siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 15 ஜூலை, 2020

யாழ் சாவகச்சேரியில் கோர விபத்து ரயிலுடன் மோதுண்டு நபர் பலி

யாழ் சாவகச்சேரிப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (15) காலை 10 மணியளவில் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் தனக்களப்பு வீதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் இன்று காலை 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த ரயிலுடனே குறித்த வயோதிபர் மோதுண்டுள்ளார்.சடலம் அடையாளங் காணப்படாத நிலையில்’கனேமுல்லை’ பகுதிக்குப் பயணிக்கவிருந்த 
ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.சடலம் சாவகச்சேரி 
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தா, தற்கொலையா என்ற கோணத்தில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக