siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 27 பிப்ரவரி, 2021

நினைவஞ்சலி திருமதி சின்னத்துரை கமலாம்பிகை 27.02.21

திதி -.27-02.2021யாழ்.அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும்கனடாவை  வதிவிடமாககொண்டிருந்த திருமதி 
சின்னத்துரை கமலாம்பிகை அவர்களின் ஆறாம் ஆண்டு 
ஆறாம் ஆண்டு.நினைவஞ்சலி 27 ,02 2021 சனிக்கிழமை அன்று 
நீங்காத நினைவுகள் 
காலங்கள் கடந்தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்
அன்பென்ற சொல்லின் அர்த்தமும் மறந்துவிட்டது உங்கள் மறைவுடனே
உண்ணும் உணவும் சுவை இழந்துவிட்டது போல்
உணர்கின்றோம் உங்கள் 
கைகள்  படாததனால்
கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
ஆன்மா சாந்திக்காக போதிப்பிள்ளையார் 
அருள் வேண்டி பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
  ஆறாம்  ஆண்டு  நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி 1 ஓம் சாந்தி 

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக