siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 10 ஜூலை, 2020

நாட்டில் கொரோனா காலப்பகுதியில் செலுத்தாத தவணைப் பணத்திற்கு 7 வீத வட்டி

இலங்கையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசாங்கம் வழங்கிய சலுகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்தாத கடன் தவணைப் பணத்திற்கு வட்டி அறவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.அவ்வாறு செலுத்தாத தவணை பணத்திற்கு மேலதிகமாக நூற்றுக்கு 7 சதவீத அதிகபட்ச வட்டியை வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.புதிய 
நிதிக் கொள்கை மதிப்பாய்வு தொடர்பில் கருத்த வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட தலைவர் நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, கடனை புதுப்பித்து மாத்திரமே இந்த மேலதிக வட்டியை அறவிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக