்கு பல வழிகள் உள்ளன. அதில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது, அதிகாலை சூரியக்கதிர்கள் உடலில் படும்படி உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வைட்டமின் டி வைட்டமின் டி வைட்டமின் டி கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின். மற்ற வைட்டமின்களை விட இது முற்றிலும் 
மாறுபட்டது. மேலும் இந்த வைட்டமின் டி இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படும். எப்படி வைட்டமின் டி குறைபாட்டை அறிவது? எப்படி வைட்டமின் டி குறைபாட்டை அறிவது? வைட்டமின் டி குறைபாட்டை இரத்த பரிசோதனையின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். வைட்டமின் டி
 நிறைந்த உணவுகள் வைட்டமின் டி நிறைந்த
 உணவுகள் வைட்டமின் டி சத்தானது மீன்கள், பால் பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா பால், செரில்கள், மாட்டின் கல்லீரல், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது. வைட்டமின் டி அவசியம் வைட்டமின் டி அவசியம் வைட்டமின் டி உடலில் போதுமான அளவில் இருந்தால், அது எலும்புகளால் 
எளிதில் கால்சியத்தை உறிஞ்ச உதவும். ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு தீவிரமாக ஆரம்பித்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் வைட்டமின் டி குறைபாடு குறிப்பிட்ட சில நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இப்போது அது என்ன பிரச்சனைகள் என காண்போம். ஆஸ்துமா ஆஸ்துமா அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைத்தால், அது நுரையீரலை வலிமைப்படுத்தும் மற்றும் சுவாச பாதையில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்கும்.
 ஆஸ்டியோபோரோசிஸ் ஆஸ்டியோபோரோசிஸ் வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, வலிமைப்படுத்தும். இதனால் எலும்புகள் பலவீனமாவது மற்றும் எலும்பு முறிவு ஏற்படுவது தடுக்கப்படும். உட்காயம் உட்காயம் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அதனால் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படக்கூடும். இதய ஆரோக்கியம் இதய ஆரோக்கியம் இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம்
 வைட்டமின் டி குறைபாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே இப்பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் வைட்டமின் டி கிடைக்குமாறு செய்யுங்கள். மன இறுக்கம் மன இறுக்கம் முக்கியமாக உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், அது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மன இறுக்கத்தால் அவஸ்தைப்படச் செய்யும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன்
 படிக்க க்ளிக் செய்யவும்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


ஞாயிறு, 28 மே, 2017

பாரிய வாகனம் மருதங்கேணிப் பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

பருத்தித்துறை மருதங்கேணிப் பகுதியில் பாரிய வாகனம் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மருதங்கேணி சாலையில் குடாரப்பு பகுதியில் பாலம் அமைக்கும் பணி இடம்பெற்று வருகிறது. 
இந்த நிலையில் குறித்த வாகனம் பாலம் அமைக்கும் பள்ளத்தில் வீழ்ந்தே  விபத்துக்குள்ளானது.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

அதிகாலையில் யாழ்.நகரில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு`!


யாழ்ப்பாணம் நகர் மாட்­டீன் வீதி­யில் நேற்று அதி­காலை 4.30 மணி­ய­ள­வில் கொழும்­பி­லி­ருந்து பேருந்­தில் வந்து வீட்­டுக்கு நடந்து சென்று கொண்­டி­ருந்த பெண்­ணி­டம் 2 பவுண் சங்­கிலி கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாக யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு 
செய்­யப்­பட்­டுள்­ளது.
“பணி­யின் நிமிர்த்­தம் கொழும்பு சென்று தனி­யார் பேருந்­தில் யாழ்ப்­பா­ணம் வந்து இறங்­கிய பெண், யாழ்ப்­பா­ணம் முதன்மை வீதி­யி­லி­ருந்து மாட்­டீன் ஓழுங்­கை­யில் 100 மீற்­றர் தூரத்­தி­லி­ருந்த தனது வீட்­டுக்கு கால்­ந­டை­யா­கச் சென்­றுள்­ளார்.
வீட்­டுக்கு அண்­மை­யா­கச் சென்ற நிலை­யில் அவ­ரைத் துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்த ஒரு­வர் திடீ­ரெனïïïïக் கீழே தள்ளி வீழ்த்­தி­யுள்ளார். பெண் நிலை குலைந்து கீழே வீழ்ந்த போது, அவர் அணிந்­தி­ருந்த 2 பவுண் தங்­கச் சங்­கி­லியை துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்­த­வர்கள் அறுத்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­விட்­டார்” என்று முறைப்­பாட்­டில் 
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
கொள்ளை இடம்­பெற்ற பகு­தி­யில் பொருத்­தப்­பட்­டி­ருந்த மின் விளக்­கு­கள் ஒளி­ர­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. அது தொடர்­பில் உரி­ய­வர்­க­ளுக்கு அறி­வித்­தும் மாதக் கணக்­கில் மின்­வி­ளக்­கு­கள் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை என்று குற்­றஞ்­சாட் டப்­பட்­டது.  
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

செவ்வாய், 16 மே, 2017

அவசர தகவல் யாழ் குடாநாட்டு மக்களுக்கு ….!

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு இடமாற்றம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
வவுனியா குருமன்காடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ரவீந்திரன் (வயது 58) என்பவர் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியாவைச் சேர்ந்த குறித்த நபர் காணாமல் போனோரின் உறவுகளை கண்டெடுத்து தருவதாகவும், இடமாற்றம் மற்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகவும் கூறி சுமார் 13 லட்சம் ருபா நிதி மோசடி
செய்துள்ளார்.
அத்துடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு, இடமாற்றம் செய்து தருவதாக கூறி 4 லட்சம் ரூபாவை நபர் ஒருவரிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் உங்களின் உறவு யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்க வேண்டும். என்று கூறியும். மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் இணைப்புச் செயலாளர் என்றும் பாசாங்கு காட்டி ஏமாற்றி வந்துள்ளார்.
குறித்த விடயத்தினை அறிந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 
பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான விசேட புலானய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் குறித்த நபர் புலனாய்வு பிரிவினரினால் 
கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த நபர் தான் ஆளுநரின் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும், அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் 
தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறான மோசடியாளர்கள் தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 15 மே, 2017

உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல்? இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை 
ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், 
ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை 
கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று (திங்கட்கிழமை) நடைபெறலாம் என அவர்கள் யூகிக்கின்றனர்.
இங்கிலாந்து உள்துறை மந்திரி அம்பர் ரூத் இதுபற்றி குறிப்பிடுகையில், “இந்தப் பிரச்சினை பெருமளவு சரிசெய்யப்பட்டுள்ளது.
 ஆனால் கம்ப்யூட்டர் வைரசுக்கு எதிராக இன்னும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.
இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கணினியில் கோப்புகளை திறப்பதற்கு 300 டாலர் முதல் 600 டாலர் வரை (சுமார் ரூ.19 ஆயிரத்து 500 முதல் ரூ.39 ஆயிரம் வரையில்) பிட்காயின்களை செலுத்துமாறு கணினி திரையில் தோன்றியதாக தகவல்கள் 
வெளிவந்தன. அந்த வகையில் இதுவரை 22 ஆயிரம் பவுண்டுக்கு அதிகமாக (சுமார் ரூ.18¼ லட்சம்) 3 கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை இப்படி ஒரு இணைய தாக்குதல் நடந்தது இல்லை என்று யூரோபோல் (ஐரோப்பிய சட்ட அமலாக்கல் ஒத்துழைப்பு முகமை) கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 11 மே, 2017

மரணஅறிவித்தல் திரு நடராசா - சிவசுப்ரமணியம்.10.05.17

திரு நடராஜா சிவசுப்பிரமணியம்
அன்னை மடியில் : 20 ஏப்ரல் 1948 — ஆண்டவன் அடியில் : 10 மே 2017
யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-05-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பறுபதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சபேசன்(சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
இராசாத்தி(ஜெர்மனி), அம்பிகைவாசன் மயிலு(இலங்கை), தெய்வேந்திரம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைவதனா அவர்களின் அன்பு மாமனாரும்,
யோகேந்திரம்(ஜெர்மனி), நகுலேஸ்வரி(இலங்கை), சிவனேஸ்வரி(ஜெர்மனி), கணேஸ், காசிப்பிள்ளை, சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பொன்மணி, கிருஷ்ணப்பிள்ளை குணசேகரம், செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
சபேசன்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 11/05/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Alters- & Pflegeheim Lindenhof, Lindenstrasse 72, 9000 St. Gallen, Switzerland 
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 12/05/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Alters- & Pflegeheim Lindenhof, Lindenstrasse 72, 9000 St. Gallen, Switzerland 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/05/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/05/2017, 02:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 02:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 15/05/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 15/05/2017, 02:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 16/05/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
தொடர்புகளுக்கு
தவமணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41712441225
சபேசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41712601881
செல்லிடப்பேசி: +41765393346
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 10 மே, 2017

போக்குவரத்து சபைக்கு ஒரு நாளில் 83 மில்லியன் ரூபா வருமானம்!!

உலக தொழிலாளர்கள் தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு 83 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் கட்சிகளுக்காக வழங்கப்பட்ட பஸ்களில் மாத்திரம் 58.6 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பொதுவான பயண நடவடிக்கைகளிலும் கருத்திற் கொள்ள கூடிய வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக அரசாங்க விடுமுறை நாட்களில் அல்லது ஞாயிறு தினங்களில் தங்கள் தினசரி வருமானம் 68 மில்லியன் ரூபாய் எனவும் இம்முறை பாரிய அதிகரிப்பு ஒன்று காணப்பட்டுள்ளதாக 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே தின பேரணிக்காக இம்முறை வழங்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை மற்றும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய இந்த அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 6 மே, 2017

பஸ் நிலையத்தில் அனாதரவாக நின்ற சிறுவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில்

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (04) மதியம் தனியாக நின்ற சிறுவன் ஒருவனை பேருந்து நிலைய நேரக்கணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டள்ளது.
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியாக நின்று அழுதுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வவுனியா சாலையின் இ.போ. ச நேரக்கணிப்பாளர் அழைத்து விசாரித்தபோது வீடு செல்வதற்கு செட்டிகுளத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்துள்ளதாகவும் தனது பெயர் மயில்வாகனம் சுகாதாரன் 10 வயது எனவும் கிளிநொச்சி அக்கராஜன்குளம் என்று தெரிவித்தார்.
குறித்த சிறுவன் தற்போது பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டள்ளார்.
சிறுவனைப்பற்றிய தகவல் தெரிந்தால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இன்றுமுதல் நாட்டில் அடை மழைஎன திணைக்களத்தின் அறிவிப்பு



நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறித்த திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வட மத்திய மற்றும் தென் மாகாணத்தில் 75 மில்லி மீற்றர் அளவு கடுமையாக மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக இலங்கையில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரணஅறிவித்தல் திருமதி வள்ளிப்பிள்ளை செல்லத்துரை,04.05.17

பிறப்பு : 1 ஏப்ரல் 1917 — இறப்பு : 4 மே 2017
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
மங்கையற்கரசி(நல்லூர்), காலஞ்சென்ற பாலசிங்கம்(சுன்னாகம்), குலசிங்கம்(கனடா), குணசிங்கம்(லண்டன்), பகீரதி(கனடா), சத்தியேஸ்வரி(நல்லூர்), யோகசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஞானம்(நல்லூர்), இரத்தினேஸ்வரி(சுன்னாகம்), புஸ்பராணி(கனடா), பத்மாவதி(லண்டன்), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), பாலசிங்கம்(நல்லூர்), கலாநிதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஞானரூபன் மாலினி(நல்லூர்), கஜன்(கனடா), ஜனா(கனடா), ஆயன்(லண்டன்), அரண்(லண்டன்), அனிஜன்(நல்லூர்), நிதர்ஜன்(நல்லூர்), சுரேஸ் ஜான்சி(சுவிஸ்), றெனிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திருமால்(நல்லூர்), ஹெலி(கனடா), ரதியா(சுவிஸ்), அமிர்தா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி: 
பண்டாரக் குளம் மேற்குவீதி, 
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
_ — இலங்கை
செல்லிடப்பேசி: +94774677577
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 4 மே, 2017

யாழ் மயி­லிட்டி கிணற்­றி­ல் வெடி­பொ­ருள்­கள் மீட்பு!


அண்­மை­யில் விடு­விக்­கப்பட்ட மயி­லிட்டி வடக்­குத் துறை­யில், கிணற்­றி­லி ­ருந்து பெரு­ம­ளவு வெடி பொருள்­கள் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளன. 
இன்­றைய தின­மும் வெடி­பொ­ருள் மீட்­புப் பணி தொட­ரும் என்று 
தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 
மீள்­கு­டி­ய­மர்­வுக்­காக வீட்­டுக் கிணற்­றைத் துப்­பு­ரவு செய்­த­போதே, இந்த வெடி­பொ­ருள்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. 
3 ஆயி­ரம் துப்­பாக்கி ரவை­கள், 15 கைக்­குண்­டு­கள், அடை­யா­ளம் காணப்­ப­டாத குண்­டு­கள் 20 என்­பன நேற்று மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கிணற்­றி­னுள் இன்­ன­மும் வெடி­பொ­ருள்­கள் காணப்­ப­டும் நிலை­யில், அவற்றை மீட்­கும் பணி இன்று தொட­ரும் என்று
 பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 2 மே, 2017

மரணஅறிவித்தல் திருமதி சரவணமுத்து மகேஸ்வரி 30.04.17

தோற்றம் : 27 ஓகஸ்ட் 1938 — மறைவு : 30 ஏப்ரல் 2017
யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சரவணமுத்து அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வைரமுத்து தம்பதிகளின் 
அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு 
மனைவியும்,
தெய்வநாயகி, பத்மலோசி(சுவிஸ்), தெய்வராணி(சுவிஸ்), கேதீஸ்வரி  (இலங்கை) நல்லநாதன்(சுவிஸ்), சிவனேசன்(சுவிஸ்), சோதிநாதன்(கனடா), கிருபா(கனடா) ஆகியோரின் 
அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஐயராஐன், சிவகுருநாதன், முரளிதரன், உமா, கோசலா, தவராசா, சுயிதா, வியிதா, சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம்(சுவிஸ்), ராசமலர்(இலங்கை) ஆகியோரின்
 அன்பு மைத்தினியும்,
சஐந்தா, பாலசஐந்தன், லசந்தன், சிவறஞ்சித், நிவெஸ்திகா, நிருத்திகா, நிவேதன், சரண்யா, வாசன், வாகினி, விசாகன், டிலக்சி, கேசவன், பிரவீன், சாரங்கன், கபின், லதுஐன், நிருஷன் ஆகியோரின் 
அன்புப்பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2017 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி காலயன்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
யோகரத்தினம்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
நாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412404518
சிவனேசன்  (சிவன்)— சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435586419
செல்லிடப்பேசி: +41793543351
தெய்வராணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434999710
யோகரத்தினம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443026564
யோகரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779359548
தெய்வநாயகி — இலங்கை
தொலைபேசி: +9421790378
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 25 ஏப்ரல், 2017

மரணஅறிவித்தல் திருமதி மயில்வாகனம் தேவகி

பிறப்பு : 29 ஓகஸ்ட் 1951 — இறப்பு : 24 ஏப்ரல் 2017
யாழ். நெல்லியடி வதிரி, கல்வத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தேவகி அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்ஸன்(லண்டன்), குகநேசன்(லண்டன்), சிவநேசன், சிவரஞ்சன், இந்துஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், ராசகுலசிங்கம்(வவுனியா), சரஸ்வதி, மகேஸ்வரி, தர்மகுலசிங்கம்(லண்டன்), தனபாலசிங்கம்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(லண்டன்), ராஜேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருள்செல்வி(லண்டன்), பிரதீபா(லண்டன்), தர்மினி, காலஞ்சென்ற சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஜித், மிதுஷா, அனிஷ்கா, டனிஸ், கஜிநாத், டிருசிகா, சர்மிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கியை 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

தகவல்
செளமியா ஜெகன்
தொடர்புகளுக்கு
செளமியா ஜெகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447392408087
- — இலங்கை
தொலைபேசி: +94212263737
செல்லிடப்பேசி: +94770121083
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 15 ஏப்ரல், 2017

மோட்டார் தலைக்கவசம் அணியாது சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். சுன்னாகம் சந்தியில் இன்று பகல் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய
 வருவதாவது,
காங்கேசன்துறை வீதியில் இருந்து மூவர் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாது பயணம் செய்துள்ளனர்.
அவர்கள் மூவரையும் கண்ட பொலிஸார் வீதியில் மறித்துள்ள போதும், அவர்கள் பொலிஸாரின் உத்தரவிற்கு கட்டுப்படாமல் தப்பிச் 
சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் பொலிஸார் பின்தொடர்ந்து துரத்திக்கொண்டு சென்ற வேளையில் சுன்னாகம் சந்தியில் உள்ள சமிஞ்ஞை விளக்குப் போடப்பட்டிருந்த நிலையில் பாதையை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த வேனுடன் மோதியுள்ளனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதனால், அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 13 ஏப்ரல், 2017

மரணஅறிவித்தல் திருமதி செல்லையா சின்னத்தங்கம் 12.04.17

தோற்றம் : 8 யூன் 1933 — மறைவு : 12 ஏப்ரல் 2017
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிசில் லவுசானை  (Lausanne) வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சின்னத்தங்கம் அவர்கள் 12-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற எதிர்மனசிங்கம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
உலகநாதன், இரகுநாதன், முத்துலட்சுமி(கலா), செல்வச்சந்திரன்(சுவிஸ்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற துரைசிங்கம், சின்னத்தம்பி, செல்லையா, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதா, சிவபாலசுந்தரம்(இராசு), சசி, சாந்தி, சறோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 நிசாந்தன், சிந்துஜா, விதுசியா, தர்சனா, பிரவீனா, றாதினி, தயானி, ஜெசிக்கா, கீர்த்திகா, அஜந், அபிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நேகா, நவீன், சானியா, லெயானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 13/04/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 14/04/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/04/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/04/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/04/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
கிரியை
திகதி: புதன்கிழமை 19/04/2017, 01:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland 
தொடர்புகளுக்கு
சிவா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216256250
செல்லிடப்பேசி: +41796575140
உலகநாதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763811726
இரகு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788030089
சபேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930469796
செல்வன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796401276
சின்னத்தம்பி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41433009920
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 12 ஏப்ரல், 2017

மரணஅறிவித்தல் திருமதி செல்லையா சின்னத்தங்கம் 12.04.17

உதிர்வு:12.04.2017  
யாழ்  வல்வெட்டியை பிறப்பிடமாகவும்   சுவிஸ்சை  வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி:செல்லையா சின்னத்தங்கம் சுவிஸ்சில் . 12.04.2017.புதன்கிழமை.அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா  அவர்களின் பாசமிகு மனைவியும்
உலகராஜா( உலகநாதன்.சுவிஸ்)  ரகுநாதன்.(சுவிஸ்) செல்வம்.(சுவிஸ்) அவர்களின் தாயாருமாவார் 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
தொடர்புகளுக்கு.மகன் .செல்பேசி 0041 763811726
தகவல்
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 8 ஏப்ரல், 2017

முல்­லைத்­தீ­வில் விவ­சா­யியின் உயி­ரைப் பறித்­த விசர்நாயின் ­ கீ­றல்

விலங்கு விசர் நோய்த் தொற்­றுக்­குள்­ளான நாயி­னு­டைய  பல்­லின் சிறு­கீ­றல் விவ­சா­யி­யின் உயி­ரைப் பறித்த சம்­ப­வம் முல்­லைத்­தீ­வில் 
இடம்­பெற்­றுள்ளது.
முல்­லைத்­தீவு குமா­ர­பு­ரம் முள்­ளி­ய­வ­ளை­ யைச் சேர்ந்த 3 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான இரா­மையா சிவ­சாமி (வயது- –58) என்­ப­வரே இவ்வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.
குறித்த நபர் தண்­ணீ­ரைக் கண்­ட­தும் அவர் பயப்­பட்­டதை அடுத்து அவர் வைத்தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். எனி­னும் சிகிச்சை பய­னளிக்­காது அவர் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.
“கடந்த டிசெம்­பர் மாதம் விவ­சா­யி­யின் வளர்ப்பு நாய்க்­குட்டி அவ­ரைக் கௌவி­யது. அத­னால் நாய்க்­ குட்­டி­யின் பல்
 கீறி­யுள்­ளது. அவ்­வாறு கீறி­னா­லும் குருதி வர­வில்லை. சிறு கீறலே காணப்­பட்­ட­த­னால் அவர் கவ­னிக்­காது 
விட்­டு­விட்­டார்.
சில நாட்­க­ளின் பின் குறித்த நாய்க்­குட்டி அவ­ரது வீட்­டில் உள்ள பூனை உள்­ளிட்ட பிரா­ணி­க­ளைத் துரத்­திக் கடிக்­கத் தொடங்­கி­யது. அத­னால் நாய்க்­குட்­டி­யைப் பிடித்­துக் கட்­டி­யுள்­ள­னர். 3 நாள்­க­ளில் பின் நாய்க்­குட்டி 
இறந்­து­ விட்­டது.
சுமார் 4 மாதங்­க­ளா­கி­யுள்ள நிலை­யில் குறித்த விவ­சாயி தோட்­டத்­தில் பயிர்­க­ளுக்கு நீர் இறைத்­துக் கொண்­டி­ருந்­தார். தண்­ணீ­ரைக் கண்­ட­தும் அவர் பயத்தை உணர்ந்­தார். வீட்­டி­லும் தண்­ணீ­ரைக் கண்­ட­தும் அவர்
 பய­ம­டைந்­தார். 
வீட்­டி­லுள்­ள­வர்கள் அவ­ரின் செயற்பாட்டை அவ­தா­னித்­த­னர். அத­னால் அவரை மாஞ்­சோலை வைத்­தி­ய­சா­லை­யில் நேற்­று­முன்­தி­னம் சேர்த்­த­னர். அவ­ரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள் அவரை உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றி­னர். 
அவ­ருக்­குச் சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்­று­முன்­தி­னம் பிற்­ப­கல் 3.45 மணி­ய­ள­வில் அவர் உயி­ரி­ழந்­தார்” என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
உடற்­கூற்­றுப் ­ப­ரி­சோ­த­னை­யின்­போது அவ­ருக்கு விலங்கு விசர் நோய்த் தொற்று ஏற்­பட்­ட­த­னால் இறப்பு நிகழ்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை மேற்­கொண்டு உட­லத்தை நேற்று உற­வி­னர்­க­ளி­டம்
 ஒப்­ப­டைத்­தார்.

புகையிரதத்தில் யாழ் உட்பட பல இடங்களுக்கும் செல்பவர்களின் கவனத்திற்கு!.

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு இன்றில் இருந்து விசேட புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம், பண்டாரவளை, மருதானை, மாத்தறை, காலி போன்ற பல இடங்களுக்குமான புகையிரத சேவைகள் தொடர்பான விபரத்தினை இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படியில்,
கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏப்ரல் 12 ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதிகளில் விஷேட ரயில் சேவைகளும்,
கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை நோக்கி ஏப்ரல் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் 
காலை 11.30 மணிக்கும்,
கொழும்பு – கோட்டை மற்றும் மருதானையில் இருந்து வெயன்கொட மற்றும் தெற்கு களுத்துறை வரை ஏப்ரல் 14ஆம் திகதி 8 தடவைகள் சேவையும்,
அத்துடன், மஹவ, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கும் எதிர்வரும் 17ஆம் திகதி விஷேட ரயில் சேவைகளும் 
வழங்கப்பட்டுள்ளன.
மேலும், விசேட காலத்தினை கருத்திற்கொண்டு 3600 பேருந்து சேவைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>