siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 2 ஆகஸ்ட், 2023

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஒலிபரப்பாளர் திரு விமல் சொக்கநாதன் லண்டனில் விபத்தில் உயிரிழப்பு

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஐபிசி வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான.திரு விமல் சொக்கநாதன் லண்டனில் நேற்று மாலை அகால மரணமடைந்தமை புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக சென்றபோது தொடருந்து மோதியதால் துன்பியல் விபத்து நடந்ததாக 
தெரியவந்துள்ளது.
இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் மறைந்துள்ளார்.
இலங்கை வானொலிக்கு பின்னர் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்த விமல் சொக்கநாதன் அதன் பின்னர் ஐபிசி வானொலி ரி.ரி.என் தொலைக்காட்சி, ஜிரிவி தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தொலைக்காட்சி ஆகிய புலம்பெயர் ஊடகங்களில் செய்தி மற்றும் நடப்புவிவகார தளத்தில் தனித்து 
சேவையை வழங்கியவர்.
விமல் சொக்கநாதன் அவர்களின் மரணம் புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவரது மறைவை முன்னிறுத்திய இரங்கல் செய்திகளை அவரது ஊடகத்துறை நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் இலங்கையில் தனது நூல் வெளியீட்டை நடத்தச் சென்ற
திரு விமல் சொக்கநாதன் கடந்த மே மாதம் எமது யாழ் கலையகத்துக்கு வருகை தந்து சிறப்புச் செவ்வியொன்றை வழங்கியிருந்தமை என்பதும் குறிப்பிடத்தக்கது  
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
.தகவல்:குடும்பத்தினர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக