siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 28 மார்ச், 2017

இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6 பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களில் 7 மாணவர்கள் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பவர்களாகும். அந்த 10 பேரும் நகர பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும். அதற்கமைய கொழும்பு விஷாக்கா...

வெள்ளி, 17 மார்ச், 2017

வர்த்தக நிலையம் உடைத்து வவுனியாவில் திருட்டு!

வவுனியாவில் மருந்தக விற்பனை நிலைமொன்று உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள மருந்தக விற்பனை நிலைமொன்றில் இன்று அதிகாலை  இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பா டு  செய்துள்ளார். நேற்று (16) இரவு 9.00மணியளவில் வழமை போன்று வர்த்தக நிலையத்தினை பூட்டி விட்டு சென்றதாகவும், இன்று (17) காலை 7.00...

வாகனவாகனத்தை போதையில் செலுத்தியவருக்கு 24 ஆயிரம் ரூபா தண்டம்

ஆவணங்கள் எதுவுமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தி  பொலிஸாரின் சமிக்ஞையை மதிக்காத நபருக்கு 24 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து, சாவகச்சேரி நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய சாலைப் போக்குவரத்துப் பொலிஸார்  அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியபோது நிறுத்தாமல் சென்றதால் துரத்திப் பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் சாரதி  அனுமதிப் பத்திரம் வாகன வரிப் பத்திரம் காப்புறுதிப் பத்திரம் ஆகியவை...

மானிப்பாயில் வீட்டில் வாள் வைத்திருந்த இளைஞர் கைது!

யாழ் – மானிப்பாய் பகுதியில் வாள் வைத்திருந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து  யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மானிப்பாய் வீதியை சேர்ந்த பிரணவன் என்ற 19 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டவர் ஆவார். இவரிடம் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய உபபொலிஸ்  பரிசோதகர் தெரிவித்தார் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

யாழில் மது போதையில் வாகனம் செலுத்தியவர் கைது?

மது போதையில் வாகனத்தை செலுத்திய நபரொருவர் யாழ் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நுவரேலியா பகுதியை சேர்ந்த ரவிந்திரன் சோபனபாலா என்ற 25 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவர் ஆவார். குறித்த நபர் நேற்று இரவு 11.30 மணியளவில்  யாழ் பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மலையகத்திலிருந்து யாழ் நோக்கி வந்த கனரன வாகனம் ஒன்றினை மறித்த  போக்கு வரத்து பொலிஸார் அதனை பரசோதித்த சமயமே சாரதி மது போதையில்...

புதன், 15 மார்ச், 2017

மரணஅறிவித்தல் திருமதி பரமலிங்கம்.புஸ்பமலர்.15.03.17

உதிர்வு:15.03.2017   யாழ்  நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கனடாவை   வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி:பரமலிங்கம்.புஸ்பமலர். றாம் இந்துவின் மாமியின் ( Ram )  அவர்களின் தாயார்-  கனடாவில். 15.03.2017.புதன்கிழமை..அன்று காலமானார்  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்   கண்ணீர்...

செவ்வாய், 14 மார்ச், 2017

மரண அறிவித்தல் திரு கந்தையா சுப்பிரமணியம்

பிறப்பு : 29 மே 1932 — இறப்பு : 12 மார்ச் 2017 யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், இராசமணி(முத்தம்மா) அவர்களின் கணவரும், இரஞ்சினி, சாந்தினி, இரவீந்திரன், காலஞ்சென்ற மகேந்திரன், சுபாஷினி ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சின்னத்துரை, மாணிக்கம், மற்றும் மயில்வாகனம் ஆகியோரின் சகோதரரும், ரவீந்திரராஜா, மதிவதனா ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான...

திங்கள், 13 மார்ச், 2017

அக்கா, தங்கையின் வாழ்வை முகநூலில் சீரழித்த இளைஞர்கள் விளக்கமறியலில்!

வெல்லம்பிட்டி, வடுகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரசாஞ்சன என்ற ஜனக்க சுதர்ஷன மற்றும் ஜேசுபால என்ற தில்ஷான் ஆகிய இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது, முகநூலில் அறிமுகமான அக்கா மற்றும் தங்கையின் நிர்வாணப் படங்களை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக கூறி இரண்டு இளைஞர்கள் அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தியுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த...

நான்கு வயது சிறுமியை மது போதையில் மோதி தள்ளிய வைத்தியர் !

கண்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர். இதில் படுகாயத்திற்கு உள்ளான மூவரும் சிகிச்சைகளுக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி பொதுமருத்துவமனையில் வைத்தியராக பணிபுரியும் ஒருவரின் காரே முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. விபத்தினை தொடர்ந்து, குறித்த காரை செலுத்தி வந்த வைத்தியர் கைது செய்யப்பட்டதுடன் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து...

ஞாயிறு, 12 மார்ச், 2017

மரண அறிவித்தல் திரு சோமசுந்தரம் கருணாகரன்

  மலர்வு : 2 நவம்பர் 1967 — உதிர்வு : 8 மார்ச் 2017 யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும், மீசாலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கருணாகரன் அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சோமசுந்தரம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகந்தா அவர்களின் அன்புக் கணவரும், மனோ, சிறி, மதி, சிவமதி(சுதா), ரவி, தர்ஷா ஆகியோரின்  அன்புச்...

புதன், 8 மார்ச், 2017

பட்டப்பகலில் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் திருட்டு !

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சிப் பொதுச்சந்தை வளாகத்தினுள் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கில் நேற்று முன்தினம் காலை 10.50 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளது. இவ் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று  கரைச்சிப்பிரதேச சபையின் அனுமதியுடன் குறித்த வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த...

செவ்வாய், 7 மார்ச், 2017

கர்ப்பிணிகள் ,குழந்தைகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வரவேண்டாம்?

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலைக்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாடெங்கிலும் அசாதாரண காலநிலைகள் காரணமாக பல தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக (டெங்கு, சளிசுரம்-இன்புளூவென்சா வகைக் காய்ச்சல் மற்றும் பல்வேறு சுவாசத் தொற்று) தொடர்பில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் வைத்தியசாலை விடுதியில் இருக்கும்...

மோட்டார் சைக்கிள் நின்ற லொறியுடன் மோதி ஒருவர் படுகாயம்?

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சமடத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று தீடீரென பழுதடைந்து நின்றதையடுத்து பின்னால் வந்து  மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திவந்த 54 வயதுடைய பெரியகல்லாற்றைச் சேர்ந்த கே.கிருபாகரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார் இதேவேளை...

ஞாயிறு, 5 மார்ச், 2017

குடும்பஸ்தர் மீது நெல்லியடிப் பகுதியில் பொலிஸார் கொடூரத் தாக்குதல்!

பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் மீது பொலிஸார் கடுமையாக தாக்குதல் நடத்தியதில் உடல் உபாதைக்குள் உள்ளான குடும்பஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் பொலிஸாருக்கும் பிரஸ்தாப நபருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் போதே குடும்பஸ்தர் தாக்குதலுக்குள்ளா...

காவாலிகளுக்கிடையில் சாவகச்சேரியில் மோதல்- வாள் வெட்டுக்கு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வாள்வெட்டாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் சாவகச்ரேி, சோலையம்மன் கோவிலடியில் இன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சோலையம்மன் கோவிலடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டாக மாறியுள்ளது. இதில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவரில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,...

டெங்கு நோய்த் தாக்கி யாழில் இளம் தாய் நந்தகுமார் லக்ஷி பலி!

டெங்கு நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு சென்ற இளம் தாய் ஒருவர் நேற்று முன்தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சிவப்பிரகாசம் வீதியை சேர்ந்த நந்தகுமார் லக்ஷி (வயது 34) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே மேற்படி உயிரிழந்தவராவார்.  குறித்த பெண்னுக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் இருந்தகாரணத்தால்  தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் நேற்றைய தினம்...

வெள்ளி, 3 மார்ச், 2017

உண்ணாவிரதப் போராட்டத்தில்இந்தோனேசியாவில் ஈடுபட்டு வரும் ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமம்

 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்தோனேசியாவில் ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவருக்கே உடல் நிலை  பாதிக்கப்பட்டுள்ளது குறித்த நபர் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட...

இலங்கை வருகின்றது சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் அதிவேக கப்பல்!!

 !அமெரிக்க கடற்படையின் அதிவேக கப்பலான ‘யு.எஸ்.என்.எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வருகைத்தருகின்றது. சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி இந்தக் கப்பல் நேற்று புறப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதலாவது மனிதாபிமான மற்றும் அனர்த்த, நிவாரண முன்னாயத்த ஒத்திகையை மேற்கொள்வதற்காக, அமெரிக்க கடற்படையின் இந்த அதிவேக போக்குவரத்துக் கப்பல் ஹம்பாந்தோட்டை நோக்கி வருகின்றது. அவுஸ்ரேலியா, ஜப்பான், தென்கொரியா,...

புதன், 1 மார்ச், 2017

மாணவி சிறுநீரை அடக்கியதால் சிறுநீரகமே செயலிழந்து பறித்தன மரணம்

15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர். அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை மருத்துவரும் அச்சிறுமியின் பெற்றோரும் அறிய வந்தனர். என்னவெனில் அச்சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது என்பது. அச்சிறுமியின் பெற்றோர் கலங்கி விட்டனர். எவ்வாறு இந்த பெரிய சங்கடம் உருவானது என்று மருத்துவர்...