siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

தொண்டமானாற்றுக் கடலில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற
 நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார் என்று ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு கடலில் இருந்து
 சிறுவன் மீட்கப்பட்டார்.
உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது-17) என்ற சிறுவனே கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த இடர் இடம்பெற்றது.சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக