siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

தடுப்பூசி இன்று வடக்கில் 1530 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகத்தெரிவிப்பு

வட மாகாணத்தில் COVID-19 தடுப்பூசி இன்று 1530 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடக்கில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
இன்று, யாழ்ப்பாணம் – 875, மன்னார் – 200, வவுனியா – 210, முல்லைத்தீவு – 145, கிளிநொச்சி – 100 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 15% வடக்கு சுகாதார பணியாளர்கள் இன்று தடுப்பூசி பெற்றனர். நேற்றும் இன்றுமாக- இரு நாட்களும் 45% பணியாளர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.தடுப்பூசி செலுத்தும் பணி நாளையும் தொடரும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக