siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

மனைவி மற்றும் மகனை கொன்று அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்

அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மாநிலம் மேரிலேண்ட் (Maryland). இங்குள்ள பால்டிமோர் (Baltimore) நகரத்தில் வசித்து 
வந்த இந்தியர், கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தை 
சேர்ந்த யோகேஷ் (37). இவரது மனைவி பிரதீபா (35). இவர்களது
 ஒரே மகன் யாஷ் (6).
கணவன், மனைவி இருவரும் பொறியாளர்கள். இவர்கள் பால்டிமோரில் கடந்த 9 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். யோகேஷின் தந்தை பல வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டதால், அவரின் தாய் மட்டும் தனியாக தாவண்கரேயில் வசித்து வருகிறார். 
அமெரிக்காவில் நடைபெறும் வழக்கமான ஒரு ரோந்து ஆய்வில் நேற்று முன்தினம் இவர்கள் வீட்டிற்கு காவல்துறையினர் 
சென்றனர். அப்போது அவர்கள் மூவரும் உயிரிழந்து கிடந்தது 
தெரியவந்தது. 
அவர்கள் மூவர் உடலிலும் துப்பாக்குச் குண்டு பாய்ந்ததற்கான அடையாளங்கள் இருந்தது. முதல் கட்ட விசாரணையில் யோகேஷ், தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 
இந்தியாவில் உள்ள அவரது தாயாருக்கும், உறவினர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 
இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் 
செய்வதாக கூறியுள்ள பால்டிமோர் காவல்துறை, இந்த சம்பவத்தை இரட்டை கொலை மற்றும் தற்கொலை வழக்காக தீவிரமாக 
விசாரித்து வருகிறது. 
 யோகேஷ் இப்படிப்பட்ட முடிவை ஏன் எடுத்தார் என்பதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.எனவும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக