siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 7 மார்ச், 2017

கர்ப்பிணிகள் ,குழந்தைகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வரவேண்டாம்?

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலைக்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடெங்கிலும் அசாதாரண காலநிலைகள் காரணமாக பல தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக (டெங்கு, சளிசுரம்-இன்புளூவென்சா வகைக் காய்ச்சல் மற்றும் பல்வேறு சுவாசத் தொற்று) தொடர்பில் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் வைத்தியசாலை விடுதியில் இருக்கும் நோயாளரைப் பார்வையிடுவதற்கு வருகைத் தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக கர்ப்பிணிகள் , குழந்தைகள் எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிவிடுவார்கள். இதனால் அவசியமற்ற வகையில் இவர்கள் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக