siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 3 மார்ச், 2017

உண்ணாவிரதப் போராட்டத்தில்இந்தோனேசியாவில் ஈடுபட்டு வரும் ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமம்

 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்தோனேசியாவில் ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவருக்கே உடல் நிலை 
பாதிக்கப்பட்டுள்ளது
குறித்த நபர் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் ஈழத் தமிழர்கள் சிலர் இந்தோனேசியாவில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர்.
இவ்வாறு புகலிடம் கோரிய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350 ஈழத்தமிழர்கள் குடும்பங்களாகவும், தனி நபர்களாகவும் இந்தோனேசியாவின் மெடான் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பியனுப்பப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தம்மை திருப்பி அனுப்பவேண்டாம் எனவும் அகதி அந்தஸ்து வழங்கி வேறு நாடுகளில் தம்மை மீள்குடியேற்றுமாறும் குறித்த மக்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது உணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், உலகத் தமிழர்கள் அனைவரும் எமது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுதருமாறு 
கேட்டுக்கொண்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக