siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 15 ஜனவரி, 2021

பெய்துவரும் அடைமழையினால் கிளிநொச்சியில் வெள்ளச்சேதம் அதிகம்

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு
 கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதில் சுமார் 20 வீதமான வயல் நிலங்கள் நீரில்
 மூழ்கியுள்ளதாக கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அறுடைக்கு தயாராக இருந்த நிலையில், அதிகளவான மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த அழிவுகள் 
ஏற்பட்டுள்ளன.
இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வரை(14) 807 குடும்பங்களைச் சேர்ந்த 2600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த  முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக