siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 15 ஜூலை, 2020

நாட்டில் யாழ் உட்பட 16 மாவட்டங்களில் கொரொனா வேகமாக பரவும் அபாயம்

இலங்கையில் 16 மாவட்டங்களில் கொரோனா அபாயம் காணப்படும் நிலையில், இந்த 16 மாவட்டங்களிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.குறித்த 
16 மாவட்டங்களில் வடமாகாணத்தில் ஒரு மாவட்டமான யாழ்.மாவட்டமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாவது,
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பைப் பேணிய நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை 
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.கம்பஹா, பொலன்னறுவை, காலி, கொழும்பு, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கேகாலை, 
மொனராகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், 
மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.கொழும்பு மாவட்டத்தில், கொனஹேன, கொடிகமுவ, உடுமுல்ல, இரத்மலானை, ஒருகொடவத்தை, மெத்தேகொடை, கெஸ்பேவ, 
கொஹுவல, ராவத்தவத்த, கொழும்பு 05,08,09,10,13 மற்றும் 15, கிராண்ட்பாஸ், உஸ்வட்டகெட்டியாவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.மேலே
 குறிப்பிடப்பட்ட 16 மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார 
வழிகாட்டுதல்களுக்கு இணங்க செயல்படுமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின செயலாளர் கேட்டுக்கொண்டார். ஏனெனில் சமூகத்தில் கொரோனா மேலும் பரவுவதனால், நாட்டில் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் .கடுமையாக பாதிக்கும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக