யாழ் தென்மராட்சி – மீசாலை வடக்கை சேர்ந்த முதியவர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு சாவடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (11) காலை கொடிகாமம் மிருசுவில் பகுதியில் இடம்பெற்றது.
வலிப்பு நோயாளியான இவரை நித்திரை விழிக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தபோதும் தனது குலதெய்வம் கோவில் வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்டு
இரவு நித்திரை விழித்திருந்தார் எனவும், இன்று காலையில் வலிப்பு ஏற்பட்டு சாவடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மீசாலை வடக்கு புத்தூர் சந்தியில் தற்காலிகமாக வசிக்கும் வீரசிங்கம் தெய்வேந்திரம் (61-வயது) என்பவரே இவ்வாறு
சாவடைந்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக