siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 31 ஜூலை, 2020

மாத்தறையில் பெற்றோரின் அசமந்தத்தால் விபத்துக்குள்ளான குழந்தை



மூன்றரை வயதுக் குழந்தையை முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று
மாத்தறை வலஸ்ஸமுல்ல பாடசாலைக்கு அருகில் 30-07-20.
அன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தையின் தந்தையின் முச்சக்கர வண்டியானது ரயர் மாற்றுவதற்காக ஓரமாக நிற்பாட்டப்பட்டிருந்த வேளை, குழந்தை முச்சக்கரவண்டியிலிருந்து குதித்து சாலையை விளையாட்டாக கடக்க முற்பட்ட போது எதிரே வந்த இன்னொரு முச்சக்கரவண்டி
மோதியுள்ளது.
மயிரிழையில் உயிர் தப்பிய குறித்த குழந்தை பலத்த காயங்களுக்கு உட்பட்டு வலஸ்ஸமுல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
குறித்த குழந்தையின் பெற்றோரின் அசமந்தப் போக்கும் இந்த விபத்துக்கு ஒரு காரணமாக அமைகிறது. எதுவும் அறியா பிஞ்சுக் குழந்தைகளின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அனைத்து பெற்றோர்களின் பொறுப்பாகும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக