siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 10 ஏப்ரல், 2023

சலேம்பூர் கிராமத்தில்திருமண வைபவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள்

இந்தியாவில் தனது திருமண வைபவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள் ஒருவரை உத்தரபிரதேச மாநில பொலிஸார் 
தேடி வருகின்றனர்.
திருமண மேடையில் மணமகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மணமகள், கைத்துப்பாக்கி ஒன்றினால் 4 தடவைகள் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
மணமகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நபர் அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்துள்ளார். 4 தடவைகள் சுட்ட பின்னர் அத் துப்பாக்கியை அந்நபரிடமே மணமகள் திருப்பிக் கொடுக்கும் காட்சியும் வீடியோவில் 
பதிவாகியுள்ளது.
சலேம்பூர் எனும் கிராமத்தில்.07-04-2023. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
 நிலையில், இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக