siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 3 பிப்ரவரி, 2021

மன்னார் வீதியில் கனரக வாகனத்துடன் மோதிய உந்துருளி விபத்து..இளைஞன்பலி

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றதுஇன்று காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற இந்த விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார 
பணி உதவியாளராக கடமாற்றும் அடம்பன் பகுதியை
 சேர்ந்த ரி.எம். சல்மான் வயது-29 என்பவரே 
உயிரிழந்துள்ளார்.உயிலங்குளம் பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனமும்,அடம்பனில் இருந்து மன்னார் வீதியூடாக 
பயணித்த மோட்டார் சைக்கிளும் மேதியே விபத்து ஏற்பட்டுள்ளது.இதன் போது 
படுகாயம் அடைந்த குறித்த இளைஞன், அடம்பன் பிரதேச
 வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்
 உயிரிழந்தார்.சம்பவ 
இடத்திற்கு சென்ற அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு, குறித்த வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் கடமை முடித்து 
வீடு நோக்கி செல்லும் போதே, குறித்த விபத்து
 இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக