siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

பெருமகிழ்ச்சியான செய்தி..தங்கத்தின் விலையில் திடீர்ச் சரிவு

தங்கத்தின் விலை கடந்த வாரம் முதல் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்குக் கீழே வந்த நிலையில் பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.ஆனால், மீண்டும் தங்கம் பவுன் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது.இதனிடையே கடந்த 24 ஆம் திகதி முதல் விலை குறைந்தது. மறுநாள் தங்கம் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.34 ஆயிரத்து 904க்கு விற்றது. இந்த நிலையில், இன்று 4-வது நாளாக விலை குறைந்தது.சென்னையில்28-02-2021,...

சனி, 27 பிப்ரவரி, 2021

நினைவஞ்சலி திருமதி சின்னத்துரை கமலாம்பிகை 27.02.21

திதி -.27-02.2021யாழ்.அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும்கனடாவை  வதிவிடமாககொண்டிருந்த திருமதி சின்னத்துரை கமலாம்பிகை அவர்களின் ஆறாம் ஆண்டு ஆறாம் ஆண்டு.நினைவஞ்சலி 27 ,02 2021 சனிக்கிழமை அன்று நீங்காத நினைவுகள் காலங்கள் கடந்தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்அன்பென்ற சொல்லின் அர்த்தமும் மறந்துவிட்டது உங்கள் மறைவுடனேஉண்ணும் உணவும் சுவை இழந்துவிட்டது போல்உணர்கின்றோம் உங்கள் கைகள்  படாததனால்கேட்டவை எல்லாம் கிடைக்கும்...

கொள்ளுபிட்டியில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை

கொழும்பு, கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள ஒரு முன்னணி தனியார் வைத்தியசாலையின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னணி தொழிலதிபரின் 30 வயதுடைய புதல்வர் எனவும் கூறப்படுகின்றது.மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் நிலாவரை.கொம்...

தியலும நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 9 வயதுச் சிறுவன்

தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி 9 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.26-02-2021,நேற்று வெள்ளிக்கிழமை மாலை நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது அவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிறுவனின சடலத்தை குறித்த கிராம பகுதி மக்கள் அனைவரும் இணைந்து நீர்வீழ்ச்சியிலிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.மேலும், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மாகந்துரை, மாவரெல்லை பகுதியைச்...

வியாழன், 25 பிப்ரவரி, 2021

நாட்டில் இன்றுடன் முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் நிறைவு

  நாட்டில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள்,25-02-2021, இன்று நிறைவடைகின்றன.இதனிடையே, 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில், இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக...

புதன், 24 பிப்ரவரி, 2021

கோர விபத்து.யாழ். ஏ9 வீதி சாவகச்சேரியில் இளைஞன் மரணம்

தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவம் 23-02-2021.அன்று, மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும் கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.இதில், நெல்லியடியை சேர்ந்த ஜெகன் அன்ரனி சியம் (வயது...

மரண அறிவித்தல் திருமதி இரசரட்ணம் செல்லம்மா 24-02 -2021.

பிறப்பு-08-03-1940--இறப்பு-24-02 -2021.யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரசரட்ணம் செல்லம்மா அவர்கள்.24-02-2021, புதன்கிழமை  இன்று இயற்கை எய்தினார்.  . அன்னார்,திரு . இரசரட்ணம்அவர்களின்,அன்புமனைவியும் செல்வரத்தினம் (இலங்கை )அருளம்மா (இலங்கை ) தாமோதரம்பிள்ளை (சுவிஸ் ) செல்வச்சரஸ்வதி (இலங்கை ) கனகலிங்கம்  (சுவிஸ் ) மகிளேஸ்வரி (இலங்கை )பாலசுந்தரம் (இலங்கை )ஆகியோரின்  பாசமிகு தாயாரும் ...

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

தொண்டமானாற்றுக் கடலில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார் என்று ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு கடலில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டார்.உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்தார் என்று...

மரண அறிவித்தல் திரு சிவசம்பு இந்திரகுமார் வசீகரன் 20 02 -2021

 இறப்பு-20 02 -2021  யாழ்/.தோப்பு அ ச் வேலியை பிறப்பிடமாகக் கொண்ட  திரு சிவசம்பு  இந்திரகுமார் அவர்களின் புதல்வன்  தோப்பு  அச்சுவேலியையும் புத்தூரையும் பிறப்பிடமாகவும் , கனடாவைவதிவிடமாகக் கொண்டதிரு திருமதி  இந்திரகுமார் ஞானசீலி தம்பதிகளின்  அன்பு மகன் வசீகரன் அவர்கள் 20.02.2021 சனிக்கிழமை இறைவனடி எய்தியுள்ளார்  நல்லடக்கம் பின்னர் இதே இணையத்தில் இணக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்...

சனி, 20 பிப்ரவரி, 2021

மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளிய பட்டா ரக வாகனம் வவுனியாவில் ஒருவர் .படுகா.யம்

வவுனியா இலுப்பையடி சந்தி மரக்கறி சந்திக்கு அருகாமையில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியதில் ஒருவர் ப.டுகாய.மடை.ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலுப்படிசந்தியில்  20.02.2021,இன்று,இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து ச.ம்ப.வம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,ஹோரவப்போத்தானை வீதியுடாக கோழி இறைச்சி சந்தை நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் வீதியில் முன்பாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியதுடன்...

நல்லூர் கோவில் வீதியில் மிதிவண்டியில் பயணித்த முதியவர் மயங்கி விழுந்து மரணம்

யாழ் நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையில் இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க சென்ற 75 வயதுடைய முதியவர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் .கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு வீதியில் மிதி வண்டியில் பயணித்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

அகாலமரணம் திரு தவநேசன் ஜதுர்சன் 19 02 -2021

பிறப்பு-27 -01-1995--இறப்பு-19 02 -2021யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு தவநேசன் ஜதுர்சன் (யாழ் இந்துக் கல்லூரி,பழைய மாணவன் - அச்செழு Smart Holdings நிறுவன உரிமையாளர்)அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இராஜேஸ்வரி தம்பதிகள், பாலகிருஷ்ணன் ஸ்ரீ மகா யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும், தவநேசன் ஜெயந்தி தம்பதிகளின் அன்பு மகனும், துவாரகா(பிரான்ஸ்),...

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

இன்று அதிகாலை கிளிநொச்சி நகரில் கோர விபத்து..சாரதிக்கு நேர்ந்த கதி.

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.நெல் ஏற்றி சென்ற பாரஊர்தியின் சாரதி துயில்வதற்காக...

வியாழன், 18 பிப்ரவரி, 2021

மரண அறிவித்தல் திரு நாகலிங்கம் பத்மநாதன் 17 02-21

பிறப்பு-28 02-1956--இறப்பு-17 02-2021யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பத்மநாதன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று காலமனார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், நாகலெட்சுமி(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும், நிரோஷன், அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கிருத்திகா அவர்களின்...

வத்தளையில் வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் லொறி மோதி மரணம்

 வத்தளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.18-02-2021, இன்று காலை வீதி கடவையில், வீதியை கடக்க முற்பட்டபோது, எதிரே வந்த  லொறி மோதிச் சென்றதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, காயமடைந்த குறித்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். வத்தளை பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான சசிகலா ஜெயதீஸ்வரன் என்ற ஆசிரியை ஒருவரே...

புதன், 17 பிப்ரவரி, 2021

வவுனியாவில் வெளிநாட்டு பண விவகாரம் ஆறு பேர் கைது

¨  வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக வவுனியா காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய. ஆறு பேர்.16-02-2021 நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வங்கிக்கணக்கில் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவி செய்வதாகவும்...

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

மரண அறிவித்தல்,அமரர் சின்னத்துரை சிவபாக்கியம் (பாக்கியம்)16 -02- 21

தோற்றம்-02-04-1945-மறைவு-16 -02- 2021யாழ். நல்லூரை  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்துரை சிவபாக்கியம் (பாக்கியம்) அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை  அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரைஅவர்களின் பாசமிகு மனைவியும் ஆவர் அன்னார் கலைச்செல்வி (செல்வி,சுவிஸ் )  அவர்களின்அன்புத்தாயாரும் திரு  அம்பலவாணர் இராஜேஸ்வரன்(ராஜன்.சுவிஸ் )அவர்களின் அன்பு மாமியாரும் ஆவர்   அன்னாரின் இறுதிக்கிரியை...

திங்கள், 15 பிப்ரவரி, 2021

கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்து வெள்ளவத்தையில் இளைஞன்மரணம்

வெள்ளவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 7.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த நபர் கட்டடத்தில் பணியாற்றும் நபர் அல்ல என்ன தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 30 வயதுடைய நபராகும். எனினும் அவரது அடையாளங்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என...

பதுளையில் பாடசாலைக்குச் சென்ற இரட்டையர்களில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்

பதுளையில் தரம் 1 மாணவர்கள் பாடசாலைகளில் ,15-02-2021,இன்று இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். தனது வாழ்க்கையில் முதன்முறையாக இன்று பாடசாலைக்கு அடியெடுத்து வைக்கும் கனவுடன் சென்ற மாணவனொருவனே பரிதாபகரமாக உயிரிழந்தார்,15-02-2021.இன்று காலை 7.20 மணியளவில் பதுளை பெட்ரோல் நிலையம் முன் பாரவூர்தி மோதி மாணவன் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்யாலயாவின் முதல் வகுப்பு மாணவரான, அசெலபுரவில் வசிப்பவரான சிவனேசன் வருண் (6) என அடையாளம்...

வியாழன், 11 பிப்ரவரி, 2021

சுங்கான் குழி குளத்தில் தோணி கவிழ்ந்து மீனவர் பலி

கிண்ணியா சுங்கான் குழி குளத்தில் 10-02-2021.அன்று மாலை 6.30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை தோணி கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.நடு ஊற்று சுனாமி குடியேற்றத் திட்டத்தில் வசித்து வந்த 2 மீனவர்கள் நேற்று புதன்கிழமை மாலை சுங்கான் குழி குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.இவ்வாறு காணாமல் போனவர் 77 வயதுடைய நபர் என தெரியவருகிறது.இருவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை தோணி கவிழ்ந்ததை...

புதன், 10 பிப்ரவரி, 2021

நாட்டில் நுண்கடனை பெற்றுக்கொண்டசுமார் 200 பெண்கள் தற்கொலை

மது அவசர தேவைக்கென நுண்கடனை பெற்றுக்கொண்டநிலையில் அதனை திரும்ப செலுத்த முடியாமல் சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்தோடு நுண்கடனை செலுத்த முடியாத பெண்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் பாலியல் இலஞ்சமும் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலே அவர்கள் இவ் விபரீத முடிவை எடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.மேலும் இந்த நுண்கடன் திட்டத்தின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த...

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

சந்தனவெட்டையில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு சிறுவன் மரணம்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.09-02-2021. இன்று  காலை இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சந்தனவெட்டை வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் இந்திரன் ரஜீதன் எனும் 8 வயதுச் சிறுவன் என,சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த இச்சிறுவன் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட சிறிய குடும்பத்தின் முதலாவது...

கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு

வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இன்றையதினம் வீட்டில் யாருமற்ற நிலையில் அவரது தங்கையுடன் குறித்த சிறுமி இருந்துள்ளார்.இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கியிருப்பதை அவதானித்த அவரது தங்கை அயலவர்களிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.கற்குழி...

திங்கள், 8 பிப்ரவரி, 2021

மரண அறிவித்தல் திரு கந்தையா தனபாலசிங்கம் (தனபால்)08 .02-.21

தோற்றம்-01-08-1953-மறைவு-08 -02- 2021யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தனபாலசிங்கம்(முருகா லொறி உரிமையாளர்.தனபாலன் )  அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பவளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும், சயந்தன்(பிரான்ஸ்), சஜீவன்(ஜேர்மனி), சாருதன்(பிரான்ஸ்),...