siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 6 ஜூலை, 2020

யாழ். நீர்வேலிக்கு வெளி நாட்டில் இருந்து வந்தவர் அடித்துக் கொலை

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் அயலவரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர்.05-07-20. அன்று
  உயிரிழந்துள்ளார்.யாழ். நீர்வேலி மேற்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான, செல்வநாயகம் ஜெயசிறி
 என்பவருடைய மரணம் குறித்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த முப்பது வருடங்களாக லண்டனில் வசித்து வந்த இவர் தாயாரைப் பார்க்க வருகை தந்திருந்த நிலையில்,அயலவர் ஒருவருக்கு கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது ஏற்பட்ட வாய் தர்க்கத்தினாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக