மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சமடத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று தீடீரென பழுதடைந்து நின்றதையடுத்து பின்னால் வந்து 
மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திவந்த 54 வயதுடைய பெரியகல்லாற்றைச் சேர்ந்த கே.கிருபாகரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்
இதேவேளை படுகாயமடைந்த நபரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்
இதேவேளை படுகாயமடைந்த நபரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்








 
 
 
 
 
 
 
 
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக